வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

உலகம் பதிய மறுக்கும் இந்தியாவின் மனித மிருகங்கள்……...


காட்டில் வாழும் விலங்குள் தங்களது பசிக்காக மட்டுமே வேட்டையாடும். சும்மா பொழுது போகவில்லை என்றோ, தன்னுடன் காட்டில் வாழும் மற்றொரு மிருகம் மீது குரோதத்தை ஏற்படுத்திக்கொண்டோ, தன் அதிகாரத்தை காட்டவோ சண்டைக்கு போகாது, அவைகளை கொல்லவும் செய்யாது. ஐந்தறிவுள்ள மிருகமே சரியாக வாழ்கிறது. ஆறறிவு கொண்ட எல்லாவற்றையும் அறிந்தவன் என பீற்றிக்கொள்ளும் மனிதன் தன் சக மனிதனை கொல்வதும், கொத்து கொத்தாக படுகொலை செய்வதுமாக உள்ளான்.

இதை சாதாரணமானவன் செய்தால் தெரியாமல் செய்த கொலை எனலாம், அதிகார போதையில், உலகத்தில் தான் தனித்து தெரியவேண்டும்மென்றும், மத காரணங்களை காட்டியும் மக்களை கொத்து கொத்தாக கொன்ற பல மனித மிருகங்கள் உலக பூமி பந்தில் வாழ்ந்தனர். வாழ்கின்றனர்.

அவர்கள் ஹிட்லர், முசோலினி, இடிஅமின், ஒசாமாபின்லேடன், இராஜபக்சே என வரலாற்று பக்கங்கள் கூறுகின்றன. அந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவா முன்னால் இந்திய பிரதமர் இராஜிவ்காந்தி, அவரது மனைவி சோனியாகாந்தி. தெற்காசிய கண்டத்தில் தன்னை முடிசூடா மன்னராக வேண்டும் என்ற காரணத்திற்காக இலங்கை நாட்டில் தன்மானத்திற்காக, சுதந்திரத்திற்காக போராடிய மக்களுக்கு எதிராகயிருந்து அவர்களை அழிக்க முழு முதல் காரணமாக இருந்தவர் இந்த இராஜிவ்காந்தி.

89ல் அமைதிப்படை என்ற சாத்தான்படையை இலங்கை மண்ணுக்கு அனுப்பி தமிழர்களுக்காக உண்மையாக போராடிய விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களுக்கு ஆதராவாக இருந்தவர்கள் என தமிழர்களை அழிக்க ஆணையிட்டார். சாத்தான் வேதம் ஓத அதிகார போதையில் இருப்பவர்களின் அடிமைகளான இந்திய ராணுவத்தினர் ஈழத்தில் நடத்திய கோரதாண்டவத்தையும், இந்திய ராணுவத்தினர் வீரத்தை கேட்டால் அகிம்சையின் நாயகன் என உலகம் கொண்டாடும் காந்தியே துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட்டுயிருப்பார்.

ஈழ பூமியில் பலநூறு இளம் பெண்டிர் கன்னிக்கழிக்கப்பட்டனர், பிறந்த பிள்ளைகள் பால் குடிக்கும் மார்பில் மாண்புமிகு இந்திய வீரர்கள் கடித்து குதறினார்கள், சின்னஞ்சிறு பிள்ளைகளையும் சுட்டுக்கொன்றனர். காட்டி தரும் கயவர்கள் எல்லா இனத்திலும் உண்டு. அப்படிப்பட்ட தமிழ் பேடிகளை உடன் வைத்துக்கொண்டு வீர தமிழ் ஆண்மகன்களை ஈவு இரக்கம்மில்லாமல் விசாரணையின்றி சுட்டுக்கொன்றார்கள். உலகில் காக்கைக்கு குரல் கொடுக்ககூட ஆள்யிருந்தது. அநாதைகளான தமிழர்களுக்கு தான் உலகில் குரல்கொடுக்க யாரும்மில்லை.

10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களை கொன்ற அமைதிப்படை அரசியல் காரணங்களால் தோல்வியோடு ஈழ மண்ணை விட்டு கிளம்பியது. ஆனால் அவர்களால் ஏற்பட்ட காயம் மக்களின் மனதில் வடுக்களானதோடு ஈழ மண்ணில் உரமாக வீசப்பட்டன. அந்த உரத்தை உண்டு எழுந்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே காரணகர்த்தாவை தமிழக மண்ணில் மனித வெடிகுண்டாக வந்து சின்னாபின்னமாக்கினார்கள்.

ஊழலின் நாயகன், மனித ரத்தத்தை உறிஞ்சிய அந்த கொடூரனை வரலாற்று பக்கத்தில் மனித மிருகம் என பதிவு செய்திருக்க வேண்டும். அவரை கொன்றவர்களுக்கு உலக மக்கள் சிலை வைத்திருக்க வேண்டும் வைக்கவில்லை. காரணம், ஈழ தமிழர்களின் குரலை அந்த மண்ணை விட்டு போகாமல் பார்த்துக்கொண்டார்கள். அதனால் அவரை புகழ்கிறார்கள். அதற்க்கு காரணம், அதே குடும்பத்தின் ஆட்சிதான் தற்போதும் இந்தியாவை ஆள்கிறது. மனித பேயின் மனைவி தான் இந்தியாவை ஆட்டுவிக்கிறார், அவரது மகன்னிடத்தில் தான் சாட்டையுள்ளது. ரத்தம் குடிக்கும் வேலையை அன்று அவர் செய்தார். இன்று அவரின் மனைவியும், மகனும் செய்கிறார்கள்.


மனித பேயை கொன்றதால் கொன்றவர்களை பழி வாங்குகிறேன் என பிசாசுகள் புறப்பட்டது. ஈழ மண்ணில் மனித ரத்தம் குடிக்க ஆயுதங்களை வாரி வழங்கி பேயை கொன்ற சமுகத்தை கொத்து கொத்தாய் அழிக்கப்பட்டதை கேட்டு ரசித்தது பிசாசுகள். ஒரு லட்சம் பேரை கொன்று ரத்தம் பார்த்தும் ஆத்திரம் அடங்காமல் தன் கணவரை கொன்றவர்களுக்கு உதவி செய்தவர்களாய் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருபவர்களின் உயிர்களை தூக்கு தண்டனை மூலம் பறிக்க முடிவு செய்துள்ளது இந்த பிசாசு.

வரலாற்றின் கறுப்பு பக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் இந்தியாவின் பட்டு கம்பளத்தில் இருக்கிறார்கள்.

1 கருத்து: