திங்கள், டிசம்பர் 12, 2011

தமிழனுக்காக வராத ரஜினி வாய்ஸ்.



நடிகர் ரஜினிகாந்த் 62வது பிறந்தநாளை கொண்டாடி முடித்துவிட்டார். நானும் அவரது பிறந்தநாளன்னு ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தேன். ரஜினி அவர்கள், முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளா காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து அறிக்கை விடுவார் என்று. ஆனால் ஒன்றையும் காணோம். (மதுரையில் அவரது ரசிகர் மன்றம் கண்டித்துள்ளது). சினிமா நடிகனிடம் அரசியல் எதிர்பார்க்ககூடாது என நடுநிலையாளர்கள் என்பவர்கள் கூறிக்கொள்ளலாம். 

கேரளாவில் சினிமா உலகம் உள்ளது. முல்லை பெரியார் பிரச்சனை ஆரம்பமானதும் மெழுகு வர்த்தி ஏந்தி தங்களது கண்டனத்தை ஒட்டு மொத்த சினிமா உலகமே திரண்டு வந்து காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தந்து அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தமிழர்களில் ஒருவனான நான் தமிழனுக்கு ஆதரவு வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமே. 

தமிழகத்தில் வாழ வந்த கன்னடர் ரஜினி. ரஜினியின் வாலிப வயதில் கன்னட அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து தமிழகத்திற்க்கு எதிராக போராட்டம் நடத்தியவர் என்ற விவகாரம் வந்த போது தமிழகத்தில் ரஜினி பெரிய நடிகர். முக்கள் அவரை புறக்கணிக்கவில்லை. அவரை தமிழராகவே ஏற்றுக்கொண்டாடி வருகின்றனர். 

இன்று தமிழகமே கொதித்துக்கொண்டுள்ளது. தென்தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கேரளா ‘கை’ வைக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது. இதையொல்லாம் அறிந்தும் மவுனசாமியராக உள்ளார் ரஜினி. தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியபோது ஏற்றுக்கொண்ட ரஜினியால் கேரளா அரசியல்வாதிகளை கண்டித்து ஒரு சின்ன அறிக்கை கூட தரமுடியவில்லையே ஏன்?. 

இது ரஜினிக்கு மட்டுமான கேள்வியல்ல. தமிழ் சினிமாத்துறையை பார்த்து கேட்கப்படும் கேள்வி கேட்கறோம். தமிழ் திரையுலகில் தமிழனை மட்டுமல்ல கன்னடர், தெலுங்கர், மலையாளி, பெங்காலி, இந்திக்காரர் என யார் வந்தாலும் அந்த மாநிலத்துடன் எந்த பிரச்சனை இருந்தாலும் பரவாயில்லை இவர்கள் நம்மை நம்பி வந்தவர்கள் என கை தட்டி வரவேற்று கொண்டாடுகிறோம். அப்படி வரவேற்று உங்களை உச்சாணி கொம்பில் உட்கார வைக்கும் எங்க மண்ணுக்கு, எங்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளீர்கள். சம்பாதிப்பதை கூட கொண்டும் போய் உங்கள் மாநிலத்தில் தான் சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள்.  அதைப்பற்றி நாங்கள் இதுவரை கேட்டோமா?.

இன்று எங்களுக்கு ஒரு பிரச்சனை உங்களிடம்மிருந்து ஒரு தார்மீக ஆதரவை எதிர்பார்க்கிறோம். அதைக்கூட செய்ய மனம்மில்லாத நீங்கள் நன்றி கெட்டவர்கள் தானே. கோடி கோடியாய் சம்பாதிக்க தமிழன் வேண்டும், தன் படம் வேறு மாநிலத்தில் கல்லா கட்ட அவர்களின் ஆதரவு வேண்டும் என உங்களை வாழ வைக்கும் தமிழனின் முதுகில் குத்துகிறீர்களே இது நியாயமா?, நீங்கள் செய்வது துரோகமில்லையா?. 


அவர்களை விடுங்கள் நான் தமிழன் என பீற்றிக்கெண்டு நாளைய முதல்வன் நானே என சினிமாவில் வசனம் பேசும், சரத்குமார், விஜய் உட்பட எந்த தமிழகத்தை சேர்ந்த நடிகரிடம்மிருந்தும் தமிழனுக்கு ஆதரவு வரவில்லை என்பது அதைவிட கேவலமாகயிருக்கிறது. 

இந்த நடிகர்கள் அனைவருமே பணப்பொறுக்கிகள் என்பதை இன்று வரை நிருபித்துள்ளார்கள். என்று தமிழன் நடிகனின் பின்னாலும், நடிகையின் பின்னாலும் ஒடுவதை நிறுத்துகிறானோ அன்று தான் தமிழகம் உருப்படும். 

அடிக்கு அடி.


கர்நாடகா அரசியல்வாதிகள் காவேரியையும், ஆந்திரா அரசியல்வாதிகள் பாலாறையம் வைத்து அரசியல் செய்து வந்த நிலையில் நான் மட்டும் சும்மாயிருப்பேனா என களத்தில் இறங்கியுள்ளார்கள் கேரளா அரசியல்வாதிகள். முல்லை பெரியார் அணை என்பது தமிழக எல்லையில் கட்டப்பட்டது. நீர் உருவாகும் இடமும் தமிழகத்தில் தான் உள்ளது. நீர் தேக்கி வைக்கப்படும் பகுதி மட்டுமே கேரள பகுதியில் உள்ளது. அதேபோல் பெரியார் அணை கட்டப்பட்டதும் தமிழக விவசாயிகளுக்காக தான். இந்தியாவை ஆண்ட பிரிட்டீஸ் அரசாங்கத்தின்  பொறியாளரான பென்னிகுக் என்பவர் அரசு பணத்தோடு தனது சொத்தை விற்று அந்த பணத்தை கொண்டு அந்த அணையை கட்டி தந்தார்.

நூற்நாண்டை கடந்த இந்த அணை தான் விரிசல் விழுந்துவிட்டது, உடையபோகிறது, மக்கள் இறக்கபோகிறார்கள் என்ற வதந்தியை 1980க்கு பின் கிளப்பிவிட தொடங்கியது கேரள அரசாங்கம். உச்சநீதிமன்றம் வரை சென்றது தமிழகம். அணை பாதுகாப்பாக உள்ளது. 152 அடி வரை நீர் தேக்கிக்கொள்ளலாம் என அறிவித்தது உச்சநீதிமன்றம். அதை எதையும் கேரளா அரசாங்கம் மதிக்கவில்லை. கேரளா அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆபத்து ஆபத்து என குதித்து வருகின்றன.

கேரளா எல்லையில் உள்ள தமிழர்களை, தமிழர்களின் கடைகளை அடித்து உடைத்து தீ வைத்தனர். பெண்களிடம் வக்கிரமாக நடந்துகொள்ள முயல பாதிக்கப்பட்டவர்கள் கேரளா காவல்துறையிடம் புகார் தந்தபோது வாங்க மறுத்துள்ளனர்;. இதற்க்கு முன்பு வரை கர்நாடகாகாரனும், ஆந்திராக்காரனும் குட்ட குட்ட குனிந்து கொண்டுயிருந்த தமிழகம் இன்று கேரளாவின் அத்துமீறலால் கொதிக்க தொடங்கிவிட்டது. காரணம், பெரியாறு அணை நீர் தென்மாவட்டங்களுக்கு உயிர். கேரளாவுக்கு அது மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படப்போகிறது. ஆனால் தமிழகத்தை அழிக்க துணிபவர்களை கண்டு கொதித்து போன தமிழன் நீ அடித்தால் நானும் அடிப்பேன் என புறப்பட்டுவிட்டான். தமிழகத்தில் பல மலையாள கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கேரளாவுக்கு அனுப்பவேண்டிய அத்தியாவாசிய பொருட்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. உடனே தமிழக அரசு வன்முறை, இந்திய இறையான்மைக்கு ஆபத்து எனச்சொல்லி கைது செய்கிறது.

அவன் அங்கு செய்தால் தியாகம், போராட்டம் நாம் இங்கு செய்தால் வன்முறையாம். என் இன பெண்களை கற்பழிக்க முயலுவான், அடிப்பான், தீ வைப்பான் அதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டும். அந்த மாநிலத்தான் இங்கு சொகுசாக வாழ்வான். இது எந்தவூர் நியாயம். அவனுக்கு அவன் மொழியிலேயே பதில் தந்தால் தான் புரிந்துகொள்வான். இதை ஆரம்பித்து வைத்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு பதில் தருவோம். அவர்களுக்கு மட்டுமல்ல இனி கர்நாடகாகாரனும், ஆந்திராக்காரன் எடுக்கும் அதே ஆயுதத்தை நாமும் எடுப்போம். அப்போது தெரியும் உண்மை நிலை என்னவென்று.


