செவ்வாய், ஜூலை 30, 2013

அன்பே அழகானது. – பகுதி – 7.



சோபாவில் அமர்ந்திருந்த தேவராஜ், என்னம்மா வேலை எப்படியிருக்கு என தன் மகள் சுதாவிடம் கேட்டதும் நல்ல ஸ்கூல்ப்பா, எல்லாரும் நல்ல பழகறாங்கப்பா.

நீ வேலைக்கு போறது எனக்கு சுத்தமா புடிக்கல. ஏதோ நீ ஆசைப்பட்டியேன்னு தான் அனுப்பி வைக்கறன்.

வீட்ல உட்கார்ந்துக்கிட்டு சும்மா டீவி பாத்துக்கிட்டே இருக்கறது புடிக்கலன்னு தான் வேலைக்கு போறன்ப்பா.

உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அத செய். நீ வேலைக்கு போய் தான் சம்பாதிக்கனும்கிற அவசியம்மில்ல. உனக்கு புடிக்கலன்னா நின்னுடு.

சரிப்பா.

சரிம்மா உனக்கு வண்டி புடிச்சியிருக்கா.

நல்லாயிருக்குப்பா. கறுப்பு கலரா இருந்தா நல்லாயிருந்திருக்கும்.

நீ சொன்னதும் கறுப்பு கலர் தான் கேட்டன். அவன் அது வர்றதுக்கு இரண்டு மாசமாகும்ன்னிட்டான் அதான் சரின்னு ஒயிட் கலர் எடுத்துட்டன். மாத்தறதாயிருந்தா மாத்திக்கலாம்மா.

வேணாம்ப்பா.

போகும்போதும், வரும்போதும் ரோட்ல பொருமையா போம்மா.

சரிப்பா.

சாப்பிட்டியா?

இன்னைக்கு சன்டே தானேப்பா. நான் அப்பறம்மா சாப்பிட்டுக்கறன்.

டைம்க்கு சாப்பிடும்மா. வீணா பழச நெனைச்சி மனச போட்டு கஸ்டப்படுத்திக்காத.

அதெல்லாம் ஒன்னும்மில்லப்பா நீங்க வந்து சாப்பிடுங்க என அழைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்த சுதா எழ தாத்தா என அழைத்தபடி ஓடி வந்தாள் ஏழு வயது சுவாதி.

வாடா வாடா என் கண்ணு என முகத்தில் புன்னகையுடன் தன் பேத்தியை தூக்கி மடியில் உட்கார வைத்து முத்தமிட்டவர். எங்க போயிருந்திங்கடா செல்லம்?. 

சினிமாவுக்கு தாத்தா.

என்ன படத்துக்கு போனிங்க ?

தீ… தீ….. ஆங் தீல ஓடு குமாரு என சொல்ல சுதாவின் அண்ணன் ரமேஷ் சிரித்தபடி அப்பாவின் எதிரில் அமர அவனது மனைவி ரம்யா நின்றபடி சுவாதியின் பதிலை கேட்டு சிரித்தாள்.

வாயாடி எப்படி தப்பு தப்பா சொல்றா பாருங்கப்பா என சுதா அவளை முறைக்க.

நீ தான் வாயாடி அத்தை எனச்சொல்ல

நானா நானா என சுதா அடிக்க கையை ஓங்க தாத்தாவை கட்டி பிடித்துக்கொண்டாள்.

சாப்பிட்டிங்களா என தன் மகனிடமும், மருமகளை பார்த்து தேவராஜ் கேட்க

இன்னும் இல்லப்பா.

சரி வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்.

நீங்க சாப்பிடுங்கப்பா. நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடறன்.

தாத்தா நானும் சாப்பிட வர்றன் தாத்தா.

நீ வாடா செல்லம் என கொஞ்சியபடி டைனிங் டேபிளுக்கு செல்ல ரமேஷ்சும், ரம்யாவும் தங்களது அறைக்கு சென்றனர்.

உங்கம்மா எங்க சுதா.

பக்கத்து வீட்டு ஆன்டி வீட்டுக்கு போயிருக்காங்கப்பா.

எப்ப பாத்தாலும் கதை பேசறதே உங்கம்மாவுக்கு பொழப்பா போச்சி என்றபடி சாப்பிட அமர்ந்தார். பேத்திக்கு ஊட்டி விட்டபடி தானும் சாப்பிட்டு முடிக்கவும் ரமேஷ் குளித்து உடை மாற்றிக்கொண்டு சாப்பிட வரவும் சரியாக இருந்தது. பின்னாடியே ரம்யாவும் வந்தாள். தேவராஜ் அந்தயிடத்தை விட்டு நகர்ந்ததும் ரம்யா, ரம்யாவிடம் நீயும் வந்துயிருக்கலாம் படம் சூப்பராயிருந்துச்சி.

நீங்க வேற அண்ணி. புதுசா க்ளாஸ் எடுக்கறன்னா கோர்வையா வரல. அதுக்கு ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு, நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கன்.

நீ வேலைக்கு போகனும்மா என ரமேஷ் சாப்பிட்டபடி கேட்க.

உன் பொண்டாட்டி போறத கேள்வி கேட்க மாட்டேன்கிறயே.

நான் வேணாம்ன்னு தான் சொன்னன். அப்பாத்தான் கவர்மெண்ட் வேலை. பேங்க் உத்தியோகம்ன்னு ஏதோதோ சொல்லி போக சொல்லிட்டாரு. இவளுக்கு அது ப்ளஸ்சாகி இப்ப நில்லுடீன்னா நிக்கமாட்டேன்கிறா.

நான் வேலைக்கு போறதும் ஒன்னு சும்மாயிருக்கறதும் ஒன்னு தான். நான் மேனேஜரான இந்த ஆறு மாசமா இவருக்கு பர்சனல் லோன் தா, அவருக்கு ஹவுசிங் லோன் தான்னு ஒரே டார்ச்சர் பண்றாரு உங்கண்ணன்.

நீ தந்துட்டு தான் மறுவேலை பாக்கறியாயென்ன என ரமேஷ் கேட்க.

நீங்க அனுப்பற ஆளுங்கள பாத்தா ஒருத்தரும் திருப்பி கட்டறவங்க மாதிரியே தெரியல.

கட்டமாட்டாங்கன்னு நீயா நினைச்சா எப்படி ?.

நீ கேளு சுதா, நாலு நாளைக்கு முன்னாடி இவர் பெயரை சொல்லிக்கிட்டு ஒருத்தர் வந்து சார் அனுப்பி வச்சாரு. ஹவுசிங் லோன் தருவிங்க வாங்கி வரச்சொன்னாருன்னு கேட்டதும் செம டென்ஷனாகிட்டன். போய் அவரை வரச்சொல்லுங்கன்னு சொல்லி அனுப்பனன். அன்னைக்கு மட்டும் இவர் வந்திருந்தாரு. லெப்ட் அன் ரைட் வாங்கியிருப்பன்.

எப்படிண்ணா இன்ஜினியரிங் படிச்ச உன் கூட இப்படி புத்திசாலி ப்ரண்ட்ஸ்களா வச்சியிருக்க என நக்கலடிக்க

அதுயில்லடா, என் ப்ரண்ட் சக்தி புது வீடு கட்ட லோன்க்காக அலைஞ்சிக்கிட்டு இருக்கான். அவன் தன்னோட மச்சானை அனுப்பி பேங்க்குக்கு போ மேனேஜரா பாத்து ரமேஷ் சொன்னாரு, ஹவுசிங் லோன் அப்ளிக்கேஷன் வாங்கி வரச்சொன்னாருன்னு சொல்லு தருவாங்க வாங்கி வாடான்னு சொல்லியிருக்கான். போன புத்திசாலி ஹவுசிங் லோன் வாங்கி வரச்சொன்னாருன்னு கேட்டுயிருக்கான். தப்பு அவன் மேல. இதல நான் ஏதோ தப்பு பண்ண மாதிரி குதிக்கறா. இதுக்கு முன்னாடி இருந்த மேனேஜர், என் பெயரை கேட்டாலே எழுந்து நிப்பாரு அந்தளவுக்கு பிஸ்னஸ் தந்தன். இவ என்னவோ அலட்டிக்கறா. வேலையே தெரியாம பந்தா பண்றா இவ.

ஏது கமிஷன் தந்திங்க அதனால அவர் சலாம் போட்டாரு.

எப்படியோ முடிச்சன். உனக்கு வேணும்னா கேட்டு வாங்கிக்க.

எனக்கு ஒன்னும் வேணாம். உங்க பேரை சொல்லி யாரும் வராமயிருந்தா போதும்.

சாப்பிடற நேரத்தல எதுக்கு சண்டை. சண்டை போடறதாயிருந்தா உங்க ரூம்ல போய் போடுங்க என பொய் கோபத்துடன் சுதா சொன்னதும். இருவரும் அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்து அவர்களது ரூம்க்கு சென்றனர். அவர்கள் சாப்பிட்ட தட்டை எடுத்து வைத்துவிட்டு சுதா சாப்பிட அமர உள்ளே வந்த காவேரி உங்கப்பா சாப்பிட்டா ?.

ம். நீயும் நானும் தான் சாப்பிடல என்றதும் காவேரி ஒரு தட்டை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள். தண்ணீர் டம்பளர் வைக்காம என்ன சாப்பிடறா எனச்சொல்லியடி காவேரி மீண்டும் எழ நீங்க உட்காருங்க அத்தை எனச்சொல்லியபடி கிச்சன்க்குள் சென்ற ரம்யா டம்பளரோடு வந்தாள்.

என்ன படத்துக்கு போனிங்க ?.

தீயா வேலை செய்யனும் குமாரு படத்துக்கு அத்த.

இவளையும் அழைச்சிம் போயிருக்கலாம்மில்ல.

நான் போறப்ப கூப்டன் வரலன்னிட்டா.

வண்டியில உட்கார்ரப்ப நீயும் வாயேன்னு கூப்பிட்டுயிருப்ப என காவேரி கடுப்பாக சொன்னதும் ரம்யா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

நைட்டே அண்ணீ சொன்னாங்க. நான் தான் வரலன்னு சொன்னம்மா என சுதா சொன்னதும் க்கும் என்றாள் காவேரி.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ. ரம்யா சுதாவுக்கு தெரியாமல் காவேரியின் கையை சீண்டி விட்டு சுதாவுக்கு பின் பக்கமாக போய் கேளுங்க கேளுங்க என சைகை செய்தாள். சாப்பிட்டு முடிக்கட்டும் என காவேரி கண்களாலே சைகை செய்தாள். கை கழுவும் போது சுதா என காவேரி அழைத்ததும் என்னம்மா என்றாள்.

நைட் கேட்டனே என்ன முடிவு செய்துயிருக்க என கேட்டதும் திரும்பி ரம்யாவை முறைத்தாள்.


மதன் தன் அப்பாவுக்கு போன் செய்து ஊருக்கு கிளம்பிக்கிட்டுருக்கன் மதியத்துக்குள்ள வந்துடுவன்ப்பா.

பார்த்து ஜாக்கிரதையா வா.

சரியென்று செல்போன் லைனை கட் செய்தவன் ரஞ்சித்தை அழைத்துக்கொண்டு டூ வீலரில் தன் சொந்த கிராமமான அரசனூரை நோக்கி பறந்தான். 12 மணிக்கெல்லாம் ஊருக்கு போய்விட்டான். மதனின் அப்பா திண்ணையில் அமர்ந்திருந்தார். தாத்தா என்றபடி ரஞ்சித் பைக்கை விட்டு இறங்கி ஓடி அவரை கட்டி பிடித்துக்கொண்டான்.

பழைய காலத்து மாடி வீடு. வீட்டின் முற்றம் முதல் அனைத்தையும் பர்மா தேங்கு தாங்கிக்கொண்டு இருந்தது. விஸ்தாரமான அந்த வீட்டில் மதனின் அப்பா கலிவரதனும், கோதையம்மாள் என்கிற கோதையும் மட்டுமே இருந்தனர். பேரனின் குரல் கேட்டதும் நடக்க முடியவில்லை என போனில் குறைபட்டுக்கொண்ட கோதை ஓட்டமும், நடையுமாக வந்தாள். பாட்டியை பார்த்ததும் ரஞ்சித் அப்படியே தாவினான். பேரனை பிடித்தபடி எப்படிடா இருக்க என தாயின் அன்பு மகனின் மீதே இருந்தது.

நல்லாயிருக்கம்மா.

கால் வலிக்குதுன்ன இப்ப எப்படியிருக்கு.

மருந்து வாங்கி தடவிக்கிட்டு இருக்கன் இப்ப பரவாயில்ல. நீ முதல்ல போய் கை, கால் கழுவிட்டு வந்து சாப்பிடு.

நான் அப்பறம் சாப்பிடறன். நீ குடிக்க தண்ணி எடுத்து வாம்மா என்றபடி உள்ளே நடக்க பேரனை தன் கணவரிடம் தந்துவிட்டு உள்ளே சென்றான் கோதை.

வேலையெல்லாம் எப்படி போகுது என கலிவரதன் கேட்டதும்

நல்லா போய்க்கிட்டு இருக்கு.

அந்த பிரபு, பாண்டியன் எப்படி இருக்கானுங்க.

நல்லாயிருக்காங்க.

கோதை தன் மகனிடம் தண்ணி சொம்பை தந்தபடி, அந்த பிரபு பையன் எப்படிடா இருக்கான்.

நல்லாயிருக்கம்மா.

அவன் பசங்க

நல்லாயிருக்காங்க என்றபோது சமையல்கட்டில் இருந்து குக்கரின் விசில் சத்தம் வர கோதை சமையலறைக்கு சென்றார். நிலத்துக்கா போய்ட்டு வர்றன் என தன் அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே செல்ல முயன்றான்.

நிலத்துக்கு போறவன் இந்த துணியில தான் போவானாடா என கடுப்பான குரலில் கேட்டதும் தன் அறைக்கு சென்று பேன்ட் சர்ட்டை கழட்டிவிட்டு லுங்கி கட்டிக்கொண்டு கிளம்பினான். கலிவரதன் தன் பேரனுடன் விளையாட தொடங்கினார். மதன் தெருவில் இறங்கி நடக்க தொடங்கினான். பத்து வீடு தாண்டியிருப்பான் என்ன மைனரே எப்ப ஊருக்கு வந்த என சைடில் இருந்து குரல் வந்தது. அந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தான். பாக்யராஜ் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தான். 

மைனரு நீயா? நீனாடா ?.

நீ தான் மச்சான்.

கொழுப்புடா உனக்கு. சரி வா நிலத்துக்கா போய்ட்டு வரலாம்.

இப்பத்தான் நெலத்துலயிருந்த வந்தான் நீ போய் வா.

சும்மா துணைக்கு வாடா.

டவுன்லயே இருக்க வேண்டியதானே எதுக்கு ஊரு பக்கம் வந்து உசுர எடுக்கறிங்க என்றபடி எழுந்தவன் உள் பக்கமாக திரும்பி ஏய் இதே வந்துடறன்டீ என கத்திவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அருகில் வந்தவனிடம் என்னடா இப்படி சலிச்சிக்கற.

ஞாயித்துக்கிழமை மச்சான். நாட்டு கோழி கறி. சூடா, காரத்தோட சாப்பிட்டா ருசியா இருக்கும், நாட்டுகோழி உடம்ப சூடாக்கும் அப்பறம் அத தனிக்க ஆரம்பிக்கனும் என பல்லை காட்டினான்.

பகல்லயே வாடா.

நீ ஏதோ நல்ல புள்ள மாதிரி கேட்கற என்றவனுக்கு பதில் சொல்லாமல் ஒரு வரட்டு புன்னகையை வீசியதும் சுதகரித்தவன் மன்னிச்சிடு மச்சான். அதவிடு ஊர்ல என்ன விசேஷம் என கேட்க பெருசுகளின் அடவாடிகளை சொல்லியபடி வந்தான். மதனின் நிலத்துக்கு வந்திருந்தார்கள். கரும்பு பயிர் வச்சியிருக்காரே வெட்டறதுக்கு ஆள் வருவாங்களாடா ?.

வெட்டி, ஏத்தறது வரை கம்பெனிகாரனே பாத்துக்கறன் அதனால எந்த பிரச்சனையும்மில்ல. அதெல்லாம் கிடக்கட்டும் உங்கப்பா எப்பபாத்தாலும் உன்னைப்பத்தியே தான் பேசறாரு. அவர் சொல்றதத்தான் கேளேண்டா.

எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என மதன் சொல்ல கரும்பு தோட்டத்துக்குள் இருந்து பொங்கிய நெஞ்சோடு, சீமை பசு போல் பார்வதி வெளியே வந்தாள்.

ஏய் மத்தியான நேரத்தல கரும்பு தோட்டத்துக்குள்ளயிருந்த வர்ற என மதன் உரிமையோடு கேட்டான்.

எல்லாம் நீ வந்து தூக்கி விடுவன்னு தான் என டபுள் மீனிங்கில் சொல்ல

எனக்கு நிறைய சோலி கிடக்கு. இதோ இவன் வருவான்.

க்கும். காய்க்கும், பழத்துக்கும் வித்தியாசம் தெரியாத இது வந்து என்ன பண்ண போகுது எனச்சொல்ல கோபமான பாக்யராஜ், கொழுப்புடீ உனக்கு என்றவன் உள்ள என்ன பண்ண அதச்சொல்லு.

மாட்டுக்கு புல்லு புடுங்கி கட்டி வச்சியிருக்கன். தூக்கிவிட ஆள்யில்ல. பேச்சு சத்தம் கேட்டுச்சி வெளியில வந்து கூப்ட்டும் போலாம்ன்னு வந்தன்.

நீ போய் தூக்கிவிட்டுட்டு வாடா என்றதும் பார்வதி முன்னால் நடக்க பாக்யராஜ் பின்னால் சென்றான். ச்சீ கைய எடு என்ற குரல் சன்னமாக கேட்டது. புல் கட்டை தூக்கிக்கொண்டு பார்வதி வெளியே வந்து நான் கிளம்பறன் என மதனிடம் சொல்லிவிட்டு நடந்தாள். அவள என்னடா பண்ண.

ஒன்னும் பண்ணல மச்சான்.

அது சொன்னதுதான் இங்க கேட்டுச்சு. யார் மைனருன்னு இப்ப தெரியுது. அதோட வீட்டுக்காரன் எங்க.

அந்த நாய் இரண்டாவதா ஒன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டான். கோவலத்தல போடான்னு பசங்கள இழுத்துக்கிட்டு ஊரோட வந்துடுச்சி என சொல்லியபடி வந்தான். நெல் வயலுக்கு வந்தோம். அப்படியே சுத்தி பாத்துவிட்டு ஊரை நோக்கி நடந்தோம். பாக்யராஜ் வீடு வந்ததும் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த பாக்யராஜ் மனைவி எங்களை பார்த்ததும் எழுந்து நின்றது. எப்பண்ணா வந்திங்க ?.

இப்பதாம்மா வந்தன். பசங்க எப்படி இருக்காங்க ?.

நல்லாயிருக்காங்க.

சரி வர்றம்மா ?.

சாப்பிட்டு போங்கண்ணா.

அம்மா சமைச்சி வச்சிட்டு காத்திருப்பாங்க. இன்னோரு நாளைக்கு வந்து சாப்பிடறன். சரிண்ணா. பாக்யராஜ்யிடம் வர்ரண்டா எனச்சொல்லிவிட்டு நகரும் போது அவன் மனைவி பக்கம் திரும்பி, உன் வீட்டுக்காரன் இன்னமும் மைனர் நெனப்புலயே இருக்கான். பாத்து கொஞ்சம் கவனிம்மா.

டேய் நல்லவனே கொஞ்சம் மூடிக்கிட்டு போறயா என கத்தியவனை பார்த்து சிரித்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டுக்குள் நுழைந்ததும் முகம் கழுவிட்டு வந்து சாப்பிடுடா என்றார் அம்மா. முகம் கழுவி விட்டு வரும்போது ஊஞ்சலில் பேரனுடன் உட்கார்ந்திருந்தவரை பார்த்து நீங்க சாப்பிட்டிங்களா என கேட்ட மதனிடம் நான் சாப்ட்டுட்டன் நீ சாப்பிடு என்றார். தரையில் சம்மனம் போட்டு அமர்ந்ததும் தட்டு எடுத்து வைத்து பச்சரிசி சாதம், வெள்ளாட்டு கறி குழம்பு என எடுத்து வைத்தார்கள். அம்மாவின் கை பக்குவம் அருமையாக இருந்தது. ரசம் சாப்பிடும் போது அவன் என்ன சாப்பிட்டான்ம்மா.


கறி நாலு துண்டுதாம்ப்பா சாப்பிட்டான். கொஞ்சோண்டு ரசம் சாதம் சாப்பிட்டான் என அம்மா கவலையாக சொன்னதும் போதுமாடா என கேட்டேன்.

வயிறு ரொம்பிடுச்சிப்பா வயிற்றை தட்டி காட்டியபடி. 

வாழைப்பழம் இருந்தா தாம்மா என்றதும் உள்ளே சென்று மூன்று பேருக்கும் எடுத்து வந்து தந்தார். கலிவரதன் மடியில் அமர்ந்திருந்த பேரனுக்கு வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிட்டுக்கொண்டு இருந்தார். சாப்பிட்ட இடத்தில் இருந்து தள்ளி சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்து பழத்தை சாப்பிட தொடங்கினான் மதன்.

இங்க பார்றா என கலிவரதன் மதனை அழைத்ததும் என்னவென மதன் பார்த்தான். நீ ஒரு துணை வேணாம்ன்னு நினைக்கலாம். ஆனா இவன் சின்ன பையன்.

அதுக்கு என்ன பண்ணனும்கிறிங்க.

சொல்றத கேளுடா.

இரண்டு வருஷமா சொல்றதுத்தான். நீங்க எத்தனை முறை சொன்னாலும் என்னைக்கும் என் முடிவுல எந்த மாற்றமும்மில்ல.

என்னடா பெரிய மயிரு முடிவு. இந்த புள்ளைய அம்மா பாசம் தெரியாம வளர்க்க போறியா ?.

நான் அதிகமாவே பாசத்த காட்டறன்.

நீ காட்டற பாசம் கால் தூசுக்கு சமம். அம்மான்னு ஒருத்தி கூப்பிடறதுக்கு இல்லாம அவன் மனசு என்ன கஸ்டப்படும் தெரியுமா என்றதும் ரஞ்சித்தை பார்த்து கோபமாக உனக்கு அம்மா வேணுமாடா ?.

வேணாம் என தலையாட்டினான்.

போதும்மா. இதான் என் பையன் என பெருமையாக சொன்னதும்.

நீ என்ன லட்சணத்தல புள்ளய வளக்கறன்னு நீ அவன்கிட்ட பேசறதுலயிருந்தே தெரியுது என கோபமாக சொன்னதும் கோதை சமையல் கட்டில் இருந்து வேகமாக வெளியே வந்து தன் கணவரின் அருகே நின்றவள். அவர் சொல்றதத்தான் கொஞ்சம் கேளேம்பா.

என்னால சரியா பாத்துக்க முடியலன்னு சொல்றாருயில்ல. அப்ப நீங்க இரண்டு பேரும் வந்து என்கூட இருந்து இவனை பாத்துக்குங்க.

பெத்த புள்ள நீயே நாங்க சொல்றத கேட்கமாட்டேன்கிற, எடுத்தெறிச்சி பேசற. அப்படியிருக்கும் போது நான் சொல்றத உன் புள்ள எப்படி கேட்பான் என கலிவரதன் கோபமாக கேட்டதும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மதன் வெறுப்பான குரலில் இப்பயென்ன என்கூட இருக்க முடியாதுயில்ல விடுங்க அவனை நானே பாத்துக்கறன்.

சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும். இன்னைக்கு உடம்புல தெம்புயிருக்கு ஓடுவ. அவனை பாத்துக்குவ. என்னயமாதிரி வயசானபிறகு என்னப்பண்ணுவங்கறதயும் யோசிச்சிக்க என்றார் கலிவரதன். மதன் அமைதியாக இருக்க மாடு கூட ஒரு முறை அடிச்சா அதுக்கப்பறம் ஒழுங்காயிருக்கும். எருமை மாதிரி என்ன சொன்னாலும் சொரணையில்லாம இருந்தா என்ன அர்த்தம்மோ என்றார் உச்ச கோபத்தில்.

மதன் கோபமாக எழுந்து அறைக்கு சென்றான்.

தொடரும்………………

வெள்ளி, ஜூலை 26, 2013

பொருளாதார புண்ணாக்குகள்.


இந்தியாவில் கிராமபுறத்தில் ஒரு நாளைக்கு 27 ரூபாய்க்கு மேல், நகரத்தில் 33 ரூபாய்க்கு மேல் சாப்பிடுபவர்கள் அல்லது செலவு செய்பவர்கள் ஏழைகள் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது திட்டக்குழு. பல கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. 

திட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால் 22 ரூபாய்க்கு அம்மா உணவகத்தில் வேண்டுமானால் கோலி குண்டு சைசில் விற்கப்படும் 22 இட்லிகளை வாங்கி உண்ணலாம் அரை வயிறு நிரம்பும் அவ்வளவே. 

50 காசு டீசல் விலை ஏற்றம் நடைபெற்றால் 5 ரூபாய் தோசையில் விலை உயர்த்தப்படுகிறது. தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவனால் ஒரு வேளை உணவைக்கூட வயிறு நிரம்ப உண்ண முடியாத நிலையில் உள்ளான். அப்படியிருக்க 22 ரூபாய்க்கு மேல் சாப்பிடுபவர்கள் இந்தியாவில் பணக்காரர்கள் என்கிறது இந்த அறிக்கை. 


இதன் முடிவுப்படி பார்த்தால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறைந்துள்ளார்கள் என சுட்டிக்காட்டுயள்ளார்கள் இந்த பொருளாதார அறிஞர் பெருமக்கள். 

தினமும் இரண்டு இட்லி சாப்பிட்டால் அவன் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளான் என அறிவித்து அதன்படி புள்ளி விபரங்களை தயாரித்தால் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் யாரும் இல்லை என்பது போலாகிவிடும். 

இந்தியாவின் மக்கள் தொகையில் 22 சதவிதம் தான் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளார்களாம். 2004-2005ல் இது 37 சதவிதமான இருந்தது. தற்போது இது குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறது அந்த அறிக்கை. 

2004ல் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய், இன்று 45 ரூபாயை தாண்டி விற்கிறது. 2004ல் ஒரு கிலோ பருப்பு 50 ரூபாய்க்கு விற்றது இன்று 120 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. 2004ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 34 ரூபாய்க்கு விற்றது இன்று 74 ரூபாய்க்கு விற்கிறது. இப்படி குண்டூசி முதல் விமானம் வரை, கருவேப்பிலை முதல் பீசா வரை விலை உயர்ந்துள்ளது. இதை வைத்து பொருளாதார புலிகள் கணக்கிடமாட்டார்களாம். 

2000த்தில் வைக்கப்பட்ட சாப்பிடுவதற்கான அளவு கோலை வைத்து இன்றைய மக்களின் நிலையை கணக்கிடுவார்களாம். என்னங்கடா உங்க கணக்கீடு. இந்த மயிருக்கு நீங்கள் நாட்டில் ஏழையே இல்லை என அறிவித்து விடுங்களேன். 

உலக சுகாதார நிறுவனம் 2007ல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகில் குழந்தைகள் அதிகளவில் நோஞ்சானாக அதாவது ஊட்டசத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கும் நாடுகளில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் உள்ளதாக குறிப்பிடுகிறது. அதாவது 45 சதவிதம் குழந்தைகள். இந்த நிலை இன்றும் அப்படியேத்தான் உள்ளது. 


படிப்பு தந்துவிட்டால் வறுமை ஒழிந்துவிடும் என்கிறார்கள் ஒரு சாரார். படித்தவர்களை கொண்டு வறுமை ஒழிந்தது என்ற கணிப்பும் ஒரு பக்கம்மிருக்கிறது. படித்துவிட்டால் வறுமை ஒழிந்துவிடும் என்பது கற்பனை. 

இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயத்துக்கு நம் அதிகார வர்க்கம் முக்கியத்துவம் தரவேயில்லை. தொழில்துறைக்கும், கணினி துறைக்கும் அதிகார வர்க்கம் தந்த முக்கியத்துவம் விவசாயத்துக்கு தரவேயில்லை. விவசாயத்தல் லாபம்மில்லாமல் மக்கள் கூலிகளாக கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி நகர்ந்தார்கள். தொழில் வளர்ச்சியின் போது அந்த மக்களை வா வா என தன்னோடு அழைத்துக்கொண்டது. மனித உழைப்பு சுரண்டலுக்கு பின் தொழில்துறையில் ஒரு விதமான வளர்ச்சிக்கு வந்தபின் இயந்திரங்களை கொண்டு பணிகள் செய்ய தொடங்கியபோது கூலிகளாக வந்தவர்கள் மீண்டும் பணியில்லாமல் துரத்தப்படும் நிலை. இவர்களால் மீண்டும் கிராமத்துக்கும் செல்ல முடியவில்லை, இவர்களின் வாரிசுகளாலும் விவசாயத்தை செய்ய முடியவில்லை. உணவுக்கு திண்டாட தொடங்கிவிட்டார்கள். 

நூறு நாள் வேலை என்ற ஒன்றை கொண்டு வந்து மக்களை சோம்பேறிகளாக்கியது தான் இந்திய காங்கிரஸ் அரசு செய்த சாதனை. அதை தவிர ஏழை மக்கள் முன்னேற என்ன திட்டத்தை இந்த அரசாங்கம் செய்துள்ளது. தொழில் துறையின் அத்துமீறல், சுற்றுச்சூழல் மாசுபாடு, அரசாங்கத்தின் திட்டமிடா திட்டங்கள் போன்றவை கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் அழித்துவிட்டன. இதனால் கிராமங்களில் வாழ்பவர்களை சோம்பேறிகாக உள்ளனர். இதனால் வறுமையில் வாடும் மக்களின் நிலை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.

உலக அரங்கில் தன்னை வல்லரசாக காட்டிக்கொள்ள நினைக்கும் இந்திய அதிகார வர்க்கம் உண்மையை மறைத்து பொய்யை அறிக்கை வாயிலாக அவிழ்த்து விடுகிறது. இதனால் உலக வங்கியிடம் தேவையான அளவு கடன் கிடைக்கும். கடனை மக்களின் தலையில் சுமத்தவே இந்த அறிக்கைகள் பயன்படும்மே தவிர ஏழையை ஒரு வேளை உணவை நிம்மதியாக உண்ண வைக்க இந்த புள்ளி விவரங்கள் பயன்படாது. 

முதலாளித்துவ அடிமைகள் நம்மை ஆளும் வரை நாம் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். இது போன்ற அபத்தனமான அறிக்கைகளை படிக்கத்தான் வேண்டும். 

சனி, ஜூலை 20, 2013

அன்பே அழகானது. – பகுதி – 6.



ஏண்டா ஐஸ்கிரிம் வாங்க போறவன் கூட யாரையாவது அழைச்சி போகலாம்மில்ல.

இல்ல டாடி.

நீ வர வர ரொம்ப மோசமா நடந்துக்கற ரஞ்சித் என கோபமாக சொன்னதும் அமைதியாக வந்தான்.

பாஸ் தப்பு ரேவதி மேல. நீங்க ஏன் குட்டி பையனை திட்டறிங்க.

ரேவதிக்கிட்ட ஒப்படைச்சிட்டு போனா நீங்க யாரும் அவனை பாத்துக்கமாட்டிங்களா என கேட்டதும் அதில்ல சார் என ஸ்ரீதர் தலை குனிந்தான். மஞ்சு சோகமாக அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

கிடைச்சிட்டான்யில்ல விடுடா என்ற பிரபு, ரஞ்சித்தை அழைத்து புதுயிடத்துக்கு வந்தா தனியா போக கூடாது. யாராவது பெரியவங்க ஒருத்தர் துணையோடத்தான் போகனும். இங்கயெல்லாம் நீ தொலைஞ்சி போய்ட்டின்னா உன்ன கண்டு பிடிக்கவே முடியாது. அதனால ஜாக்கிரதையா இருக்கனும் சரியா என்றான்.

சரி அங்கிள்.

ஆமாம் ஐஸ்கிரிம் வாங்க உனக்கேது காசு என நான் கேட்டதும்

அமைதியாக இருந்தான்

கேட்கரன்யில்ல பதில் சொல்லு என கோபமாக கேட்டதும் ட்ரஸ் எடுக்க போனப்ப ஐஸ்கிரிம் வாங்க பணம் தந்திங்களேப்பா அதல மீதி காசு எங்கிட்ட இருந்துச்சி அதலதான் வாங்கனன்.

உனக்கு காசு தர்றது தப்பா போச்சி.

சின்னப்பையன் சொன்னா புரிஞ்சிக்கபோறான். அதவிட்டுட்டு திட்டிக்கிட்டே இருக்கற என பிரபு மீண்டும் சொல்ல அமைதியாக வந்தேன். இரவு 8 மணியளவில் அனைவரும் ஊர் வந்து சேர்ந்தோம்.

வீட்டுக்கு வந்து உள் நுழைந்ததும் என்னடா கோபமா என கேட்டேன்.

அமைதியாக இருந்த ரஞ்சித் எதுவும் சொல்லமால் நி;ன்றான். இந்த வயசுல உங்க பையன் பிர்லியன்டா இருக்கான்னு மத்தவங்க சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. ஆனா நீ பண்ற வாலு தனத்த தான் பொருத்துக்க முடியல என்றதும். அதற்கும் அமைதியாக இருந்தான். சரி ட்ரஸ் மாத்திக்க டிபன் செய்யறன் சாப்பிடலாம் என்றதும் அமைதியாக பெட்ரூம்குள் நுழைந்தான். நானும் சென்று உடை மாற்றிக்கொண்டு டிபன் செய்ய தொடங்கினேன். தோசை ஊத்தி சட்னி வைத்து தந்ததும் சாப்பிட்டுவிட்டு ரூம்குள் சென்றுவிட்டான். நான் பெட்ரூம்குள் நுழைந்த போது அவன் தூங்கியிருந்தான். அவன் தலையை தடவி தந்தபடி நானும் தூங்கியிருந்தேன்.

காலையில் எழுந்தவன் அவனே குளிக்க சென்றான். என்ன சார் இன்னும் கோபம் போகலயா ?

அதெல்லாம் ஒன்னும்மில்ல.

உன் முகத்த பாரு குரங்கு மாதிரியிருக்கு.

உன் மூஞ்சிதான் எங்கிட்டயிருக்கு என பதில் சொல்ல அவனை முறைப்பது போல பார்த்ததும் பாத்ரூம்குள் ஓடிவிட்டான். குளித்துவிட்டு வெளியே வந்து பள்ளிக்கு கிளம்பியவனின் கழுத்தில் டை கட்டியபடி மெல்லிய குரலில் நீ அவுங்க கூட இல்லன்னதும் நான் எப்படி துடிச்சன் தெரியுமா. அந்த கோபத்தல திட்டிட்டன்டா ஸாரி.

நீங்க சென்னை அழைச்சிம் போகும்போது என்ன சொன்னிங்க.

என்ன சொன்னன்.

பொம்மையெல்லாம் வாங்கி தர்றன்னு சொன்னீங்க. எதுவும் வாங்கி தரல.

மஞ்சுக்கிட்ட நான் தான் வாங்கி தரச்சொன்னனே.

எதுவும் வாங்கி தரலப்பா.

நானும் டென்ஷன்ல மறந்துட்டன். அடுத்தமுறை போறப்ப நிறைய வாங்கி தர்றன்.

ஓ.கே டாடி என தலையாட்டியவன் சந்தோஷத்தில் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தான். தட்டில் போட்டு வைத்திருந்த மூன்று இட்லியை சாப்பிட்டபோது வெளியே வீட்டு வாசலில் வந்து நின்று ஹாரன் அடித்தது ஆட்டோ. இரு ரஞ்சித் உன்ன நான் ட்ராப் பண்றன்.

வேணாம் டாடி. நான் ஆட்டோவுல போறன். மதியம் லஞ்ச் டாடி. மறந்துட்டன் இரு என சமையல் அறைக்கு சென்று அவனுக்காக வைத்திருந்த டிபன் பாக்ஸ் எடுத்து வந்து தந்தபடி ஐந்து இட்லி வச்சியிருக்கன். மிச்சம் வைக்காம சாப்பிடு என டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டிலை தந்ததும் வாங்கிக்கொண்டு வெளியே நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டு சிரித்தபடி டாடா காட்டினான்.

நானும் குளித்துவிட்டு முடித்து சாப்பிட்டுவிட்டு அலுவலம் சென்ற போது வேலைகள் நடந்துக்கொண்டு இருந்தன. ஒரு கம்ப்யூட்டரில் அமர்ந்து பிரபு டிசைன் செய்துக்கொண்டு இருந்தவனை உள்ள வாடா என்றதும் வந்தவன் வீட்ல போயும் அவனை திட்டனியா ?.

இல்லடா. காலையில வரைக்கும் கோபமா இருந்தான். ஸ்கூல் போகும்போது தான் கொஞ்சம் சிரிச்சான்.

அவனுக்கு அம்மா பாசமும், அரவணைப்பும் தேவைடா. ஒரு அப்பா எவ்ளோ பாசத்த காட்டனாலும், அம்மா மாதிரி வராது. அதனால கோபப்படாம நாங்க சொல்றத கொஞ்சம் கேளுடா என்னும் போதே ஃபோன் மணி அடித்தது. மதன் ஃபோனை எடுத்து ஹலோ என்றான்.

எதிர் தரப்பு குரலை கேட்டதும் வணக்கம் சார். நல்லாயிருக்கிங்களா ?

நல்லாயிருக்கனப்பா. நீ எப்படியிருக்கற ?.

நான் நல்லாயிருக்கன் சார்.

செல்போன்க்கு கூப்பிட்டன் எடுக்கல.

பைக்ல ஆபிஸ் வந்துக்கிட்டு இருந்தன் சத்தத்தல கேட்கல சார்.

தலைவர் அடுத்த மாசம் இங்க வர்றாரு.

என்ன சார் திடீர்ன்னு.

மாவட்ட தலைவர் பையன்க்கு கல்யாணம். அதுக்காக வர்றாரு. நாம நல்லா விளம்பரம் செய்யனும்.

செய்துடலாம் சார்.

வாசகம் சொல்றன் குறிச்சிக்கப்பா.

சொல்லுங்க சார் என ஒரு பேப்பர் பேனாவை எடுத்து அவர் சொன்னதை குறிக்க தொடங்கினான். பத்து நிமிடம்மானது. டிசைன் பண்ணி நாளைக்கு ஆபிஸ்க்கு 11 மணிக்கு தந்து அனுப்பறன் சார். கரெக்ஷன் ஏதாவது இருந்து சொன்னிங்கன்னா மாத்தி நாளைக்கு ஈவ்னிங் பைனல் பண்ணிடலாம் சார் என முடித்து ஃபோனை வைக்க 15 நிமிடமானது.

பிரபுவிடம் எல்லாரையும் உள்ள வரச்சொல்லு.

எதுக்கு.

வரச்சொல்லு சொல்றன்.

கண்ணாடி டோரை திறந்த பிரபு, ஆல் ஆபிசர்ஸ் ப்ளீஸ் கம் என்றதும் அடுத்த இரண்டு நிமிடத்தில் எல்லோரும் மதன் முன் அமர்ந்திருந்தனர்.

அடுத்த மாசம் மக்கள் முன்னேற்ற முன்னணி கட்சியோட தலைவர் முக்கிய கட்சிக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு இங்க வர்றாறாம். இப்பத்தான் டேட் கன்பார்ம்மாச்சாம். அந்த கட்சி மா.செவாயிருக்கற வேலாயுதம் எம்.எல்.ஏ இப்பத்தான் போன் பண்ணி சொன்னாரு.  நியூஷ் பேப்பர், பேனர், போஸ்டர்க்கு டிசைன் கேட்டுயிருக்காரு. ரொம்ப நல்லாயிருக்கன்னு தலைவர் நின்னு ரசிக்கற மாதிரி இருக்கனம்ன்னு சொல்றாரு.

செய்து தந்துடலாம் சார் என்றான் பாண்டியன்.

ஆனா நாளைக்கே வேணும்ன்னு கேட்கறாரு.

நாளைக்கா என ரேவதி அதிர்ச்சியாக.

ஆமாம்.

ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் டைம் சார். வாராவாரம் புது டிசைன்ங்க தந்துக்கிட்டே இருக்கனம்ன்னு சொல்லியிருக்காங்க. நம்மோட ரெகுலர் கஸ்டமர்களோடதே நிறைய பென்டிங் இருக்கு. அதனால இத நாளைக்கே செய்து தர முடியாது சார் இரண்டு நாளாவது ஆகும் சார் என்றாள் ரேவதி.

இவரும் நம்ம ரெகுலர் கஸ்டமர் தான் ரேவதி என்ற நான் கொஞ்சம் யோசித்துவிட்டு

எம்.எல்.ஏவத பாண்டியனும், ரேவதியும் செய்யட்டும். காலேஜ், ஸ்கூல் ஓர்க்குகள பிரபு செய்யட்டும். மஞ்சு நீ கொஞ்சம் அப்படியே இந்த வேலைகளையும் கவனி.

சரியென தலையாட்டிய மஞ்சு. சார் அந்த எம்.எல்.ஏ போனமுறையே ஐந்தாயிரம் பென்டிங் வச்சியிருக்காரு என்றாள் மஞ்சு.

இந்தமுறை வாங்கிடலாம் மஞ்சு. ஸ்ரீதர் எங்க?.

இன்னும் வரல சார்.

பேங்க்ல ஏதாவது ஓர்க் இருக்கா.

செக்குங்க இருக்கு சார் அத அக்கவுண்ட்ல போடனும்.

அத எங்கிட்ட குடு நான் பாத்துக்கறன். ஸ்ரீதர் வந்ததும் எம்.எல்.ஏ விளம்பரத்த டிசைன் பண்ணச்சொல்லு.

சரி சார்.

பாண்டியன் வேலைய பிரிச்சி பாருங்க. நீங்க பேனர் வேலைகள பாருங்க, ரேவதி பேப்பர் விளம்பரத்த டிசைன் பண்ணட்டும், போஸ்டர் விளம்பரத்த ஸ்ரீதர்க்கிட்ட தந்துவிடுங்க. தேதியும், வாசகமும் சொல்லியிருக்காரு. எல்லாத்தலயும் அவர் படமும், கட்சி தலைவர் படமும் தான் போடனுமாம். தம்பதிங்க படத்த தந்துவிட்டுயிருக்காறாம். அதுக்கு இடத்த விட்டுட்டு டிசைன் பண்ணுங்க. சி.டி வந்ததும் படத்த எடுத்து வச்சி ஃபில் பண்ணுங்க.

சரி சார்.

சரி எல்லோரும் போய் வேலைய பாருங்க என்றதும் அனைவரும் எழுந்து சென்றனர்.

பிரபு எனக்கொரு ஐடியா, நாம இதுவரைக்கும் டிசைன் மட்டும் தான் செய்து தந்துக்கிட்டு இருந்தோம். இந்தமுறை அதை பிரிண்ட் செய்து தர ஆர்டரை எடுத்த எப்படியிருக்கும் ?.

என்னடாயிது புதுசா. 

ஆமாம் புதுசு தான். வளருனும்டா. எத்தனை வருஷத்துக்கு தான் அப்படியே இருக்கறது. கொஞ்சம் வளருவோம்;டா. நீ ஒருவேளை செய். நல்லா பிரிண்ட் போடறவங்க எங்க எங்க இருக்காங்கன்னு பாரு. ரேட் எவ்ளோன்னு விசாரி நான் இதோ வந்துடறன்.

ஏத்தனை வேலைடா நான் செய்யறது.

சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்த வச்சிக்கிட்டு வேலையப்பாரு. நான் வரும் போது பட்டியல் ரெடியா இருக்கட்டும்.

ம்.

ஃபைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் மதன்.

மதியம் 2 மணிக்கு திரும்பி வரும்போது ரிஷப்சனில் அமர்ந்து அனைவரும் அரட்டையடித்துக்கொண்டு இருந்தனர்.

ஏய் என்னப்பாயிது, நிறைய ஓர்க் பென்டிங் இருக்குன்னு காலையில தான் சொன்னிங்க. இப்ப என்னடான்னா எல்லாரும் உக்காந்து கதையடிச்சிக்கிட்டு இருக்கிங்க.

கரண்ட் இல்ல சார்.

நாம தான் யூ.பி.எஸ் போட்டுயிருக்கோம்மே?.

நாம போட்ட யூ.பி.எஸ் நாலு மணி நேரம் தான் வருது. காலையில 9 மணிக்கு போன கரண்ட் இப்பவரை வரல. மதியம்மே பேக்கப் காலியாகி ஒரே ஒரு சிஸ்டம் தான் ஒர்க்காகுது. அதலத்தான் பாண்டியன் சார் வேலை பாத்துக்கிட்டு இருக்காரு என்றான் ஸ்ரீதர்.

காலையில நீ எங்க போன ?

ஓர்க் பாஸ்.

என்ன வேலை பாத்த.

ஃபில் வராம சிலது இருந்தது அத வாங்கிவர போனன் பாஸ்.

வாங்கிட்டியா

நாளைக்கு வரச்சொல்லிட்டாங்க.

ஊர் சுத்த நிறைய காரணத்த வச்சியிருக்க

இல்ல பாஸ்.

பிரபு எங்க ?.

லஞ்ச்க்கு போயிருக்கார் சார்.

அவனை மொபைல் லைனில் பிடித்து சாப்பிட்டியா ?.

ம் என்றவனிடம் வேலை முடிஞ்சதா.

உன் லேப்டாப்ல ஸ்டோர் பண்ணி வச்சியிருக்கன் பாரு.

சரி சீக்கிரம் வா எனச்சொல்லிவிட்டு மதன் தன் அறைக்குள் சென்றான். லேப்டாப்பை ஆன் செய்து பிரபு ஸ்டோர் செய்த ஃபைலை ஓப்பன் செய்து பார்த்தபோது விதவிதமான ரேட்களில் பிரிண்ட் போடப்படுவது தெரிந்தது. தன்னிடம்மிருந்த சில குறிப்புகளை பார்த்தான் அவன் சொன்னதை விட விலை கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. பிரபு உள்ளே நுழைந்தவன் கரண்ட் வந்துடுச்சிடா என சொன்னபடி ஃபேனை சுழல விட்டவன் பாத்துட்டியா ?

பாத்துக்கிட்டு தான் இருக்கன். இத நீயும் பாரு என நான் குறித்து வந்திருந்த சில தகவல்களை அவனிடம் தந்தேன். கொஞ்சம் நேரம் பார்த்தவன் எனக்கு குழப்பமாயிருக்கு என்ன பண்றதா ஐடியா என கேட்டான்.

விதவிதமான ரேட்களா இருக்கு. இதல கொஞ்சம் டீப்பா போனாதான் குவாலிட்டி தர முடியும், நாமளும் லாபம் பாக்க முடியும் அதனால இப்போதைக்கு பெருசா வேணாம். இத படிப்படியா செய்வோம். அவசரப்பட்டு இறங்கி சிக்கிட்டோம் இருக்கறதும் போயிடும்.

இந்த கம்பெனி ஆரம்பிச்ச இந்த எட்டு வருஷத்தல இப்பத்தாண்டா ஒழுங்க யோசிச்சியிருக்கற என்றான் பிரபு.

பாஸ் என அழைத்தபடி வேகவேகமாக அறைக்குள் வந்த ஸ்ரீதர், பாஸ் ஆல் இன்டியா முழுக்க பிராஞ்ச் வச்சியிருக்கற தேவ் கம்பெனியோட பெங்களுரூ பிராஞ்ச் மேனேஜர் பேசனாரு. அவுங்களோட கிளையண்ட் ஒருத்தர் நம்மவூர்ல பெரிய ஜிவல்லரி திறக்கறாறாம். அதை மக்கள்க்கிட்ட புரமோட் பண்ணனுமாம், ஜிவல்லரி ஓனர் பிரஸ்ச மீட் பண்ணனும்மாம் அரேஞ்ச் பண்ணி தர முடியுமான்னு கேட்கறாரு.

ஓ.கே சொல்லு. அவுங்க நம்மள ஓவர் லுக் பண்ணக்கூடாது. பிடி நம்மக்கிட்ட இருக்கட்டும் ஸ்ரீதர்.

நீங்க பேசறிங்களா பாஸ்.

இல்ல மேனேஜர் பேசுவாருன்னு சொல்லு.

ஓ.கே பாஸ் என்றபடி வெளியே சென்றான்.

ஓபி அடிச்சாலும் நல்ல கான்டக்ட் வச்சியிருக்கனேடா.

அவன் கேடி. ஒரு நாள் நமக்கு அல்வா தரப்போறான் பாரு என்றவனிடம்

தரும்போது பாத்துக்கலாம். இங்க அந்த கம்பெனி எது பண்றதாயிருந்தாலும் அது நம்ம ஏஜென்சி வழியாத்தான் பண்ணனும் அந்தளவுக்கு பேசி அவனை நம்ம கண்ட்ரோல்ல வச்சிக்க. நமக்கு தர்ற ரேட் விஷயத்தல தயங்குவாங்க. எங்க ரேட் இதுதான்னு கட்டன்ரைட்ட பேசிடு.

பெரிய கம்பெனிடா விட்டு பிடிப்பமே ?.

ஒன்னும் வேணாம். நம்மக்கிட்ட வர்றது அந்த ஜிவல்லரி கிடையாது. ஜிவல்லரி நியமிச்சியிருக்கற அட்வர்டைசிங் கம்பெனி. நியூஸ் பேப்பர், மீடியா விளம்பரத்த அவுங்களே தயாரிப்பாங்க. வெளியிடப்போறதும் அந்த கம்பெனி தான். இங்க லோக்கல்ல தெருவுல, வினையல் போர்டு, பிட் நோட்டீஸ் தர்ற சின்ன சின்ன விஷயத்துக்கு தான் நம்மள பயன்படுத்துவாங்க. அவனால அவ்வளவா வருமானம் கிடையாது. அதனால அவன் சொல்ற வேலைய கேட்டுக்க செஞ்சிட்டு அதுக்கு ஏத்தமாதிரி பில் போட்டு அனுப்பிடு.

நாம ஏன் அந்த ஜிவல்லரி ஓனரை அப்ரோச் பண்ணி இங்கத்தி அட்வர்டைசிங்க நாங்க பாத்துக்கறன்னு கேட்டா பிரபுவை முறைத்தேன்.

தொடரும்……………