வெள்ளி, பிப்ரவரி 24, 2012

காவல்துறையின் கொலைவெறி.



தங்களது இயலாமையை வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளது தமிழக காவல்துறை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழக தலைநகரான சென்னையில் பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் பட்டபகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர் கொள்ளையர்கள். திருப்பூரில் ஜாய் ஆலுக்காஸ் தங்க நகை விற்பனையகத்தில் இரவில் ஓட்டை போட்டு 14 கோடி மதிப்பிளான தங்கத்தை கொள்ளையடித்து போய்வுள்ளார்கள். இது மட்டுமல்ல தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திலும் சிறியதும், பெரியதும்மாக கொள்ளை தமிழகத்தில் தொடர் கொள்ளையாக மாறியுள்ளன. 

இதில் எதிலும்மே கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு காரணம் இரண்டு. ஒன்று, காவல்துறை எதிர்கட்சிகள் மீதும், அதிகாரத்தில் உள்ள ஆளுங்கட்சி தலைமைக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து தலைமையிடம் சபாஷ் வாங்குவதில் முனைப்பாக உள்ளனர். இரண்டாவது காவலர்களை விட கொள்ளையர்கள் அதீத புத்திசாலிகளாக இருக்கிறார்கள். 

20ந்தேதி சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடந்த 14 லட்சம் கொள்ளையில் 5 பேர் ஈடுபட்டதாக காவல்துறை கூறியது. 22ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் இருந்த கொள்ளையர்களை என்கவுன்டர் செய்தது. அவர்களை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் எங்களை நோக்கி சுட்டதால் பதில் தாக்குதலில் அவர்கள் உயிர் இழந்துள்ளார்கள் என எப்போதும் போல் காவல்துறை திரைக்கதை, வசனம் பேசியது. ஆனாலும் இறந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் தானா என்பதில் பெருத்த சந்தேகம் உள்ளது. 

காரணம், 20ந்தேதி கொள்ளை நடந்தது. 22ந்தேதி மதியம் கொள்ளையர்கள் இவனாக இருக்கலாம் என ஒருவனின் புகைப்படம் வெளியிடப்பட்டது. 22ந்தேதி நள்ளிரவு புகைப்படம் வெளியிடப்பட்டவன், அவனோடு சேர்ந்து நான்கு பேர் என 5 பேர் சுட்டுக்கொள்ளபட்டு உள்ளார்கள். 


நமக்கு ஏற்படும் சந்தேகங்கள். 

1. வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இருந்தவன் வங்கிகளுக்கு சென்று நோட்டம் விட்டான் இதேபாருங்கள் வீடியோ ஆதாரம் என காட்டப்பட்டது. ஒருவன் பல வங்கிக்கு போனால் அவன் கொள்ளையடிக்க தான் போனான் என காவல்துறை எதை வைத்து முடிவுக்கு வந்தது?. 
2. குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் அவன் தங்கியிருந்த வீடு பற்றி தகவல் தங்களுக்கு வந்தது எனக்கூறும் காவல்துறை. அவன் தான் அங்கு தங்கியிருக்கிறான் என்பதை எப்படி உறுதி செய்தது?. அப்படியே உறுதி செய்திருந்தாலும் அவனுடன் இருப்பவர்கள் தான் கொள்ளையடித்தார்கள் என்று எந்த வகையில் உறுதி செய்தது. 
3. அவர்கள் தான் கொள்ளையடித்தார்கள் என வைத்துக்கொண்டாலும் அவர்களை உயிருடன் பிடிக்க வழியே இல்லையா?. மயக்க மருந்து புகை அடித்திருந்தால் மயங்கியிருப்பார்கள் அவர்களை பிடித்து அவனுடன் வந்தவர்கள் யார், யார் என்பதை விசாரித்து கண்டறிந்திருக்கலாமே?. 
4. இதையெல்லாம் எதையும் காவல்துறை செய்யவில்லை என்பதால் ஏற்படும் மிகப்பெரிய சந்தேகம். அவர்கள் உண்மையிலேயே கொள்ளையர்கள் தானா ? அல்லது அப்பாவிகளா ?. 

இவை எதற்குமே தமிழக காவல்துறையிடம்மிருந்து உருப்படியான பதில் கிடைக்கப்போவதில்லை.

தமிழக காவல்துறை தனது கையாலாகாத தனத்தை மறைக்க ஒரே நேரத்தில் 5பேரை என்கெவுண்டர் செய்துள்ளது. ஒரு குற்றவாளியை சுட்டுக்கொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது?. இவர்கள் சட்டத்தையும், மக்களையும் காக்க வந்தார்களா இல்லை திருடுபவனை, கொள்ளையடிப்பவனை, ரேப் செய்பவனை கொல்ல வந்தார்களா?. 

திருடுபவன், கொள்ளையடிப்பவனை கொல்ல வேண்டும்மென்றால் இவர்கள் பாதுகாப்பு தரும் அதிகாரத்தில் உள்ளவர்களை தான் முதலில் கொன்றுயிருக்க வேண்டும். அவர்களை அப்படி செய்ய இவர்களுக்கு தைாியம் இருக்கிறதா?. 

லட்சங்களில் கொள்ளையடிப்பவனை கொல்லும் இவர்கள் வீரர்களா?. கோழைகள். இவர்கள் மக்களை காக்க வந்த வீரர்களள்ள. தங்களை காத்துக்கொள்ள, மக்களை ஏமாற்ற, அதிகாரத்தில் உள்ளவர்களின் கால்களை நக்கி பிழைப்பவர்கள். 

இவர்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்கள். காரணம், நாம் வாழ்வது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கான ‘ஜனநாயக நாட்டில்’. 

1 கருத்து:

  1. உங்கள் சந்தேகங்கள்தான் இங்கு பலருக்கும்... இதையெல்லாம் நாம சொன்னோம்னா..... நம்மை பைத்தியக்காரன்னு என்று சொல்லுவாங்க...

    பதிலளிநீக்கு