அடிக்கு அடி பிரச்சனையை தீர்க்காது என்பது தெரியும். பேசினால் கேட்டுக்கொள்பவனாக இருந்தால் பேசலாம். கேட்கவே மாட்டேன் என்பவர்களிடம் எதற்காக பேச வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நாமும் திருப்பி செய்வோம். அவர்கள் அடித்துக்கொண்டு செத்து மடியட்டும் என காத்திருக்கும் மத்தியரசு நம்மை ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவர்கள் தற்போதைய நிலையை விட அதிகமாக நம்மை புறக்கணிக்கட்டும் நாம் தனித்து செயல்படுவோம், தனிநாடாக உருவெடுப்போம்.

வெள்ளி, டிசம்பர் 02, 2011

காம தேடலில் கண்ணாமூச்சி.


வித்தியாசத்துக்கு பேர்போனவர்கள் மேற்கத்திய நாட்டினர். தொட்டதுக்கெல்லாம் வழக்கு போடுபவர்கள் ஆனால் தொடாததை குத்தம் சொல்லி ஒரு பெண்மணி வழக்கு போட்டுள்ளார். பிரான்ஸ் நைஸ் நகரை சேர்ந்தவர்கள் அத்தம்பதியினர். 1986ல் கல்யாணமாகி 2 குழந்தைகள் பெற்றவர்கள். 2009ஆம் ஆண்டு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து வாங்கிவிட்டார். விவகாரத்து ஆன சிலமாதங்கள் பொருத்து, என் கணவருடன் நான் சேர்ந்து வாழும் போது என் மனநிலையை புரிந்து என்னுடன் அவர் சந்தோஷமாகயில்லை, செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை. அதனால் மனஅழுத்தம் ஏற்பட்டுவிட்டது என வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நடந்தது, பணிச்சூழல், டென்ஷன் போன்றவற்றால் அவருடன் சரியாக தொடர்ந்து செக்ஸ் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றார் கணவர். இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கல்யாணத்திற்க்கு பின், தம்பதிகள் மனம் ஒத்துவாழ வேண்டும். கணவன் மனைவி இருவரும் தங்களது உடல் தேவைகளை புரிந்து மற்றவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டியது கடமை என தீர்ப்பளித்ததோடு மனைவியின் தேவையை பூர்த்தி செய்யாத அந்த முன்னால் கணவருக்கு 7 லட்சம் அபராதம் விதித்துள்ளது கோர்ட்.

அதேபோல் இன்னோரு மேற்கத்திய நாடான ஆஸ்த்திரியாவின் வியன்னா நகரில் செக்ஸ்சை கற்று தர உலகின் முதல் கல்வி கூடத்தை யுவாமரியா தாம்சன் என்ற பெண்மணி திறந்துள்ளார். இருபாலருக்குமான இந்த கல்விக்கூடத்தில் பாலியல் பாடத்தில் வெற்றி பெறுவது எப்படி என்பதை கற்று தரப்போகிறார்களாம். இங்கு பாடபுத்தகம் மட்டுமல்லாமல், பிராக்டிக்கல் பாடமும் உண்டு. இங்கு சேர 16வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். வீட்டு பாடமும் உண்டு. ஆனால் வீட்டுக்கு செல்ல முடியாது. இரவிலும் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்பதே முக்கியவிதி. பாடத்துக்கு பீஸ் 1.5 லட்சம் தான். எக்ஸாமில் பாலியல் கல்வியை பற்றி சிறப்பாக தேர்வு செய்தால் திறமையானவர் என்ற சான்றிதழ் உண்டு. பள்ளியை தொடங்கிய பெண்மணி, பள்ளியில் சேருபவர்களை பாலியலில் சிறந்த மனிதராக உருவாக்க வேண்டுமே என்பதே தலயாய லட்சியம் என்றுள்ளார். 

முதலில் குறிப்பிட்ட வழக்கை போல ஒரு வழக்கு இந்தியாவில் தொடுத்தால் ஏற்றுக்கொள்வார்களா?, இந்தியாவில் கலவி கல்விக்கூடம் யாராவது தொடங்கினால் என்ன நடக்கும் என யோசித்தபோது மலைப்பாக இருந்தது.

கலவி என்பது இந்தியாவில் தீண்டதகாத வார்த்தையாகி பேசுவதும், எழுதுவதும் மாபெரும் குற்றம். அதிலும் செக்ஸ் பற்றி ஒருபெண் எழுதிவிட்டால் உலகமே அழிந்துவிடும் என்பதை போல் விமர்ச்சிக்கப்படுகிறது. இதனை நேர்மையுடன் நோக்கினால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மனதிலும் காமம் உண்டு. அது இல்லாதவர்கள் ஜடம். காமத்தை இருபாலருமே வயது வித்தியாசமின்றி சிலர், நண்பர்கள் மத்தியில் வெளிப்படையாக பேசுவார்கள். பலர் யாரிடமும் அதைப்பற்றி பேசுவதில்லை. காரணம் மற்றவர்கள் எங்கே தன்னை தப்பாக புரிந்துக்கொள்வார்களோ என்ற பயம்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் கள்ளக்காதல் அதிகமானதற்க்கு காரணம், தம்பதிகள் தங்களது காம ஆசையை தங்களுக்குள் பகிர்ந்துக்கொள்வதில்லை. பெரும்பாலான ஆண்கள். துணையின் தேவையை புரிந்துக்கொள்வதில்லை. இயற்கையாகவே ஆண்களை விட பெண்களுக்கு காம உணர்ச்சி அதிகம். அவர்களை திருப்தி செய்ய உறவின்போது கால தாமதமாகும். இதை ஆணாதிக்க மனம் கொண்ட ஆண்கள் புரிந்துக்கொள்வதில்லை. இதனால் 90 சதவித ஆண்கள் தன் ‘தேவை’ நிறைவேறியதும் குறட்டை விட தொடங்கிவிடுகிறான். இது பெண்களை மனரீதியாகவும். உடல் ரீதியாகவும் வேதனை அடைய செய்கின்றன.

அதேபோல் இன்றைய நவீன யுகத்தில் பெண்களும், அடிக்கடி உறவு கொண்டால் உடல் பருத்துவிடும், அழகு கெட்டு விடும், மந்தாரங்கள் பொலிவிழந்துவிடும் என ஆசையுடன் கணவன் நெருங்கிவரும் போது தவிர்த்து விடுகின்றனர். ஆண்களின் காம தேவைகளை பெண்களும் சில நேரங்களில் புரிந்துக்கொள்வதில்லை.

இப்படி சிலர் இருந்தாலும் முன்பே குறிப்பிட்டதை போல, பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்குள் பஞ்சனை தேவைகள் பற்றி விவாதிப்பதேயில்லை. இதனால் இருவருக்கும், காமத்தில் முழு சுகமும் கிடைக்காமல் விரக்தியில், தன் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள துணையை தவிர்த்து ரகசிய இணையை தேடுகிறார்கள். மற்றான் தோட்டத்து மல்லிகை மேல் ஆசை பொங்குகிறது. துணையுடன் நிறைவேறாத உள்மன ஆசைகள் மாற்றான் தோட்டத்தில் அடையும்போது விதவிதமாக அனுபவிக்கிறார்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைய மற்றொரு காரணம், பணத்தை நோக்கி மனிதன் வேகவேகமாக ஓட தொடங்கியபின் காமம் என்பது 5 நிமிட விவகாரம் என நினைக்க தொடங்கிவிட்டான். இது தற்போது அதிகமாக தொடங்கியுள்ளது. அதைத்தான் அந்த பிரான்ஸ் பெண்மணியின் வழக்கு காட்டுகிறது. இந்தியாவிலும் அதிகமாகத்தான் உள்ளது. வெளியே வருவதில்லை.

காமம் என்பது, தடவுதல், முத்தமிடுதல், உணர்ச்சிகளை தூண்டுதல், உறவுக்கொள்ளுதல், தழுவுதல் என்ற பரிமாணங்களை கொண்டது. அதை படிப்படியாக செய்து உச்சத்தை தம்பதிகள் அடைய வேண்டும் என்பது காம சாஸ்த்திரத்தின் கோட்பாடு. உலகத்துக்கு காம சாஸ்த்திரம் என்ற நூலை தந்த இந்தியாவில் தான் காமம் என்பது தீண்டதகாத வார்த்தையாகியுள்ளது.

அய்யா பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே, வெளிநாட்டு சில்லரை வியாபார நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், வங்கிகள், பல்கலைகழகங்களை மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறீர்கள். அந்த ஆஸ்த்திரேலியா பெண்மணியிடம் பேசி, அந்த கலவி கல்விச்சாலையின் ஒரு கிளையை இந்தியாவில் தொடங்கச்சொல்லுங்கள்……………