வெள்ளி, மார்ச் 25, 2011

தேர்தல் ஆணையம் வருக்காலங்கில் சொல்ல போகும் விதிகள்.

2011 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தினம், தினம் புதுசு புதுசாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தேர்தல் ஆணையம். வரும் காலங்களில் தேர்தலை முன்னிட்டு முக்கியமான அறிவிப்புகள். இதேபோல் இருக்க வாய்ப்பு உண்டு.

1. தேர்தல் முடியும் வரை யாரும் திருமணம் செய்துக்கொள்ள கூடாது. 

2. ஊருக்கு போகிற கணவன் மனைவி, பிள்ளையை அழைத்து சென்றால் அவர் தான் தனது மனைவி, பிள்ளை என்பதற்கான அடையாளத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.
3. தேர்தல் முடியும் வரை கணவன் - மனைவி இருவரும் உறவு வைத்துக்கொள்ளகூடாது.

4. அலுவலகம் செல்பவர்கள் மதியம் சாப்பிட உணவு கொண்டு சென்றால் நீங்கள் தான்  உண்ண போகிறிர்கள் என்பதற்கான ஆவணத்தை காட்ட வேண்டும்.

5. மளிகை பொருட்கள் வாங்கினால் அது உங்கள் குடும்பத்திற்காக தான் வாங்குகிறிர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

6. தேர்தல் முடியும் வரை யாரும் உறவுக்காரர்கள் வீட்டுக்கு போக கூடாது. 

7. தேர்தல் காலங்களில் தொலைக்காட்சியை யாரும் பார்க்க கூடாது. 

8. பிள்ளைகள் யாரும் பள்ளிக்கு போக கூடாது.

9. அரசியல் கட்சிகள் யார் யாருடன் கூட்டணி சேர வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் சொல்லும். 

10. கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட், யாருக்கு எந்த தொகுதி என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.

11. தேர்தல் செலவுக்கு ஆணையமே பணம் தரும். தேர்தல் முடிந்த பின் ராசி வட்டி போட்டு திருப்பி தர வேண்டும். 

12. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் முடியும் வரை யாரும் சைக்கிள், கார் போன்றவற்றில் போககூடாது. 

13.. வேட்பாளர்கள் யாரும் வீடு வீடாக போய் வாக்கு கேட்ககூடாது.

13. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஆணையமே சொல்லும்.

14. பொதுமக்கள், வேட்பாளர்கள் பாத்ரூம் போக வேண்டும் என்றால் தேர்தல் அதிகாாிகளிடம் அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் 3 வேலையும் என்ன உணவு வீட்டில் சமைக்கிறிர்கள் என்பதை தேர்தல் அதிகாாிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தொியபடுத்த வேண்டும்.

15. பொது மக்கள் யாருக்கு வாக்களிர்க்கிறார்கள் என்பதை வீடியோ எடுப்போம். 

16. தேர்தல் காலங்களில் காதலர்கள் யாரும் சேர்ந்து ஊர் சுற்ற கூடாது, செல்போனில் கடலை போடக்கூடாது, எஸ்.எம்.எஸ் அனுப்ப கூடாது. 

17. தேர்தல் முடியும் வரை சினிமா தியேட்டர்கள் முடியே இருக்க வேண்டும். செக்ஸ் படம் பார்க்க மட்டுமே அனுமதி. அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும். 

18. தேர்தல் முடிந்த பின் யார், யார்க்கு அமைச்சர் பதவி என்பதை ஆணையமே முடிவு செய்யும்.

19. வேட்பாளர்கள் தேர்தல் முடியும் வரை மனைவியுடன் நெருங்க கூடாது.  சின்னவீட்டில் ஜல்சா செய்ய தடையில்லை. 

20. வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க சிறப்பு படை அமைக்கப்படும். அதற்க்கும் அரசியல்வாதிகள் கவனிக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும். எங்கள் உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிடாது. தலையிடக்கூடாது. அப்படி தலையிட்டால் உச்சநீதிமன்றத்தை கலைக்கச்சொல்லுவோம் என அறிவிப்பு தருவார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக