புதன், டிசம்பர் 21, 2011

பணமிருந்தால் எதையும் செய்யலாம்…………


இளம் சாமியார் நித்தியானந்தாவை தமிழகம் மறக்க முடியாது. நான் சன்னியாசி, முற்றும் துறந்தவன் என பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்தபோது 2 ஆண்டுக்கு முன் வெளியான வீடியோ அவனது உண்மை சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. பசி கொண்ட புலி புள்ளிமான் மேல் பாய்வதை போன்று பஞ்சுமெத்தையின் மீதிருந்த நடிகை ரஞ்சிதா மீத பாய்ந்தான் நித்தியானந்தா. ஆஹா இவனல்லவே முற்றிலும் துறந்த சன்னியாசி என எண்ண வைத்தது அந்த காட்சிகள்.

அவர் சாமி, எங்களை கடவுளாக்க வந்தவர் அவர் தவறு செய்திருக்கமாட்டார் என்றார்கள் அவரது பக்த சிஷ்யைகள்-சிஷ்யர்கள். முகத்தில் அடித்தார் போல் அந்த வீடியோ பதிவு உண்மை என்று கூறியது மத்தியரசின் தடவியல்துறை. அதுமட்டுமல்ல தவறு நடந்துள்ளது எனக்கூறி கர்நாடகா காவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையை விட்டு ஜாமினில் வெளியே வந்தான் நித்தியானந்தா. எப்போதும் போல் ஆஸ்ரமத்தில் யாகம், பிரசங்கம் என ஆரம்பித்துள்ளான். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்க்கு தான் தான் காரணம், என் சக்தியே காரணம் என வீரபிரதாபம் பேசி வருகிறான். இன்று அவனது பேச்சு எல்லை மீறிப்போய்க்கொண்டுயிருக்கிறது.

பணம்மட்டுமிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்க்கு இன்று அடையாளமாக திகழ்கிறான் நித்தியானந்தா. வீடியோ பதிவு வெளிவந்த பின் அவனது வருமானம், பக்தர்கள் கூட்டம் முற்றிலும் குறைந்துப்போய் தள்ளாடும் அவன். அவமானப்பட்டு, துகிலுறியப்பட்ட தன் உடம்பை பணம் கொண்டே மறைக்க பார்க்கிறான்.  பணத்தை வாரி இறைத்து தனது விழாக்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களை தனது பக்தர்கள் என அடையாளம் காட்டுகிறான்.

தமிழக எதிர்கட்சி அரசியல் தலைவருக்கு தருவதை விட அதிகமாக பாதுகாப்பு தந்து விழுந்து விழுந்து அவனை கவனிக்கிறார்கள் காவல்துறையினர். இந்து மதத்தின் காவலன் என தன்னை அழைத்துக்கொள்பவன், சமீபமாக தனது சாதியை சார்ந்தவர்களை அதிகம் நம்பி அவர்களை ஒரு அமைப்பாக திரட்ட முயல்கிறான். நான் தவறே செய்யவில்லை என வீரபிரதாபம் பேசுகிறான்.

பணத்தை கொண்டு சில மீடியா, அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினரை விலைக்கு வாங்கிய நித்தியானந்தம் நீதிமன்றத்தையும் வாங்க முடியுமா என பார்க்கிறான். அவன் பணத்தை கொண்டு எதையும் வாங்கலாம் மறைக்கலாம். மக்களின் மனதில் உள்ளதை மட்டும் எதைக்கொண்டும் மறைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக