ஞாயிறு, டிசம்பர் 25, 2011

காதல் காற்றில் கரையட்டும்.




நானும் தான் காதலித்தேன். காதல் என்ன கத்தரிக்காயா கேட்டவுடன் கிடைத்துவிட. காலங்கள் தான் என் காதலை உன்னை ஏற்க வைத்தது. காதல் வந்தபின் மனதை மயக்கும் உன் பார்வையென்ன காது குளிரும் பேச்சென்ன. நாம் பேசிய காதல் வார்த்தைகளை அடுக்கியிருந்தால் வானத்தை தொட்டிருக்கும். 

எத்தனை எத்தனை நாட்கள் உன் கை கோர்த்து நடந்திருப்பேன். என் தோள் சாய்ந்து நீ உடன் வரும்போது வானம்மே என் காலடியின் கீழ் இருந்தது. என்னை காணும் போதெல்லாம் நீ ப+வாய் மலர்ந்திருப்பாய்.  உன்னை காணவரவில்லை என்றால் அந்த கோடைகால சூரியனுக்கே அக்னியை கடன் தருவாய். 

உன் பாதங்களில் நான் கோலமிட்டபோது என் முதுகில் வரிப்போட்டவள்; நீ. ஆனால் உன் இதழ்க்கு நான் ஒத்தடம் தந்தபோது காந்தமாய் ஒட்டினாய். 

பிரிவுக்கே பிரியாவிடை தருவோம் என்றாய். எத்தனை வேகமாய் என்னை விட்டு பிரிந்துவிட்டாய். காதல் நினைவுகளை காற்றில் கரைத்துவிடு காலமெல்லாம் அது தென்றலாக வீசட்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக