வெள்ளி, நவம்பர் 15, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது யாருக்காக ?.



இலங்கையில் உள்ள ஈழப்பகுதியில் 2009ல் தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நடந்த இன சுத்திகரிப்பில் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என சுமார் 1 லட்சம் பேர் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையை செய்தது இலங்கை சிங்கள இராணுவ இனவாத அரசாங்கம். போர் முடிவுக்கு பின் கம்பி வேலிக்குள் தமிழ் மக்களின் வாழ்வு முள் கம்பிகளுக்குள் சிக்கி நிர்முலமாக்கப்பட்டது. இனி ஒரு போராட்டம் இந்த மண்ணில் எழக்கூடாது என்ற அச்சத்தில் மக்கள் கூடும், மக்களை ஒண்றிணைக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களை சுவடில்லாமல் அழித்தனர் இராணுவத்தினர். 

ஈழத்தில் அனைத்தும் அடக்கப்பட்டது. ஈழ அரசியல் தான் தமிழக அரசியலில் பலரை வாழ வைத்து வருகிறது. அதனால் ஈழ துயரத்தை தமிழகத்தில் நிறுவ முயன்றார்கள் தமிழ் தேசியவாதிகள். முள்ளிவாய்க்கால் துயரம் வரலாற்றில் பதிய வேண்டும். தமிழகத்தில் அதற்காக ஒரு நினைவு சின்னம் தமிழர்களின் உதவியோடு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார் நெடுமாறன். 

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு தமிழகத்தில் நினைவு சின்னம் எழுப்பி தமிழக அரசியல் களத்தை அங்கிருந்து சுற்ற வைக்க வேண்டும், அரசியல் செய்ய வேண்டும் என ஆசைப்பட்ட பெரியவர் தஞ்சையில் நடராஜன் ஊருக்கு அருகே அந்த முற்றத்தை கட்டினார். ஜெவின் உற்ற தோழி சசிகலாவின் கணவர் நடராஜனால் தரப்பட்ட நிலத்தில், பணத்தில் கட்டப்பட்ட முற்றத்தை திறந்து வைக்க கொள்ளை புறம் வழியாக ஜெவிடம் தூதுவிட்டு, நீங்கத்தான் வந்து முற்றத்தை திறந்து வைக்கனும் என கேட்டுள்ளார் இந்த பெரியவர். 

ஈழ எதிர்ப்பு என்ற கொள்கையில் உறுதிக்கொண்ட கொண்டைக்காரி எந்த பதிலும் சொல்லவில்லை. காத்திருந்து காத்திருந்து கால் வலித்தபோது முட்டிபோட்டுக்கொண்டு காத்திருந்துள்ளார் இந்த பெரியவர். முட்டி போட்டும் பதில் வரவில்லை. இந்த முற்றத்தை திறந்தால் ஒரு பெரிய அரசியல் விளையாட நினைத்தார் பெரியவர். ஆனால் கொண்டைக்காரி எந்த பதிலும் சொல்லவில்லை. முற்றத்தை திறக்கவும் அனுமதிக்கவில்லை. நீதிமன்றம் உத்தரவால் முற்றத்தை அவரச கோலத்தில் யாருக்கும் தெரியாமல் திறந்தார் பெரியவர். தடை ஏற்படுத்திய கொண்டைக்காரி பற்றி எதுவும் பேசவில்லை. 

நீதிமன்றம் அனுமதித்ததால் நான் அனுமதித்துவிடுவேனா என பாய்ந்துள்ளார் கொண்டைக்காரி. ஆக்ரமிப்பு என்ற காரணத்தை சொல்லி விடிந்தும் விடியாத காலை பொழுதில் அதிகாரத்தின் கால்களை கொண்டு இடித்து தள்ளி முற்றத்தை  மூலிக்கியுள்ளார். நினைக்க நினைக்க கோபம் வரத்தான் செய்கிறது. அப்படி செய்யவில்லையென்றால் தான் நாம் ஜெவை பாராட்ட வேண்டும். 

ஆக்ரமிப்பை அகற்ற வேண்டுமென தேசிய நெடுஞ்சாலை துறை புகார் தந்தது. அதனால் மாநில காவல்துறை பாதுகாப்போடு மாவட்ட நிர்வாகம் இடித்தது. இதற்கும் ஈழத்தாய்க்கும் சம்மந்தம்மில்லை என இப்போதும் கூஜா தூக்கிக்கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள் விசுவாசிகள். ஜெ எந்த காலத்திலும் ஈழ நலனுக்காக பேசியதுயில்லை என்பதை அறிந்தும் தங்களது சுய அரசியல் லாபத்துக்hக அவரின் காலடியில் மண்டியிட்டன பெரியவர் உட்பட பல தமிழ் தேசியம் இயக்கத்தினர். எந்த இடத்திலும், எந்த காலத்திலும் தனி ஈழம் ஆதரவு என்ற நிலைப்பாட்டை ஜெ எடுத்ததில்லை. விடுதலைப்புலிகளை அவர் எப்போதும் ஏற்றுக்கொண்டதும்மில்லை. எல்லா காலத்திலும் வன்மத்தை கக்கிதான் உள்ளார். ஈழத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு முரட்டு பிடிவாத கொள்கையில் உள்ளார். ஆனால் அவரது ஆஸ்தான தளபதிகளான பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், தமிழருவி மணியன், தா.பாண்டியன் போன்றோர் கொண்டைக்காரி ஈழத்தை பற்றி காறி துப்பி பேசினாலும் அவர்கள் அனைவரும் கருணாநிதி அன்று அதை செய்யவில்லையா என ஜெ செய்வதை மழுங்கடிக்கும் அரசியல் செய்து ஜெவை ஈழ கடவுளாக சித்தரிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

ஈழத்தில் நடந்த படுகொலைக்கு தமிழகத்தில் நினைவு சின்னம் ஏன் அமைக்க வேண்டும் என கேட்டவர்களிடம், ஈழத்தில் அமைக்க முடியாது அதனால் இங்கு அமைக்கப்படுகிறது என பதில் சொல்லப்பட்டது. 


உண்மையில் அது காரணமா என்றால் இல்லை. தமிழகத்தில் முற்றம் அமைப்பதற்க்கு பின்னால் நுணுக்கமான அரசியல் உள்ளது. முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு காரணமான ராஜபக்சேவை விட தமிழகத்தில் உள்ள திமுக மீதும், மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். குற்றச்சாட்டுகளை மறுப்பதற்க்கில்லை. ஆனால் அதில் பல அபத்தமான குற்றச்சாட்டுகள் உள்ளன. மக்கள் மனதில் ஈழ தோல்விக்கு காரணம், திமுக, கருணாநிதி குடும்பம், காங்கிரஸ், சோனியாகாந்தி என குற்றம் சாட்டி அதில் கலைஞர் கருணாநிதியை ஈழத்துக்கு எதிரானவராக சித்தரித்து வெற்றி பெற்றுள்ளார்கள் பெரியவர் நெடுமாறன், வை.கோ, சீமான், தமிழ்தேசியவாதிகள் உட்பட பலர். அதை தக்க வைக்க வேண்டும் என்ன செய்யலாம். தமிழகத்தில் முற்றம் என்ற ஒன்றை அமைத்து ஆண்டுக்கு ஒருமுறை மக்களை அங்கு திரட்டி ஈழ துரோகி கருணாநிதி என முழங்க வேண்டும் என்ற ஆசையே தமிழகத்தில் முற்றம் அமைக்க காரணம். 

இதன்பின்னால் மற்றொரு மறைமுக அரசியலும் உள்ளது. அது சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு முக்கியத்துவம் தருவது. எதனால் அவருக்கு முக்கியத்துவம்?. ஜெ வுக்கு பின் அதிமுகவின் நிலை கேள்விக்குறி. அதிமுகவை வழி நடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்து நீண்ட காலமாகிவிட்டது. அந்த கேள்விக்கு பதில் நாங்கள் இருக்கிறோம் என்பதை தொண்டர்களுக்கு உணர்த்த விரும்பினாhர் நடராஜன். இதனை மோப்பம் பிடித்ததால் நடராஜனை டம்மியாக்குகிறார் ஜெ. நடராஜனின் ஈழ அரசியல் எதற்கு என்பதை அறிந்தே அதனை தடுக்க ஆரம்பத்தில் இருந்து முயற்சி செய்கிறார். இது நடராஜனுக்கும் தெரியும், நெடுமாறன் அவர்களுக்கும் தெரியும். தடைகளை தாண்டுவதில் விக்ரமாதித்தனாக உள்ளார் நடராஜன். 


ஜெ வுக்கு பின் யார் அதிமுகவை வழி நடத்துவது என்ற பிரச்சனை வரும் போது தனக்கு பக்கபலமாக பலர் இருக்க வேண்டும் என எண்ணுகிறார் நடராஜன். அதனால் தான் ஈழத்துக்கு ஓடி வந்து உதவுகிறார். உதவிக்கு காரணம் நடராஜனிடம் உள்ள ஈழ பாசம் என்றால் அது நகைப்புக்குரியது. 

முற்றம் அமைக்கப்பட்டது நடராஜனின் சொந்த ஊரான விளாரில். முற்றம் கட்டுவதற்க்கு 90 சதவித பணத்தை நடராஜன் தந்துள்ளார். 

முற்றத்தில் ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் உணர்வாளர்களை அழைத்து கூட்டம் போட்டு கருணாநிதியை வசைப்பாடி நடராஜனை புரமோட் செய்வதே நெடுமாறன் உட்பட பலரின் எண்ணம். இதன் வழியாக நடராஜனுக்கு ஒரு பெரிய அரசியல் அங்கீகாரம் தர வைப்பது. அதிமுகவை தங்கள் வசப்படுத்துவது. இதை நோக்கி காய் நகர்த்துகிறார். இதற்க்கு நெடுமாறன் உதவுகிறார். 

நடராஜன் வளர்ச்சி ஈழ பினத்தை வைத்து வளர்க்கப்படுகிறது. வாழ்க உங்கள் ஈழ பாசம். 

2 கருத்துகள்:

  1. இவ்வளவு மோசமாக உள்ளார்களே. இதில் வை கோ நிலை என்ன ஆகும் . அவரும் முதலமைச்சர் பதவி மீது தீராத ஆசை கொண்டவரே .(தகுதி உள்ளவரே)

    பதிலளிநீக்கு