சனி, ஏப்ரல் 09, 2016

கட்சியை உடைத்து விஜயகாந்தை 'வெளுக்கும்' ரசிக தொண்டர்கள்.



தேமுதிக உடைந்துவிட்டதே என ஆச்சர்யப்படுகிறார்கள். இதில் ஆச்சர்யப்பட ஒன்றும்மில்லை. கொள்கையை அடித்தளமாக கொண்டு அமைக்கப்பட்ட திமுகவே பலமுறை உடைப்புக்கு உள்ளாகியுள்ளது. கொள்கையே இல்லாத கட்சிகள் உடையாமல் இருந்தால் தான் ஆச்சர்யப்பட வேண்டும்.

தேமுதிக கொள்கையோடு உருவாக்கப்பட்ட கட்சியல்ல. அதற்கு என்ன கொள்கையிருக்கிறது. சினிமா கதநாயகன் என்கிற கவர்ச்சி அவரை கட்சி தொடங்க வைத்து எதிர்கட்சி தலைவர் என்கிற அதிகாரம் வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர் மக்கள். 2006ல் அவர் கட்சி தொடங்கியபோது, அவரது நீண்ட கால ரசிகர்கள் தொண்டர்களாக மாறினார்கள். பிற கட்சிகளில் பதவி கிடைக்காத, அங்கீகாரம் கிடைக்காத துக்கடாக்கள் அந்த கட்சியில் போய் இணைந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் கொண்டது தான் அந்த கட்சி.

சட்டமன்ற, நாடாளமன்ற தேர்தலில் தனித்து நின்று தன் பலத்தை பார்த்துக்கொண்டவர் 2006ல் தனியாக சட்டமன்றம் சென்றார், 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு 29 எம்.எல்.ஏக்களுடன் எதிர்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தோடு சட்டமன்றம் சென்றார். இதற்கு மேல் அவர் உயரம் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிக குறைவு. 29ல் 8 எம்.எல்.ஏக்கள் அதிமுகவின் வலையில் விழுந்தார்கள்.

சரி இவர்கள் ஏன் கட்சியை விட்டு போனார்கள்?, போகிறார்கள். (போன பெரும்பாலானவர்கள் விஜயகாந்த் மன்றமாக இருந்தபோதே மாநில நிர்வாகியாக இருந்தவர்கள், கட்சியாக மாறியபின் கட்சியின் மாநில நிர்வாகிகளாக இருந்தவர்கள்). ஏன் எனில் கொள்கையில்லாத விஜயாந்த், தொண்டர்கள் விருப்பத்துக்கு மாறாக போனதால் வந்த பிரச்சனை. சிறு கட்சிகள் எப்போதும் தங்களை வளர்த்துக்கொள்ள, மக்களிடத்தில் தங்களை தக்கவைத்துக்கொள்ள பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பார்கள். தங்களது கட்சி பலம் அறிந்து சீட் பெறுவார்கள், செலவுக்கு பணம் பெறுவார்கள்.

முதல்வர் நாற்காலி தனக்கு இனி கிடைக்காது என்றதும் விஜயகாந்த்தும் 2011ல் அப்படித்தான் முடிவு எடுத்தார். 2014 நாடாளமன்ற தேர்தலில் விஜயகாந்த் எடுத்தது கண் திறந்துக்கொண்டே போய் கிணற்றில் விழுந்தது போல. பொருந்தா கட்சிகள் மற்றும் தமிழகத்தில் தன் கட்சிக்கு இருக்கும் பலத்தில் 10 சதவிதம் கூடயில்லாத பாஜக கூட்டணியில் தன் கட்சியை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.

அப்போதே தேமுதிக நிர்வாகிகளை, தொண்டர்களை சோர்வடைய வைத்தது. 2016லும் அப்படி ஒரு முடிவு எடுத்ததால் தான் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக, பாஜகவுடன் பெரும் பேரம் பேசினார். திமுகவுடன் போகிறோம் என கட்சி தொண்டர்களை நம்ப வைத்தபடி பேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளது விஜயகாந்த் குடும்ப குழு. அதற்கான பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருந்தபோது தான் மநகூ அணி கேப்டன் அணியாக மாறியது. விஜயகாந்த் கண்ணை திறந்துக்கொண்டு கிணற்றில் விழும் முட்டாளல்ல. அப்படியும் விழுந்தார் என்றால் லாபம்மில்லாமல் இல்லை.

விஜயகாந்த் முன்பு கட்சியை வளர்த்து முதல்வராக ஆசைப்பட்டார். அது முடியாது என தெரிந்ததும் இப்போது கட்சியை வைத்து பணம் பார்க்க தொடங்கியுள்ளார். அவருக்கு அந்த ஆசையில்லை எனச்சொல்லலாம், கட்சியை கட்டுப்படுத்தும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மச்சான் சுதிஷ் நடவடிக்கைகளை பார்க்கிறபோது விஜயகாந்த்தை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

லாபத்தோடு அவர் போய் கிணற்றில் விழுவதால் தான், எங்களுக்கு பதில் சொல்லுங்கள் என இரண்டாம் கட்ட தலைவர்கள் கேட்கிறார்கள். பதில்யில்லை என்றதும் வெதும்புபவர்களை குறி வைக்கின்றன பெரும் கட்சிகள். பணம், பதவி ஆசைக்காட்ட கட்சியில் இருந்து விலகுகிறார்கள் அல்லது பெரும் கட்சிகளால் உடைக்கப்படுகிறார்கள். தேமுதிகவை நேற்று அதிமுக உடைத்தது, இன்று திமுக உடைக்கிறது அவ்வளவு தான். 


திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக கட்சிகளில் பெரும்பாலானவரிடம் பதவி மோகமும், பண ஆசையும் நீக்க மற நிறைந்துள்ளது. கொள்கை என்பது அவர்களின் மனதில் வெகு ஆழத்தில் உள்ளது. அதனால் தான் அதிகாரத்துக்கு வர முடியாது என தெரிந்ததும் அதுவரை சுகம் அனுபவித்த கட்சிகளில் இருந்து அடுத்து அதிகாரத்துக்கு வரும் என நினைக்கும் கட்சிக்கு ஓடுகிறார்கள். இது இன்று நேற்றல்ல மனித சமூகம் தோன்றியது முதலே அதிகார ஆசை கொண்டவர்கள் ஓடுவது நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இன்று கட்சியை விட்டு ஓடுபவர்களுக்கு மக்களிடம் வாக்குயில்லை. கட்சிகளுக்கே வாக்கு என்கிற நிலை உள்ளது. அதை எப்போதே உணர்ந்தவர் ஜெயலலிதா. அதிமுக என்பது, திமுக எதிர்ப்பு என்கிற ஒத்தை கொள்கையோடு தொடங்கப்பட்ட கட்சி, நடிகர் என்கிற பிம்பத்தில் நிலை நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்தபின்பு நடிகர் என்கிற பிம்பம் உதவாது என்பதால் தான் பதவி ஆசை என்கிற பார்முலாவை ஜெயலலிதா கொண்டு வந்தார். தமிழகத்தில் 80 சதவிதம் தனக்கு அதிகாரம் வேண்டும் என்கிற ஆசை கொண்ட நிர்வாகிகள், தொண்டர்கள். அவர்களுக்கு பதவி ஆசையை காட்டிவிட்டால் எவனும் கட்சியை விட்டு போகமாட்டான் என அறிந்தே யாருக்கு வேண்டுமானாலும் அதிகாரம் தருவேன், பதவியில் தருவேன், எப்போது வேண்டுமானாலும் புடுங்குவேன் என்கிற பார்முலாவை செயல்படுத்துகிறார். நமக்கு அதிஷ்டம் அடிக்கும் என்கிற கனவுலயே அதிமுகவுக்கு ஓடுகிறார்கள். அதனால் தான் பலமுறை அதிமுக உடைந்த பின்பும் அந்த கட்சி வலிமையாக இயங்குகிறது.

திமுகவுக்கு நிரந்தர கொள்கையும், அதிமுகவுக்கு திமுக எதிர்ப்பு என்கிற கொள்கையும், பாமகவுக்கு தன் சாதி மக்கள் வளர்ச்சி என்கிற கொள்கையும் உள்ளது. தேமுதிகவுக்கு அப்படி எந்த நிரந்தர கொள்கையும் கிடையாது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். லாபத்துக்காக கட்சி ஆரம்பித்தார். அதில் பங்கு பார்த்தவர்கள் இப்போது இல்லை என்றதும் பிரிகிறார்கள். கொள்கையில்லாத கட்சிகளில் அது இயல்பானதே.............

புதன், ஏப்ரல் 06, 2016

சாதி வெறி பிடித்த வை.கோ.



சாதி வெறியாளராக பலமுறை அம்மணமாக தன்னை காட்டிக்கொண்ட வை.கோவுக்கு இப்போது முட்டுகொடுப்பவர்கள் சாதி மறுப்பாளர்கள் என தங்களை பிரகடனப்படுத்திக்கொண்ட திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் மேடையில் அமர்ந்திருந்தார்கள். அதை பார்த்தபடியே.

வை.கோ திமுகவில் இருந்தபோதிலிருந்தே அவரது மனதின் அடி ஆழத்தில், சாதி வெறி என்பது ஊறிப்போய் இருந்தது. சாதி வெறி மட்டும்மல்ல, மதவெறியும் அவர் மனதில் உண்டு. திராவிட இயக்கத்தில் வளர்ந்ததால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தன்னை சாதி மறுப்பாளனாக காட்டிக்கொண்டார். தனி கட்சி கண்டபின்பும், தன்னை சாதி மறுப்பாளனாக காட்டிக்கொண்ட வை.கோவால் அதை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் வெகு சுலபத்தில் உணர்ச்சி வசப்படுபவர் மட்டும்மல்ல. வெகு சீக்கிரம்மே தான் சாதி வெறியை காட்டுபவரும் கூட.

இப்போது வை.கோ உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளார். திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க அதிமுக போட்டு தந்த பாதையில் தனியாக ஒரு அணி அமைத்து பயணிக்கும் வை.கோ வாங்கிய காசுக்கு மேல் கூவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தனது பேச்சின் மூலம்மே மக்கள் மத்தியில் தான் அம்பலப்பட்டு போனதும், அதை மறைக்க என்ன என்னவோ பேசுகிறார்.

தேமுதிகவில் இருந்து பலர் மாற்று கட்சிக்கு போவது என்பது அவர்களது உட்கட்சி பிரச்சனை. தேமுதிக சந்திரகுமார் அணி, அவரது கட்சி தலைவரிடம் நியாயம் கேட்கிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டியது விஜயகாந்தின் கடமை. ஆனால் அவர் பதில் சொல்லாமல் கட்சியை விட்டு நீக்குகிறார். இதில் பிற கட்சிகள் கருத்து தெரிவிக்கும் போது நாசுக்காக கூற வேண்டும். ஏன் எனில் இது அவர்கள் வீட்டு பிரச்சனை. கூட்டணியில் இருந்தாலும் அதற்காக ஒரு கட்சியின் கொபசெ வாக மாறி பேசக்கூடாது. அந்த இங்கிதம் வை.கோவுக்கு தெரிந்திருந்தால், அவர் கட்சி காலி டப்பாவாக மாறியிருக்காது. தேமுதிகவின் உட்கட்சி பிரச்சனைக்குள் புகுந்து கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் கருத்து கந்தசாமியாக வை.கோ மாறி பொங்கி தீர்த்துவிட்டார். தேமுதிக தலைமையோ அல்லது தலைமை உத்தரவு பெற்று பேசிய மூன்றாம் கட்ட தலைவர்கள் கூட அப்படி பொங்கவில்லை. ஆனால் அதற்கு மேல் வை.கோ கூவி முடித்தார்.

அவர் 6ந்தேதி தாயகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அருகில் திருமா, ஜீ.ரா, முத்தரசனை வைத்துக்கொண்டு பேசியபோது, வை.கோ பேச்சை நேரலையில் ஒளிப்பரப்பிய கேப்டன் தொலைக்காட்சி, ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை வீசும்போது, கட் செய்து விளம்பரம் போட்டார்கள். தேமுதிக சந்திரகுமார் தேமுதிகவில் இருந்து பிரிந்துக்கொண்டு பலரை அழைத்துக்கொண்டு போனதுக்கு பதில் ஆதித்தொழிலை ( பாலியல் தொழில் ) செய்ய போகலாம் என வார்த்தைகளால் விளாசினார். தேமுதிகாவை உடைப்பதற்கு பதில், கலைஞரும் அந்த தொழிலை செய்ய போகலாம் என்றவர், நான் நாதஸ்வரம் ஊதற தொழிலை சொன்னன் அதுவும் ஆதித்தொழில் தான், அவருக்கு அந்த தொழில் தெரியும் என சாதி வன்மத்தை வார்த்தைகளால் கொட்டினார். இதனை நாங்க சாதிக்கு எதிரானவங்க, ஓடுக்கப்படும் சாதிக்கு ஆதரவானங்க என அரசியல் செய்யும் தலைவர்கள் அருகில் அமர்ந்து அதை வேடிக்கை மட்டும்மே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். வை.கோ இதை விட கேவலமாக கலைஞர் குடும்பத்தை வசைமாரி பொழிந்துள்ளார். ஆனால், இப்போது அவர் கக்கியது சாதி என்கிற விஷம்.

கருணாநிதியின் அப்பா நாதஸ்வர கலைஞர். அவர் சின்ன மேளக்காரர் என்கிற மக்கள் தொகையில் பிராமணர்களை விட குறைவான மக்கள் தொகை கொண்ட சாதியை சேர்ந்தவர் என்பது உலகறிந்தது. இது மறைக்கப்பட்டதல்ல. நாதஸ்வரம் ஊதும் தொழில் ஒன்றும் இழி தொழிலும் அல்ல. நாதஸ்வரம் ஊதும் தொழிலை அல்லது சாதியை இழிவாக பார்க்கும் வை.கோ தான் இழிவானவர். 


நாங்கள் ஆண்ட சாதி என கொக்கறிக்கும் தேவர், வன்னியர், கொங்கு கவுண்ட தலைவர்களுக்கு நான் சலைத்தவனில்லை என அப்பட்டமாக காட்டிவிட்டார் வை.கோ. இதற்கு முன்பு, மதுவுக்கு எதிராக வை.கோவின் சொந்தவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அதற்கு ஆதரவு தெரிவிக்கபோன, திருமாவை நீயெல்லாம் என் ஊரில் பேசக்கூடாது, போ அப்படி என தன் சாதி வெறியை காட்டியவர் தான் வை.கோ. அதே வை.கோவாகட்டும், இடதுசாரி தலைவர்களான ஜீ.ரா, முத்தரசனாகட்டும். மநகூவில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, நல்லக்கண்ணு, திருமா பெயரை முன் வைத்து அவரது தரப்பினர் கோரிக்கை விடுத்தபோது, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்கு முன்பே அறிவிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என கூவினார்கள். அவர்களே, தேமுதிக அலுவலகம் போய், கேப்டன் நலக்கூட்டணி, கேப்டன் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்தபோது, தமிழ்தேசியம் பேசியவர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். ஆதித்தமிழர் சாதியை சேர்ந்த திருமா, நல்லக்கண்ணுவை முதலமைச்சராக முன் நிறுத்துங்கள் என்றபோது கோபமாக மறுத்து கத்திய வை.கோ, இப்போது விஜயகாந்த்தை ஏற்றுக்கொண்டது, இருவரும் நாயுடு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தானே என கேட்டார்கள். இன்று வரை அதற்கு வை.கோவிடம் பதில்யில்லை.

அவர்களுக்கு அன்று அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் அதே வை.கோ இன்று சொல்லாமல் சொல்லிவிட்டார். ஆம் என் மனதில் உள்ள சாதிவெறி தான் திருமாவை, நல்லக்கண்ணுவை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளாமல் போனது என்று.

சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்களை நம்பிவிடலாம், முற்போக்கு முகமுடி போட்ட இந்த சாதிவெறியனை தான் முதலில் அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

மக்கள் விருப்பத்துக்கு எதிராக மாறினால் கட்சிகள் காணாமல்போகும்.



சமீபத்தில் அரசியல் ஆய்வாளர்களுடனான கலந்துரையாடலில் நான் சொன்னது தான். மக்களின் எதிர்பார்ப்புக்கு, அவர்கள் விரும்பியதற்க்கு எதிராக எது நடந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் நினைப்பது போல் நடந்தால் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், இல்லையேல் தூக்கி போட்டு அழித்துவிடுவார்கள். கடந்த கால தேர்தல்களின் போது மதிமுக, பாமகவை இப்படி காலி செய்த மக்கள் இந்த தேர்தலில் தேமுதிகவை காலி செய்யவுள்ளார்கள்.

பொடா சட்டத்தின் கீழ் ஜெவால் சட்டத்துக்கு புறம்பாக சிறையில் அடைக்கப்பட்ட வை.கோ, கலைஞர் அழைக்கிறார் வருகிறேன் என ஓராண்டுக்கு பின் பிணையில் வெளியே வந்தார். 2004 நாடாளமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து நான்கு இடங்களில் நின்று வெற்றி பெற்றது மதிமுக. 2006 சட்டமன்ற தேர்தல், திமுகவுடன் கூட்டணியில் இருந்தவர் அதிக சீட்க்கும் 40 கோடிக்கு ஆசைப்பட்டு அதிமுகவுக்கு செல்கிறார் என தமிழக ஏடுகள் கிசுகிசுத்தபோது, மக்கள் நம்பவில்லை. மக்கள் மட்டும்மல்ல வை.கோவின் தாயாரே, என் மகன் அப்படி செய்யமாட்டான் என்றார். அவர் பேட்டி அச்சாகி வந்த பேப்பர் மை காய்வதற்க்குள் வை.கோ அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். நான் அறிந்தவரையில் மக்கள் மனதில் இருந்து வை.கோ நீங்கியது அப்போதுதான். காரணம், மக்கள் வை.கோவை நம்பினார்கள், வை.கோ ஏமாற்றினார். மக்களை ஏமாற்றிய வை.கோவை மக்கள் புறக்கணித்தார்கள். அதனால் தான் இன்று அவர் கட்சி ஒரு வார்டு கவுன்சிலராக கூட ஜெயிக்க முடியாத அளவுக்கு பலமிழந்து போனது.

இன்று பாமக தனித்து நிற்கும் முடிவை அன்புமணி எடுக்க காரணம், முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்ல. தன் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், வன்னிய மக்களே அந்த கட்சியை புறக்கணித்ததால் மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்க நினைக்கிறார். அதனால் தான் தனித்து நிற்கிறேன் என்கிறார். மக்கள் மனதில் இருந்து பாமக விலக காரணம், 2004 நாடாளமன்ற தேர்தல், 2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்தது பாமக. 2004ல் பாமக 6 தொகுதிகளில் நின்றதாக நினைவு. ராமதாஸ் – நடிகர் ரஜினியின் தனிப்பட்ட மோதலில் அந்த தேர்தலில் பாமக தோற்க வேண்டும் என ரஜினி வாய்ஸ் தந்தார். ஆனால் அந்த வாய்ஸ் எடுபடாமல் பாமக வெற்றி பெற்றது. அதே பாமக, 2009 நாடாளமன்ற தேர்தலில் 7 சீட் தருகிறார்கள் என அதிமுக கூட்டணிக்கு போக முடிவு செய்துள்ளது என்ற செய்தி வெளியானபோது, கூட்டணி மாறினால் ராமதாஸ்க்கு, மக்கள் மத்தியில் பெரும் சரிவு ஏற்படும் என்றார்கள், அதை அவரும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவரது கட்சியினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பாமக. அது நின்ற 7 இடங்களிலும் தோல்வி. அதே ராமதாஸ் 2011ல் மீண்டும் திமுக கூட்டணிக்கு போகிறார் என தகவல் பரவியது. ராமதாஸ் போனால் மக்கள் மத்தியில் இன்னும் இமேஜ் காலியாகிவிடும் என்றார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் திமுகவோடு கூட்டணி வைத்தார் சரிவை சந்தித்தார்.


மதிமுக, பாமக என்றில்லை திமுகவும் மக்கள் நினைத்ததுக்கு மாறாக ஒரு முடிவு எடுக்க அதற்கும் தண்டனை தந்தார்கள். 2011 சட்டமன்ற தேர்தலில், திமுக தோற்கும் என மக்கள் நம்பினார்கள். ஆனால் பெரிய அளவிலான சரிவை கொடுத்ததுக்கு முக்கிய காரணம், 2ஜியோ, குறுநில மன்னர்களோ காரணமல்ல. காங்கிரஸ்க்கு 63 இடங்களை தந்ததை தான் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சி தலைவர்களை விட தொண்டர்கள் குறைவான காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை இடங்களா என மக்கள் அதிர்ந்தார்கள் அதனால் தான் பெரும் தோல்வியை திமுகவுக்கு தந்தார்கள்.

பத்திரிக்கையாளர்களிடமும், மீடியா மைக் முன்பும் வந்து யார் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என மக்கள் தங்களது கருத்துக்களை கூற மாட்டார்கள். ஆனால், யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் முடிவு செய்து வைத்துக்கொண்டு இருப்பார்கள். அதை கட்சிகள் தான் உள் வாங்கிக்கொள்ள வேண்டும். மக்கள் நினைப்பதற்கு மாறாக கட்சி தலைமை முடிவு எடுக்கும் போது, தங்கள் மனதில் இருந்து அந்த கட்சியை தூக்கி வீசிவிடுவார்கள்.

இந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அப்படி ஒரு தப்பை செய்துவிட்டது.  

திமுகவுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என பலமுறை வாக்களித்த 80 வயது பெருசு முதல் முதல் முறை வாக்களிக்க போகும் 18 வயது சிறுசு வரை நம்பினார்கள். அந்த நம்பிக்கையை தேமுதிக ஏமாற்றியது. ஏமாற்றியது மட்டும்மல்லாமல், நான் தான் கிங் என்றதை மக்கள் காமெடியாக தான் பார்த்தார்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு யாராலும் இப்போதைக்கு தமிழகத்தில் முதல்வராக முடியாது என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக. இதை நான் தான் அடுத்த கிங் என்பவரும், கிங் மேக்கர்களுக்கு புரியாமல் இருக்கலாம், மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் கிங் என்பரை கேலியாக பார்க்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் ஆளும்கட்சியாகவுள்ள அதிமுக மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி உருவாகியுள்ளது. அதிமுகவை எதிர்க்கும் சக்தி இப்போதுக்கு திமுகவுக்கு மட்டும்மே உள்ளது என்பதாலே திமுக கூட்டணி பலம் பெற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதோடு, அதிமுகவால் பாதிக்கப்பட்ட தேமுதிக திமுகவோடு சேர்ந்தால் மட்டும்மே ஆளும்கட்சியான அதிமுகவை வீழ்த்த முடியும் என மக்கள் நம்பினார்கள்.

ஆனால், அந்த நம்பிக்கைக்கு மாறாக, மக்கள் நலக்கூட்டணியோடு தேமுதிக கூட்டு என்றதை கம்யூனிஸ்ட்டுகளும், மதிமுகவினர் வேண்டுமானால் கொண்டாடியிருக்கலாம். தேமுதிக தொண்டர்கள் அதை விரும்பவில்லை. அதைவிட முக்கியம் மக்கள் விரும்பவில்லை. மநகூவையே விரும்பாத மக்கள் தேமுதிக அந்த கூட்டணியில் இணைந்ததை பரிதாபமாக தான் பார்க்கிறார்கள். விஜயகாந்த் கட்சி காலி என்பதை பிற கட்சிகள் பேசவில்லை. மக்கள் பேசினார்கள். அவர்கள் பேச காரணம், கள எதார்த்தம் அவர்களுக்கு தான் தெரியும்.

விஜயகாந்த்துடன் கூட்டணி வைக்க திமுக பண பேரம் பேசியது என வை.கோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தில் அமைக்கும் கூட்டணிக்கு பின்னால் உள்ள பேரம் மக்களுக்கும் நன்றாக தெரியும். பேரம் பற்றி மக்களுக்கு கவலையில்லை. அவர்களுக்கு தேவை தாங்கள் நினைப்பது நடக்க வேண்டும். அதுவே அவர்களது கவலை. அது நடக்காதபோது அவர்கள் யாராகயிருந்தாலும் தூக்கிவீசிவிடுவார்கள்.

மதிமுக, பாமக வரிசையில் தேமுதிக இணைந்துள்ளது.................