வியாழன், ஜூன் 20, 2013

அன்பே அழகானது. – பகுதி – 3.



கதைக்குள் போகும் ..............

இந்த தொடர் வல்லமை இணைய தளத்தில் வெளியிடுவதால். அதில் வெளிவந்த பின் ஒரு வாரம் அல்லது அடுத்த பாகம் வெளியிட்டபின்பே இனி எனது பக்கமான இதில் வெளியிடப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். 

தொடர்கிறது............

கிச்சனை க்ளீன் செய்துக்கொண்டு இருந்தபோது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. வெளியே வந்து கதவை திறந்தபோது வணக்கம் சார் என்றார் 45 வயது மதிக்கதக்க ஒருவர்.

சொல்லுங்க.

எம் பேரு மணி சார். ஆட்டோ ஓட்டறன். உங்களை பாக்கச்சொல்லி பாண்டியன் சார் சொல்லி அனுப்பனாரு.

அப்படியா உள்ள வாங்க.

இருக்கட்டும் சார்.

ஓன்னும்மில்ல பையனை புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்கன். என்னால அவனை தினமும் அழைச்சிம் போக முடியாது. அதனால தான் ஆட்டோவுல அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணி பாண்டியன்கிட்ட சொல்லி வச்சியிருந்தன்.

உங்களப்பத்தி பாண்டியன் சார் சொன்னாரு சார். பையனை பத்திரமா அழைச்சிம் போய் அழைச்சி வருவன், நீங்க பயப்பட தேவையில்ல. பாண்டியன் சார் பொண்ணயும் நான் தான் ஸ்கூலுக்கு அழைச்சிம் போறன்.

ஓஹோ.

இந்த ஏரியாவுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க.

8 மணிக்குள்ள வந்துடுவன் சார்.

சரிங்க. காலையில வந்து அழைச்சிம் போயிடுங்க. சாயந்தரம் ஆபிஸ்சான்ட கொண்டு வந்து விட்டுடுடனும்.

சரி சார்.

மாசத்துக்கு எவ்ளோ?.

500 ரூபா சார்.

ஒகே.

திங்கட்கிழமை ஸ்கூல் ஸ்டார்ட் பண்றாங்க.

தெரியும் சார்.

இருங்க பையனை காட்டறன் எனச்சொல்லிவிட்டு உள்பக்கம் திரும்பி ரஞ்சித் கொஞ்சம் வெளியில வா.

என்னப்பா என கேட்டபடி வந்தான்.

இவன் தான். ஆறாவது சேர்த்துயிருக்கன் பேரு ரஞ்சித்.

யாருப்பா இவரு ?.

இனிமே இந்த அங்கிள் தான் உன்னை தினமும் அவரோட ஆட்டோவுல ஸ்கூல் அழைச்சிம் போய் அழைச்சி வந்து விடப்போறார், அவர் பேரு மணி எனச்சொல்லிவிட்டு நீங்க போய்ட்டு வாங்கண்ணே என்றதும் கிளம்பினார்.

அப்போ என்னை நீ ஸ்கூல் அழைச்சிம் போகமாட்டியாப்பா என வருத்தமாகவே கேட்டான்.

நைட்டே சொன்னனேடா. உன்ன அனுப்பிட்டு காலையில வீட்ல சின்ன சின்ன வேலை பாத்துட்டு அதுக்கப்பறம் கிளம்பனா சரியா இருக்கும். உன் கூடவே கிளம்பிட்டா இருக்கற வேலை பாக்க முடியாது அதனாலத்தான். தாத்தா பாட்டி வந்ததும் நானே உன்ன அழைச்சிம் போறன் என்றபோதும் அமைதியாகவே சோபாவில் அமர்ந்திருந்தான்.

அவனது வருத்தத்தை குறைக்க ஒன்னு செய்யறன் ஈவ்னிங் உன்ன நான் வந்து பிக்கப் பண்ணிக்கறன்.

வேணாம் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என அவன் சொல்லும் போது என் மனம் பாரமாகத்தான் இருந்தது. அவன் அம்மா இருந்திருந்தா பிரச்சனையில்ல என்னப்பண்றத்து என பெருமூச்சு விட்டப்படி மீண்டும் கிச்சன்க்குள் புகுந்தேன்.

மதியத்துக்கு லஞ்ச் செய்துக்கொண்டு இருந்தபோது செல்போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது. யாருன்னு பாரு ரஞ்சித்.

தாத்தாப்பா என குரல் தந்தான். கை கழுவிவிட்டு வெளியே வரும்போது ஆன் பண்ணி பேசிக்கொண்டு இருந்தான்.

நல்லாயிருக்கன் தாத்தா. எப்ப ஊருக்கு வர்ற தாத்தா ?.

…………

சீக்கிரம் வா தாத்தா.

………….

என்னை அப்பா புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்காரு, புது டிரஸ் எடுத்து தந்தாரு. இன்னும் டூ டேஸ்ல ஸ்கூல் தாத்தா.

…………..

அப்பா இந்தா தாத்தா உங்கிட்ட பேசனுமாம் என்றபடி செல்போனை தந்தான்.

ஹலோ என்றதும்

எப்படிப்பா இருக்கா ?

நல்லாயிருக்கன்.

அவனை எதுக்கு வேற ஸ்கூல் மாத்தன ?

அந்த ஸ்கூல் நல்லாயிருக்குன்னு சொன்னாங    ;க அதான்.

நீங்க எப்ப ஊருக்கு வர்றிங்க ?.

நான் சொல்றத நீ செய் அதுக்கப்பறம் ஊருக்கு வர்றன்.

அதவிட்டுட்டு வேற ஏதாவது பேசுங்க. ஏம்ப்பா நானும் இரண்டு வருஷமா சொல்றன் நீ கேட்கமாட்டன்னா என்னப்பா அர்த்தம்.

அம்மாக்கிட்ட போனை தாங்க.

பெருமூச் விட்டவர் இந்தாடீ உங்கிட்ட பேசனுமாம்.

என்னப்பா எப்படியிருக்கற ?.

நான் நல்லாயிருக்கறன் நீங்க எப்படிம்மா இருக்கிங்க ?.

எங்கப்பா இந்த கால் மூட்டு வலி தான் அதிகமாயிருக்கு. உட்காந்தா எழுந்திருக்க முடியல, நடக்க முடியல.

டாக்டர்க்கிட்ட காட்ட வேண்டியதுதானே?

போனன் தைலம் மாதிரி ஒன்னு தந்தாங்க ஒன்னும் சரியாகல.

இங்கவாம்மா டாக்டர்கிட்ட காட்டி சரிப்பண்ணிடலாம்.

புள்ள தனியா பேரனை வச்சிக்கிட்டு கஸ்டப்படறான் போய் கூட இருக்கலாம்ன்னு சொன்னதுக்கு என் பேச்ச மதிக்காத அவன் வீட்டுக்கு நான் வரல என்னைக்கு நான் சொல்றத கேட்கறானோ அன்னைக்கு வர்றன்கிறார் உங்கப்பா. நான் என்னத்த பண்றத்து என சலித்துக்கொண்டபடியே டேய் எம்பேரன் கண்ணுலயே நிக்கறான் கொஞ்சம் கூட்டியாந்து கண்ணுல காட்டிட்டுத்தான் போயேண்டா. அவரும் ராத்திரியில எம் பேரன் என்ன பண்றானோ, ஏது பண்றானோன்னு புலம்பறாரு.

வேலை அதிகமாயிருக்கும்மா.

ஒரு மணி நேரத்தல வீட்டுக்கு வந்துடலாம் இதுக்கு போய் நேரம் இல்லைங்கறயேடா.

வர்றதுக்கு பாக்கறன். நீ உடம்ப பாத்துக்கம்மா.

அது கிடக்கட்டும் அவன்கிட்ட போனை தா என்றதும் ரஞ்சித் இந்த பாட்டி பேசனுமாம் என்றதும் ஓடி வந்து செல்போனை வாங்கிக்கொண்டான். நான் கிச்சனை நோக்கி நடந்தேன்.


நல்லாயிருக்கன் பாட்டி.

பூரி சாப்பிட்டன். அப்பா சுட்டு தந்தாரு. எப்ப ஊருக்கு வர்றிங்க என பேசிக்கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் பொருத்து கிச்சன்க்குள் வந்து அப்பா நின்;றான்.

என்னடா சொன்னாங்க பாட்டி.

ஊருக்கு வரச்சொன்னாங்க என்றவன் சற்று கேப் விட்டு போகலாமாப்பா.

உம்.

எப்போ ?

அடுத்த சன்டே போகலாம் என்றதும் குதுகலமாக ஓடினான்.

தொடரும்……………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக