திங்கள், டிசம்பர் 12, 2011

அடிக்கு அடி.


கர்நாடகா அரசியல்வாதிகள் காவேரியையும், ஆந்திரா அரசியல்வாதிகள் பாலாறையம் வைத்து அரசியல் செய்து வந்த நிலையில் நான் மட்டும் சும்மாயிருப்பேனா என களத்தில் இறங்கியுள்ளார்கள் கேரளா அரசியல்வாதிகள். முல்லை பெரியார் அணை என்பது தமிழக எல்லையில் கட்டப்பட்டது. நீர் உருவாகும் இடமும் தமிழகத்தில் தான் உள்ளது. நீர் தேக்கி வைக்கப்படும் பகுதி மட்டுமே கேரள பகுதியில் உள்ளது. அதேபோல் பெரியார் அணை கட்டப்பட்டதும் தமிழக விவசாயிகளுக்காக தான். இந்தியாவை ஆண்ட பிரிட்டீஸ் அரசாங்கத்தின்  பொறியாளரான பென்னிகுக் என்பவர் அரசு பணத்தோடு தனது சொத்தை விற்று அந்த பணத்தை கொண்டு அந்த அணையை கட்டி தந்தார்.

நூற்நாண்டை கடந்த இந்த அணை தான் விரிசல் விழுந்துவிட்டது, உடையபோகிறது, மக்கள் இறக்கபோகிறார்கள் என்ற வதந்தியை 1980க்கு பின் கிளப்பிவிட தொடங்கியது கேரள அரசாங்கம். உச்சநீதிமன்றம் வரை சென்றது தமிழகம். அணை பாதுகாப்பாக உள்ளது. 152 அடி வரை நீர் தேக்கிக்கொள்ளலாம் என அறிவித்தது உச்சநீதிமன்றம். அதை எதையும் கேரளா அரசாங்கம் மதிக்கவில்லை. கேரளா அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆபத்து ஆபத்து என குதித்து வருகின்றன.

கேரளா எல்லையில் உள்ள தமிழர்களை, தமிழர்களின் கடைகளை அடித்து உடைத்து தீ வைத்தனர். பெண்களிடம் வக்கிரமாக நடந்துகொள்ள முயல பாதிக்கப்பட்டவர்கள் கேரளா காவல்துறையிடம் புகார் தந்தபோது வாங்க மறுத்துள்ளனர்;. இதற்க்கு முன்பு வரை கர்நாடகாகாரனும், ஆந்திராக்காரனும் குட்ட குட்ட குனிந்து கொண்டுயிருந்த தமிழகம் இன்று கேரளாவின் அத்துமீறலால் கொதிக்க தொடங்கிவிட்டது. காரணம், பெரியாறு அணை நீர் தென்மாவட்டங்களுக்கு உயிர். கேரளாவுக்கு அது மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படப்போகிறது. ஆனால் தமிழகத்தை அழிக்க துணிபவர்களை கண்டு கொதித்து போன தமிழன் நீ அடித்தால் நானும் அடிப்பேன் என புறப்பட்டுவிட்டான். தமிழகத்தில் பல மலையாள கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கேரளாவுக்கு அனுப்பவேண்டிய அத்தியாவாசிய பொருட்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. உடனே தமிழக அரசு வன்முறை, இந்திய இறையான்மைக்கு ஆபத்து எனச்சொல்லி கைது செய்கிறது.

அவன் அங்கு செய்தால் தியாகம், போராட்டம் நாம் இங்கு செய்தால் வன்முறையாம். என் இன பெண்களை கற்பழிக்க முயலுவான், அடிப்பான், தீ வைப்பான் அதை நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டும். அந்த மாநிலத்தான் இங்கு சொகுசாக வாழ்வான். இது எந்தவூர் நியாயம். அவனுக்கு அவன் மொழியிலேயே பதில் தந்தால் தான் புரிந்துகொள்வான். இதை ஆரம்பித்து வைத்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு பதில் தருவோம். அவர்களுக்கு மட்டுமல்ல இனி கர்நாடகாகாரனும், ஆந்திராக்காரன் எடுக்கும் அதே ஆயுதத்தை நாமும் எடுப்போம். அப்போது தெரியும் உண்மை நிலை என்னவென்று.


அடிக்கு அடி பிரச்சனையை தீர்க்காது என்பது தெரியும். பேசினால் கேட்டுக்கொள்பவனாக இருந்தால் பேசலாம். கேட்கவே மாட்டேன் என்பவர்களிடம் எதற்காக பேச வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நாமும் திருப்பி செய்வோம். அவர்கள் அடித்துக்கொண்டு செத்து மடியட்டும் என காத்திருக்கும் மத்தியரசு நம்மை ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவர்கள் தற்போதைய நிலையை விட அதிகமாக நம்மை புறக்கணிக்கட்டும் நாம் தனித்து செயல்படுவோம், தனிநாடாக உருவெடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக