திங்கள், ஜூலை 11, 2011

சுடாதிங்க...சுடாதிங்க...

உத்திரபிரசேத்தில் களமிறங்கியுள்ளார் காங்கிரஸ் சக்கரவர்த்தி ராகுல். உ.பியில் விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளார்கள். அம்மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூற அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறாறாம் இந்த சக்கரவர்த்தி. தேசிய தொலைக்காட்சிகள், தேசிய தினசரிகள் எல்லாம் ஆகா ஓஹோ என கூப்பாடு போடுகின்றன. மாயாவதி விவசாயிகளை நசுக்குகிறாறாம் திருவாய் மலர்ந்துள்ளார் ராசா வீட்டு கன்னுக்குட்டி.


அரசியல் அரிச்சுவடி தெரியாத இந்த சக்கரவர்த்தி கால் வைக்கும்மிடங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக போகிறது காங்கிரஸ் கட்சி. உம் தமிழ்நாடு, பீகார் என 6, 7 மாநிலங்களை சொல்லலாம். இப்போது உ.பிக்கு போய்வுள்ளார். எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு. விரைவில் உ.பியில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது.


அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வலிமையாக உள்ளதாம். காங்கிரஸ்சை மக்கள் விரும்புகிறார்களாம். அதனால் மற்ற கட்சிகள் டெப்பாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு இந்த தேர்தல் இருக்க வேண்டும்மென களம்மிறங்கியுள்ளார் சக்கரவர்த்தி.

இந்த சக்கரவர்த்தியின் சுற்றுப்பயணத்தில் யாரோ இவரை கொல்ல துப்பாகியுடன் வந்தார் என கைது செய்துள்ளது காவல்துறை. அய்யா சாமீகளா...... இந்த சக்கரவர்த்தியை கொல்ல துடிப்பவர்களே உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் கொஞ்சம் தயவு செய்து உங்களது அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த சக்கரவர்த்தி கால் வைக்கும்மிடங்கள் எல்லாம் காலி பெருங்காய டப்பாவாக மாறிக்கொண்டுயிருக்கிறது காங்கிரஸ். இந்த நேரத்தில் இவரை கொன்று சரிந்துக்கொண்டுயிருக்கும் காங்கிரஸ் செல்வாக்கை உயர்த்திவிடாதிர்கள். உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக