திங்கள், ஜூலை 11, 2011

திமுகவினர் பட்டாசு வெடிக்க வேண்டிய தருணம்.


உடன்பிறப்புகள் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டிய தருணம்மிது. திமுக என்ற ஆலமரத்தை கொண்டு வளர்ந்த சன் குரூப்பின் தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சி.பி.ஐ விசாரணையை எதிர்க்கொண்டு உள்ளார். அடுத்து சிறைக்கு செல்லவும் தயாராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


திமுக தலைவரின் மனசாட்சிக்கு மகன்களாக பிறந்து திமுக பிம்பத்தை பயன்படுத்தி வளர்ந்தனர். மனசாட்சியின் இழப்பை ஈடுகட்ட இளைய மகனை கட்சிக்குள் கொண்டு வந்து தேர்தல் களத்தில் விட்டபோது நடுநிலை உடன்பிறப்புகள் இதனை எதிர்த்து தகவல்களை தலைமைக்கு கொண்டு சென்றார்கள். மனசாட்சி போல் இருப்பார் என நம்பி பதவியும் பெற்றுதந்தார். திமுகவில் இருந்தபடியே பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு காங்கிரஸ்சோடு சேர்ந்து திமுகவை அழிக்க துணை போனார்கள் மாறன் பிரதர்ஸ்.


 
ஆனால் அவர்கள் தங்களது வியபாரபுத்தியை காட்டினார்கள். குடும்ப சண்டைக்காக கழகத்தையே அழிக்க துணிந்தார்கள். திமுகவின் நீண்ட கால துரோகியான காங்கிரஸ்சுடன் சேர்ந்தே அழிக்க திட்டமிட்டார்கள். தங்களது பண, மீடியா பலத்தை கொண்டு எதையும் சாதிக்கலாம் என எண்ணியவர்கள் இன்று அதுவே அவர்களுக்க எதிரியாகியுள்ளது.



அதன் முதல் கட்டமாக ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை ஊதி, ஊதி பெரிதாக்கினார்கள். இதற்க்கு காங்கிரஸ்சும், அம்பானி பிரதர்ஸ்சும் மறைமுகமாக பலப்பல உதவிகளை செய்தார்கள். தேசிய அளவில் பெரிய அவமானத்தை உருவாக்கி தந்தார்கள். முன்னால் மத்திய அமைச்சர் ராசா, எம்.பி கனிமொழி ஆகியோர் கைது செய்ய காரணமானவர்கள் காங்கிரஸ், பெரு முதலாளிகளான அம்பானி பிரதர்ஸ் இவர்களுடன் மாறன் பிரதர்ஸ். இதனால் திமுக ஆட்சியை இழந்தது. இப்போது காங்கிரஸ் மற்றும் அதன் பெரு முதலாளிகள் மாறனை கழட்டி விட தான் விரித்த வலையில் அவரும் சிக்கிக்கொண்டார்.



சன் நிர்வாகத்தை அழிக்க முடியாது என ஜம்பமடித்தவர்கள் மாறன் தரப்பினர். வல்லவனுக்கு வையகத்தில் உண்டு…………………. தமிழக முதல்வர் ஜெ, சன் பிக்சர்ஸ் நிர்வாகியும் கலாநிதிமாறனின் பால்ய நண்பருமான சக்சேனாவை கைது செய்து பெரிய ஆட்டம் காண வைத்தார். மத்திய காங்கிரஸ் அரசு, தயாநிதிமாறனை கழட்டி விட்டு அதிர்ச்சியை தந்தது. மாநில காவல்துறை கலாநிதிமாறனை குறிவைக்கிறது, சி.பி.ஐ தயாநிதியை குறிவைக்கிறது. ஆக சன் சரிவை நோக்கி வேகமாக செல்கிறது. அதை தடுத்து நிறுத்த பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள் இந்த பெரு முதலாளிகள். துரோகத்துக்கு துணை போகிறவர்கள் அதன் பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதை காலம் மாறன்களுக்கு உணர்த்தியிருக்கும் என நம்பலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக