செவ்வாய், ஏப்ரல் 19, 2016

ஜெவின் ஆணவபுத்தி............


ஜெ வின் பிரச்சார மேடை அமைப்பை பிரபலமான கருத்து கந்தசாமிகள் ( அரசியல்விமர்சகர்கள், சமூகநீதி பேசுபவர்கள், மனித உரிமை போராளிகள், நடுநிலை தவறாத தமிழக தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்கள் ) யாராவது விமர்சிப்பார்கள், கருத்து சொல்வார்கள் என நானும் பார்த்து பார்த்து ஏங்கியதே மிச்சம். காத்திருந்தது போதும் நாமளாவது மனதில் உள்ளதை சொல்லிவிடுவோம் என்பதாலே இந்த கட்டுரை.......

ஒவ்வொரு முறையும் தேர்தல் களம் சில கட்சிகளுக்கு வித்தியாசப்படுத்தி காட்டிக்கொண்டே வருகிறது. ஒருக்காலத்தில் ஆட்சிக்கட்டில் அமர்ந்திருக்கும் போதே ஏழை மக்களை பார்த்தால் ஓடிப்போய் கட்டிப்பிடித்து போட்டோ பிடித்து பப்ளிசிட்டி தேடிய அதிமுகவை தொடங்கி ஆட்சியை பிடித்தார் நடிகர் எம்.ஜி.ஆர். அதன்பின் அந்த கட்சியை வழிநடத்தும் ஜெ தான் இப்போது மேடையில் தன் கட்சி நிர்வாகிகளையே அருகில் உட்கார வைக்காமல் ஓரு ஸ்டெப் கீழே இறக்கி உட்கார வைத்துள்ளார்.

இளம் வயதில் சாதி தெரியாது, 40 வயதுக்கு பின் சாதி பாசம் வரும், 50 வயதுக்கு பின் சாதிவெறியாக அது மாறிவிடும் என கிராமத்தில் சொல்வார்கள். அது நிகழ்காலத்தில் நாம் கண்டு வரும் நிஜம். ( இப்போது 15 வயதிலேயே சாதி வெறியை ஊட்டுகிறார்கள் ). ஜெ வுக்கு சாதி வெறி உச்சத்தில் உள்ளது. மக்கள் முன் அது இல்லாதது போல் காட்டுகிறார்.

கடந்த காலங்களில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, கட்சியினருடன் சரிசமமாக தான் மேடையில் உட்கார்ந்திருந்தார். ஏன் மிகவும் கொடுங்கோல் ஆட்சியை நடத்திய 91-96 காலக்கட்டத்தில் கூட தனது அடிமைக்கூட்டத்தை மேடையில் உட்கார வைத்து படம் காட்டினார். அதன்பிறகான காலக்கட்டத்தில் தன் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை மேடையில் கொஞ்சம் தள்ளி உட்காரவைத்தார், பின்பு அந்த இடைவெளி அதிகரித்து அதிகரித்து இப்போது 2016 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒருபடி இறக்கி கீழே உட்கார வைத்துள்ளார்.

இது ஆணவபுத்தி மட்டும்மல்ல, குறிப்பிட்ட சாதிக்கே உள்ள ஆணவம். இதைத்தான் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வெட்ட வெளிச்சமாக ஜெயலலிதா காட்டியுள்ளார். கடந்த காலத்திலும் மக்கள் உட்பட அனைவரும் என் காலுக்கு கீழே என்பதை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிரூபித்து வருகிறார் ஜெ.

கீழ்சாதிக்காரன் என ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் இடுப்பில் இருந்த துண்டை தோளுக்கு வரவைத்து நீயும், நானும் சமம் தான் என சொல்ல வைத்த பெரியார் வாழ்ந்த இந்த மண்ணில் இப்படியொரு அசிங்கம். பணத்துக்காகவும், பதவிக்காகவும் சுயமரியாதை இழந்து வாடலாம் என்பதை அரசியல்வாதிகள் அதிலும் அதிமுகவினர் மக்களுக்கு காட்டுகிறார்கள். 

ஜெவின் அடிமைகள் தான் அப்படி உள்ளார்கள் என்றால், அவர்கள் தரும் 200 ரூபாய் பணத்துக்காகவும், ஒரு குவாட்டர்க்காக 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயிலில் மக்களும் உட்காருகிறார்கள். ஒத்த தலைவியை சுற்றி 9 ஏசிகள் ஓட, இந்த நாட்டின் எஜமானர்கள் எனச்சொல்லப்படும் மக்கள் வெளியில் காய்கிறார்கள். இந்த அநியாயம் வேறு எந்த மாநிலத்திலும் நிச்சயம் நடந்ததில்லை, இனி நடக்கவும் நடக்காது.

ஆனால் இதற்கும் தமிழ் சமூகத்தில் வக்காலத்து வாங்கவும் பலர் நடுநிலை வேடம் போட்டுக்கொண்டு உள்ளார்கள் பல அடிமைகள். அந்த பொம்பளை அப்படித்தான்பா என சகஜமாக புறம்தள்ளிவிட்டு அவரை புனிதராக்க முயல்கிறார்கள். இதையே ஒரு கருணாநிதியோ, ராமதாஸ்சோ செய்திருந்தால் இந்த அடிமை புத்தியுள்ளவர்கள் சும்மா விட்டுயிருப்பார்களா ?.

திங்கள், ஏப்ரல் 11, 2016

புரட்சிபுயல் தொண்டர்களை மிஞ்சிய காம்ரேட்டுகள்………..



முகநூல், டுவிட்டர் போன்றவற்றறில் சில ஆண்டுகளாக இயங்கி வருகிறேன். தேர்தல் காலங்களில் இணையத்தில் இயங்கும் மதிமுக தொண்டர்களை பார்த்தால் பாவமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். இப்போது மதிமுகவோடு மக்கள் நலக்கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தொண்டர்களை பார்க்கும் போது அதிலும் குறிப்பாக இடதுசாரிகளுக்காக எழுதுபவர்களை காணும்போது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

மதிமுகவின் வளர்ச்சி என்பது 2000த்திலேயே முடிந்துவிட்டது. அதன்பின் அது தேய்பிறையாகிவிட்டது என்பது அக்கட்சி தலைவரான வைகோவுக்கே நன்கு தெரியும். அதிலும் 2006க்கு பின் வைகோ தேர்தல் களத்தில் செல்லாக்காசு என்ற நிலைக்கு போனதோடு, அந்த கட்சியில் தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான பேரூராட்சிகளில் ஒருயிடத்தில் கூட வெற்றி பெற முடியாது. பேரூராட்சி தலைவர்க்கே அந்த நிலை என்றால் நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்குள் நான் போகவில்லை. அதுதான் மதிமுகவின் நிலை. இருந்தும் அவர் பின்னால் இப்போதும் இருக்கும் தொண்டர்கள் மட்டும், புரட்சிபுயல் தான் அடுத்த முதல்வர் என்கிற ரீதியிலேயே இணையத்தில் வம்பளக்கிறார்கள், அளந்துக்கொண்டே இருப்பதை கண்டு ஆச்சர்யமாக இருக்கும். தொடர் அவதானிப்புக்கு பின் தான் புரிந்தது அவர்கள் தொண்டர்களல்ல, அடிமைகள் என்று.  

கடந்த 2014 நாடாளமன்ற தேர்தலின் போது பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, தேமுதிக, புதியதலைமுறை தொலைக்காட்சி பாரிவேந்தர், முதலியார் கட்சி ஏ.சி.சண்முகம் உட்பட இன்னும் சிலர் இணைந்து அமைத்த கூட்டணி, தமிழகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என பிரச்சாரம் செய்தார்கள். அதிலும் வை.கோ ஒன்னரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறார், அவர் தான் அடுத்த அமைச்சர் என்றெல்லாம் எழுதினார்கள் இணையத்தில் இயங்கும் மதிமுக தொண்டர்கள். அதோடு, 25 தொகுதிகளை பிடிக்க போகிறோம் என எழுதினார்கள். அதை படிக்கும்போதுயெல்லாம் சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் இருந்தேன். அப்போது நண்பர்களிடம் நான் சொன்னது இதுதான் இரண்டு இடங்களில் ஜெயித்தால் பெரிய விஷயம்மென்று.

அந்த தேர்தல் முடிவு வருவதற்க்குள் மதிமுகவுக்காக இணையத்தில் இயங்குபவர்கள் எழுதிய எழுத்தை கண்டபோது, மக்களை சந்திக்கிறார்கள், அப்படியும் கள நிலவரம் தெரியாமல் எப்படி இவர்களால் வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி என எழுத முடிகிறது என நினைப்பதுண்டு. அதிலும் நீண்ட பழுத்த அனுபவம் கொண்ட பத்திரிக்கையாளர்கள் அப்போது இனி தமிழ்நாட்டில் வை.கோ தான் என எழுதினார்கள். நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் நாடாளமன்ற தேர்தல் முடிவு, தமிழகத்தில் பாஜக கூட்டணி தமிழகத்தில் புஸ்வானம் என காட்டியது. தமிழகத்தில் இரண்டு இடங்களில் அதுவும் மதமும், சாதி பற்றும் இருந்ததால் பொன்னரும், அன்புமணியும் ஜெயித்தார்கள், அவ்வளவு தான் அந்த கூட்டணியால் செய்ய முடிந்தது.

இதோ இப்போது நடைபெறுவுள்ள 2016 சட்டமன்ற தேர்தலில் முதலில் மதிமுக, விசிக, சி.பி.எம், சி.பி.ஐ இணைந்து ஏற்படுத்திய மக்கள் நலக்கூட்டணி தான் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி, நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என மீண்டும் இணையத்தில் இறங்கி அலம்பல் செய்தார்கள் மதிமுகவினர். அந்த கூட்டணியில் தேமுதிகவும், இப்போது தமாக வாசனும் இணைந்தபின், மதிமுகவினரை விட இடதுசாரிகள் பூரித்து கொண்டாடுவதை காணும்போது, க்யூபாவை மீட்ட பிடல்காஸ்ட்ரோ கூட இப்படி கொண்டாடியிருக்கமாட்டாரே என எண்ண தோன்றுகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் இப்போதே ஆட்சி கட்டிலில் அமர்ந்ததுபோலவே பூரிக்கிறார்கள் தமிழக கம்யூனிஸ்ட்கள். அதிலும் ஏப்ரல் 10ந்தேதி மாமண்டூரில் நடந்த தேமுதிக – மநகூ மாநாட்டை பிரமிப்பாக பேசுகிறார்கள். அந்த மாநாட்டுக்கு வந்ததே 15 ஆயிரம் பேர் தான் என்கிறார்கள் விசிக்கள். அப்படிப்பட்ட மாநாட்டை பிரமாண்டம் என்கிறார்கள். இடதுசாரிகளுக்கு 500 பேரும், வை.கோவுக்கு 1000 பேரும், விசிகாவுக்கு 2000 பேர் வந்தாலே அது பிரமாண்ட தான். அதனால் அவர்கள் பூரிப்பதில் அர்த்தம்மிருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் சிலர் சிலாகிப்பதை தான் எப்படி என புரிந்துக்கொள்ள முடியவில்லை. பத்திரிக்கை நண்பர்களே, நாடாளமன்ற தேர்தலில் தேமுதிக, பாமக, பாஜக, மதிமுக, சின்ன சின்ன இயக்கங்கள் நடத்தும் பெரும் கோட்டீஸ்வரர்கள் இருந்தபோதே அந்த கூட்டணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள், தமாக உள்ள கூட்டணியை பெரிய வெற்றி கூட்டணி என சிலாகிக்கிறிர்களே எந்த அடிப்படையில் அப்படி புகழ்கிறிர்கள் என விளக்கினால் நன்றாக இருக்கும்.

மதிமுக தலைவர் மற்றும் தொண்டர்களை மிஞ்சி இணையத்தில் சலம்பும் இடதுசாரிகளே, நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள், மேடையில் உட்கார இடம்மில்லாமல் தவித்தோம் என நீங்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், ஆனால் உங்கள் கூட்டணியிடம் பூத்தில் உட்கார தொண்டர்கள் கிடையாது என்பதே எதார்த்தம். அதை தேமுதிக, விசிக தொண்டர்கள் நன்றாக உணர்ந்து வைத்துள்ளார்கள். அவர்களை போல் இருக்க பழகிக்கொள்ளுங்கள். எதார்த்தத்தை பேசுங்கள், ஏன் எனில் மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

சனி, ஏப்ரல் 09, 2016

ஆளும்கட்சி மோசடியை எழுதினால் பணம் வாங்குவதாக பாய்ச்சல்.


இப்போது, இணையத்தில் பரபரப்பாக எழுதப்படும் விவகாரமாக இருப்பது, பணம் கொடுத்து எழுத வைப்பது என்கிற விவகாரம் தான். இந்தியன் எக்ஸ்பிரஸ் என்கிற ஆங்கில நாளேட்டில் முதலில் வெளியாகி பின்னர் அதை காப்பி பேஸ்ட் செய்து தமிழ் செய்தித்தாள்கள் சிலவற்றில் வந்துள்ள அந்த செய்தியில் அந்த தனியார் நிறுவனம் ஒரு கட்டுரை தருமாம். அந்த கட்டுரையை ஒருவர் காப்பி செய்து தனது பக்கத்தில் வெளியிட்டால் 200 ரூபாய் பணம் தருவோம், இதை திமுகவுக்காக செய்வதாக அந்த நிறுவன பிரதிநிதி பதிவரிடம் சொன்னதாக சொல்கிறது செய்தி. ஒரு நாளைக்கு 3 கட்டுரைகள் தருவார்களாம். எத்தனை பேர் பதிவிடுகிறார்களோ அத்தனை பேருக்கும் பணமாம். இதை கேட்டு சிரிப்பாய் இருக்கிறது.

இன்று ஒரு தகவல் போட்டால் அது பிடித்திருந்தால் ஷேரிங் ஆகிறது. இப்படி ஒரு கட்டுரை சில நேரங்களில் 100, 200 ஷேரிங் ஆகிறது. அப்படியாயின் எவ்வளவு தருவார்கள். ஒரே கட்டுரையை 100 பிரபல பதிவர்கள் ஷேரிங் செய்தால் படிப்பவன் காப்பி பேஸ்ட் என தெரிந்து சிரிக்கமாட்டானா ?. அதோடு, ஒரு நிறுவனம் மூன்று விதமாக தினமும் 3 கட்டுரை?. அந்த மூன்று கட்டுரைகளையும் அரசியல் சாராத பிரபல பதிவர்கள் பதிவிட்டால், அதை மற்ற பிரபல பதிவர்கள் காப்பி பேஸ்ட் செய்தால் அது தெரிந்துவிடாதா ?. தொடர்ந்து பதிவிட்டால் அவர்கள் மீது இரண்டாவது நாளே கட்சி முத்திரை குத்தப்படும் பின் எப்படி அவன் பதிவை ஏற்றுக்கொள்வார்கள் ?. அதோடு, நிறுவனங்கள் கட்டுரை எழுதும் லட்சணம் தெரியாதா?.

திமுகவில் பேச, எழுத ஆட்களாயில்லை. திமுகவை விடுங்கள் திமுகவை ஆதரித்து எழுதுபவர்களின் கட்டுரைகளை தொகுத்து 100 பக்கம் கொண்ட புத்தகமாக தினமும் ஒரு புத்தகம் என வெளியிட தொடங்கினால் தேர்தல் முடிந்து ரிசல்ட் வரும் வரை வெளியிடலாம். அத்தனை கட்டுரைகள் உள்ளன. அவையெல்லாம்மே ஆதாரத்தோடு எழுதப்பட்டவை. இந்த லட்சணத்தில் அந்த கட்சி ஒரு நிறுவனத்திடம் பணம் தந்து பதிவர்களிடம் கட்டுரையை தந்து பிரச்சுரிக்க சொல்கிறதாம்.

அந்த தனியார் நிறுவனம் பேசியதாக ஒரு ஆடியோவை முதலில் வெளியிட்டார்கள், பின்னர் அதே நிறுவனம் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டதாக இப்போது செய்தி எழுதுகிறது. இன்னும் எத்தனை புளுகு வேண்டுமானாலும் சொல்லட்டும். எட்டு நாளைக்கு கூட அந்த புளுகு தாங்காது.

அந்த செய்தியில் குறிப்பிடுவது போல அப்படி ஒரு விவகாரத்தை திமுக தலைமை கையில் எடுப்பதற்கான அவசியம் அந்த கட்சிக்கு இன்றுவரையில்லை. அதற்கான காரணங்களை கீழே பார்க்கலாம். அதற்கு முன் இந்த கட்டுரை அதிமுகவை சார்ந்தவர்களுக்கோ, பிற கட்சியை சார்ந்தவர்களுக்கோ, பொதுமக்களுக்கானதல்ல. நடுநிலை வேடம் தரித்த அதிமுகவினருக்காக. யார் நடுநிலை அதிமுகவினர் என்கிறிர்களா?. எழுத்தாளர் மாலன், ஞானி, கோயல், பத்ரி, வெங்கட்ராமன் போன்று தமிழகம் முழுவதும் மனதுக்குள் ஜெ விசுவாசிகளாகவும், வெளியே ஜெவையும், கருணாநிதியையும் எதிர்ப்பது போல் நடுநிலை வேடம் போடுபவர்களுக்காக எழுதப்படும் கட்டுரை.

இதை படிக்கும்போதே எவ்வளவு வாங்கினாய் என கேட்கலாம், இனி இணையத்தில் யாரைப்பற்றி எழுதினாலும் காசுக்காக எழுதியிருப்பான் என நீங்கள் பேசினால் அதுதான் இந்த விவகாரத்தை கிளப்பி விட்டவர்களின் வெற்றி. சரி விவகாரத்துக்கு வருவோம்.

2008 காலக்கட்டம், முகநூல் பிரபலமாகாத காலத்தில் ஆர்குட், ஹாய்5 போன்ற சில சமூக தளங்கள் இருந்தபோதிலிருந்தே இணையத்தின் வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டவர்கள் திமுகவின் ஆதரவாளர்கள் மற்றும் மதிமுக ஆதரவாளர்கள். கொள்கை ரீதியானவர்கள் திமுக பற்றி எழுதிக்கொண்டு இருந்தார்கள். மதிமுகவினருக்கு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழரும், அதன் ஆதரவாளர்கள் ஆதரவு தந்து எழுதிக்கொண்டு இருந்தார்கள்.

காலப்போக்கில் பிளாக், வோல்ட்பிரஸ், முகநூல் வளர்ச்சி பெற்ற பின், பலரும் அதில் இணைந்தார்கள். 2009ல் ஈழப்போராட்டமும், 2ஜி விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, 2ஜியில் கொள்ளையடித்துவிட்டார்கள், அதனால் ஈழவிவகாரத்தில் திமுக தலையிடவில்லை என கோயாபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் உலகத்தை நம்ப வைத்தார்கள். அப்போது, திமுகவில் உறுப்பினராகயில்லாத கொள்கை ரீதியிலான ஆதரவாளர்கள், ஈழப்பிரச்சனையில் திமுக எந்தளவுக்கு இறங்கி உதவ முடியும் என்பதையும், அதேபோல் 2ஜி விவகாரத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கொள்ளையடிக்க முடியாது, இழப்பு ஏற்படுத்தவும் முடியாது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கினார்கள். 2009ல் திமுக ஆதரவாளர்கள் எழுதி விளக்கியதை தான், பிற்காலத்தில் இந்த பிரச்சனையை பற்ற வைத்த ட்ராய் தலைவரும், சிபிஐயும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு அவ்வளவு நஷ்டம் கிடையாது எனச்சொன்னார்கள். இப்படி திமுக மீது இந்த நிமிடம் வரை வாரி இறைக்கப்படும் சேற்றை, வீசியவர்களே துடைப்பவர்களாக மாற்றுவது திமுகவுக்காக இணையத்தில் செயல்படும் அந்த கட்சியின் கட்சி உறுப்பினர் அல்லாத ஆதரவாளர்கள் தான்.

தமிழகத்தில் தற்போது ஆளும்கட்சியாக உள்ள ஜெயலலிதாவின் ஊழல்களை, தவறுகளை, நிர்வாக திறமையில்லாதவற்றை எழுத பத்திரிக்கைகள், செய்தியாக ஒளிப்பரப்ப தொலைகட்சிகள் மறுக்கின்றபோதிலும் படித்தவர்கள் மத்தியில் கொண்டும் போய் சேர்ப்பவர்களாக இருப்பவர்கள் திமுகவின் இந்த இணைய ஆதரவாளர்கள் தான். இதுதான் ஜெவை காக்கும் கரங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகாரம் இருந்தால், சாதியுணர்வு இருந்தால் எதை வேண்டுமானாலும் தடுக்கலாம் என நினைத்தார்கள் அதன்படியே ஜெவுக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கி அவரை காக்கிறர்கள் பதறுகிறார்கள். அது பொய்யான கட்டப்பட்ட பிம்பம் என்பதை இணையத்தில் இயங்குபவர்கள் சுட்டிக்காட்டும் போது அவர்களால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. 


கடந்த 2014 பாராளமன்ற தேர்தல் முடிவுக்கு பின், நாடாளமன்ற தேர்தலில் தமிழகத்தில் 50 லட்சம் போலி வாக்காளர்கள் நுழைத்தது, அந்த 50 லட்சம் வாக்குகளை அதிமுகவுக்கு ஓட்டாக மாற்ற தேர்தல் ஆணையம் செய்த சிறப்பு ஏற்பாடுகள் பற்றி தேர்தல் முடிந்தபின், திமுகவுக்காக செயல்படும் கட்சி சாராத வழக்கறிஞர் ஒருவர், தேர்தல் ஆணைய ஆவணங்களின் அடிப்படையில் ஆதாரத்துடன் புட்டு புட்டு வைத்தார். அதை தேர்தல் ஆணையத்துக்கும் புகாராக அனுப்பினார். அது தாமதமாக தான் திமுக தலைவரின் பார்வைக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பு மாவட்டந்தோறும் போலியாக உள்ள வாக்காளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு திமுகவினர் ஆணையத்திடம் புகார் சொல்ல அதன்பின்பே ஆணையம் அவர்களை நீக்கியது. அப்படி அவர்கள் இதுவரை நீக்கியுள்ளது மட்டும் 20 லட்சம் சொச்சம். இன்னமும் இருப்பது 30 லட்சம். இதுவரை இதுப்பற்றி கேள்வி கேட்க நடுநிலை வேடம் போடும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், மாற்று அணி எனச்சொல்லும் கட்சிகள் உட்பட யாருக்கும் துப்பில்லை. அதை வெட்ட வெளிச்சமாக்கியது திமுக ஆதரவாளர் என இணையத்தின் இயங்கும் செயல்பாட்டாளர் தான்.

கடந்த வாரத்தில் அதிமுக வெற்றி என்கிற கருத்துகணிப்பு மோசடியை துகிலுறுத்தியது இணையத்தில் இயங்குபவர்கள் தான். கடந்த காலங்களில் இந்தியா டுடே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி உட்பட பல பிரபல நிறுவனங்கள் சி வேட்டர் என்ற கருத்து கணிப்பு நிறுவனத்துடன் இணைந்து பல கருத்து கணிப்புகளை நடத்தியது. கடந்த பாராளமன்ற தேர்தலில் ஒரு இந்தி தொலைக்காட்சி, ஒரு அரசியல் கட்சி பிரதிநிதிபோல் கருத்து கணிப்பு நடத்தும் 11 நிறுவனங்களிடம் பேசியபோது, பணம் தந்தால் இரண்டு விதமான கருத்து கணிப்பு தருவோம். ஒன்று ஜெயிக்கும் என இருக்கும், மற்றொன்றில் தோல்வி என இருக்கும் என்றது. இந்த மோசடியை வீடியோ பதிவோடு வெளியிட்டது அந்த நிறுவனம். இதனால் பல பிரபல செய்தி நிறுவனங்களுக்கு கருத்து கணிப்பு எடுத்து தந்த அந்த நிறுவனத்தோடு இனி தொடர்பில்லை என இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உட்பட பல செய்தி நிறுவனங்கள் அறிவித்தன. இதோ இப்போது, 2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என அதே சி வோட்டர் என்ற நிறுவனத்தின் கருத்து கணிப்பை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதுப்பற்றி இங்கு பேச எந்த நடுநிலை வேடதாரிகளுக்கும் துணிவில்லை. இதை அம்பலப்படுத்தியது இணையத்தில் இயங்கும் செயல்பாட்டாளர்கள் தான்.

இப்படி அதிமுக தலைவி ஜெ வின் மோசடியை முகமுடியை கிழிப்பதால் தான் கருத்தை கருத்தால் எதிர்க்கொள்ள முடியாமல் குறுக்கு வழி தேடுகிறார்கள். குறுக்கு வழி தேடுபவன் பிராமணன் என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பொய்யை உண்மை போன்று கூறி மக்களை நம்ப வைக்க வேண்டும் என்கிற வித்தையை கற்று வைத்திருக்கும் அவர்கள் தான் இப்போது ஜெவை காக்க பணம் வாங்கிக்கொண்டு ஜெயலலிதா பற்றி தவறாக எழுதுகிறார்கள் என்கிற விஷத்தை தூவுகிறார்கள். தவறாக எழுதினால், உண்மை இதுதான் என ஆதாரபூர்வமாக எழுத வேண்டாம்மா. எழுதமாட்டார்கள். ஏன் எனில் அவர்களால் எழுத முடியாத அளவுக்கு சொல்லப்படுவதெல்லாம் உண்மை. அதனால் தான் எழுதுபவர்களை தடுக்க பணம் வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என புது யுக்தியை கையாள்கிறார்கள்.

குரு படத்தில் இயக்குநர் மணிரத்தினம் ஒரு வசனம் வைத்திருப்பார், ஏஜென்ட் என்கிற வார்த்தை நாட்ல கெட்ட வார்த்தையா மாறனும், என்ன வேண்ணா செய்ங்க, எவ்வளவு வேணும்ன்னாலும் செலவு செய்ங்க என்பார். அதேபோல் தான் இன்று, இணையத்தில் எழுதுபவர்கள் பணம் வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என்பது.

திமுகவுக்காக இன்று அந்த கட்சியை சேர்ந்த பலர் இணையத்தில் எழுதுகிறார்கள். அவர்கள் மீது இவர்கள் குற்றம்சாட்டவில்லை. ஏன் எனில் திமுககாரர்கள் எழுதுவது பற்றி கவலையில்ல, கட்சிக்காரர்கள் அப்படித்தான் செயல்படுவர்கள் அதனால் மக்களிடத்தில் மாற்றம் ஏற்படாது. ஆனால், கட்சியில் எந்த பிரிதிபலனும் இல்லாமல் இன்றளவும் தர்க்க ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எழுத திமுக ஆதரவார்கள் என்கிற வெளிப்படை பிம்பத்தில் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அவர்களின் பெயரை என்னால் நிச்சயம் பட்டியலிட முடியும். அவர்கள் மீது தான் இவர்கள் தாக்குதல் தொடுக்க தொடங்கியுள்ளார்கள். ஏன் எனில் அவர்களின் கருத்துகள் படித்தவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தான். பணம் தந்து எழுத வைக்கிறார்கள் என்கிற தாக்குதல் இதனால் அவர்கள் பயந்து ஓடிவிடுவார்கள் என்கிற நப்பாசை. ஒன்றை தெரிந்துக்கொள்ளுங்கள்...........

திமுக பணம் தரும் அளவுக்கு வளர்ந்திருக்கலாம்................ பணம் வாங்கிக்கொண்டு எழுதும் அளவுக்கு தன்மானமும், கொள்கையும் இல்லாதவர்கள்யில்லை அதை ஆதரிப்பவர்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.