செவ்வாய், ஜூலை 19, 2011

ரஜினிக்கு நேர்ந்தது அவமானமல்ல...............


சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி கடந்த மாதம் மேற்சிகிச்சைக்காக சிங்கப்புர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓரளவு உடல் நிலை சீரானதும் அவரது குடும்பத்தார் கடந்த 13ந்தேதி இரவு அவரை சென்னை அழைத்துவந்தனர். 

சிங்கப்புர் ஏர்லென்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டவரை விமானநிலைய அதிகாாிகளும், காவல்துறையினரும் கேவலப்படுத்திவிட்டார்கள், தொழிலதிபர்களுக்கு கூழை கும்பிடு போடும் அதிகார வர்க்கம் ரஜினியை கேவலப்படுத்திவிட்டார்கள், மத்திய அமைச்சர்களின் நண்பர், தமிழக முதல்வருக்கு வேண்டப்பட்டவர்க்கா இந்த அவமானம்  என ஒரு நாளிதாழ் என செய்தி வெளியிட்டுயிருந்தது. இதை பாடித்த போது அந்த நாளிதழ் மீது வெறுப்பு தான் வந்தது. 

தமிழ் சினிமாவின் ஒரு பொிய நடிகர் ரஜினிகாந்த். அதை மறுப்பத்திக்கில்லை. லட்ச கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். மக்களின் ஆதரவு ஒரளவு உள்ளது.  அதை தவிர்த்து அவருக்கு வேறு என்ன தகுதியிருக்கிறது?. அவர் என்ன இந்திய விடுதலைக்காக பாடுபட்டவரா?, ஈழ மக்களுக்காக ரத்தம் சிந்தியவரா-போராடியவரா?, தமிழக மக்களின் உாிமைக்காக குரல் கொடுத்தவரா?, தமிழகத்தில் நிலவும் சாதி பிரச்சனைக்காக போராடி சிறை சென்றவரா?, 1000ம் பேரை வாழ வைக்கும் தொழிலதிபரா?, அரசியல் தலைவரா?, அமைச்சரா?,   எந்த அடிப்படையில் சிறப்பு சலுகை காட்ட வேண்டும் என எண்ணுகிறிர்கள்..........

தமிழ்மக்களின் ஆதரவு பெற்றவர் என்ற ஒன்று போதுமா? தமிழ் மக்களின் ஆதரவு அவர் மட்டுமா பெற்றுள்ளார் கமல் முதல் இப்போது நடிக்க வந்துள்ள சந்தானம் வரை தான் அவர்களது நடிப்பை மக்கள் ரசிக்கிறார்கள். அவர்களுக்கென ரசிகர்கள் ஊருக்கு ஊர் மன்றம் திறக்கிறார்கள். அதற்காக அவர்களுக்காக சிறப்பு சலுகைகள் தர வேண்டுமா என்ன? 


மத்தியமைச்சர்கள் வயலார் ரவி, சிதம்பரத்துக்கு நண்பர் என்பதால்  ரஜினிக்கு சிறப்பு சலுகை காட்ட வேண்டும் என கேட்பது முட்டாள் தனமானது. போலிஸ் சிடம் பாதுகாப்பு கேட்டால் தான் தரவேண்டுமே தவிர. ஒரு பிரபல நடிகர் அவரது வாழ்விடத்திற்க்கு வருகிறார் என்பதற்காக உளவுத்துறை கண்காணித்து பாதுகாப்பு தர வேண்டும் என்ற அவசியம்மில்லை. சட்டம் என்பது எல்லாருக்கும் ஒன்று தான்.

இந்தியாவின் முதல் குடிமகனாக போற்றப்படும் குடியரசுத்தலைவர் ஒருவர் அமொிக்கா சென்ற போது தடுத்து நிறுத்தி சோதனை செய்தபின்பே அனுப்பினார்கள். இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக ஜார்ஜ்பெர்ணான்டஸ் இருந்த போது நிர்வாணமாக்கி சோதனை செய்தார்கள். இப்படி பலப்பல மக்கள் பிரதிநிதிகள் சோதனைக்கு ஆளாகியுள்ளார்கள் மேலை நாடுகளில். நம் நாடு எதிர்ப்பு காட்டும்போது அவர்கள் கூறும் காரணம் , முறைப்படி எங்களுக்கு தொியப்படுத்தினால் வி.வி.ஐ.பிகளுக்கான சோதனை நடைபெறும் இல்லையேல் இப்படித்தான் நடைபெறும் என்றார்கள்.

அதேபோல் தான் இதுவும் . மருத்துவம் பார்க்க வெளிநாடு சென்றார். திரும்பி வருகிறார். அவர் திரும்பி வரும் தகவலை ரசிகர்களுக்கு கசிய விட்ட அவரது குடும்பம் காவல்துறைக்கும், விமானநிலையத்துக்கும் அறிவித்திருந்தால் ஒரளவு ஏதாவது ஏற்பாடு செய்திருப்பார்கள். அதை விட்டுவிட்டு தொழிலதிபர்களுக்கு கூழை கும்பிடு போடுகிறார்கள் அதிகார வர்க்கத்தினர் என்கிறார்கள். அவர்கள் கூழை கும்பிடு போடுவது அறிந்ததுதான். அதோடு அந்த தொழிலதிபர்கள் சொந்தமாக விமானம் வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு சிறப்பு அனுமதியை அரசாங்கமே வழங்கியுள்ளது. விமான நிலையத்தில் பிரதமர், முதல்வர் செல்லும் வழியில் செல்ல அவர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதோடு கோடி கணக்கி்ல்  கொள்ளையடித்தாலும் கொஞ்சமாவுது வருமானவாி என ஒன்றை கட்டுகிறார்கள். இந்தியாவுக்கு இந்த தொழிலதிபர்களால் வருமானம் வருகிறது. 

ரஜினியால் என்ன வருகிறது ? அவர் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தினால் சட்டப்படி தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என அறிவித்தவர் தான் லதாரஜினிகாந்த். ஏன் தமிழக மக்களுக்கு அந்த உாிமையில்லையா?, அவரை வாழ வைத்தது தமிழகமும், தமிழக மக்களும் தான். அதையே மறந்தவர்கள் தான் ரஜினியும் அவரது குடும்பத்தாரும்.

இவருக்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும் என கேட்பவர்கள் அதற்காக முறைப்படி தொிவித்தோ இல்லையென்றால்  தனியார் பாதுகாப்பை நாடிக்கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு ரஜினியை கண்காணித்து சலுகைகள் செய்திருக்க வேண்டாமா என கேட்பது அநியாயம். 



1 கருத்து:

  1. உங்கள் கருத்தோடு நான் நூறு சதம் ஒத்துப் போகிறேன் நண்பரே... அருமையாக எழுதி உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு