வெள்ளி, செப்டம்பர் 13, 2013

தூக்குதண்டனை வியாதிக்காரர்கள்.


ஒரே நேரத்தில் தூக்குதண்டனையை குறைக்க கேட்கும் பல கருணை மனுக்களை நிராகரிப்பதும், அவர்களை வெளியுலகுக்கு தெரியாமல் உடனே தூக்கிலிடுவதும், ஒரே நேரத்தில் பலருக்கு தூக்குதண்டனை தருவதும் இந்தியாவில் மட்டும்மே சாத்தியம். 

எவ்வளவு பெரிய குற்றத்துக்கும் தூக்குதண்டனை தருவது என்பது தெரிந்தே நீதிமன்றமும், அரசாங்கமும் செய்யும் கொலை. இந்திய ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் பேருந்தில் கல்லூரி மாணவியை கூட்டாக கற்பழித்து கொலை செய்தது கொடூரமான செயல் தான். மறுப்பதற்க்கில்லை. இதே போன்ற கற்பழிப்பு, கொலைகள் இந்தியாவில் பலயிடங்களில் நடக்கத்தான் செய்கின்றன. டெல்லி மாணவிக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள், பெண்கள் போராடினார்கள். மற்றவர்களுக்காக போராடுவதற்கு முன் அவர்களுக்கு வேறு ஏதோ வேலை வந்துவிட்டது போல. 

டெல்லி பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே தூக்கிலிடவேண்டும் என விவகாரம் விசாரணையில் இருக்கும் போதே மீடியாக்கள் தீர்ப்பு எழுதின. அந்த தீர்ப்பை தான் தற்போது நீதிபதி படித்துள்ளார். ஆக இந்த தீர்ப்பு சட்டத்தின் படி கிடைக்கப்பட்ட தீர்ப்பல்ல. மரண தண்டனை தர வேண்டும் என்ற சிலரின் ‘வியாதிக்கு’ தரப்பட்ட ஊக்க மருந்து. 

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பாலியல் வல்லுறு நடக்கிறது. அதை தடுக்க தூக்குதண்டனை என்ற தண்டனையை தந்தால் திருந்திவிடமாட்டார்கள். ஏன் ஒரு தவறு நடக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும் அது தான் பிரச்சனையை தீர்க்கவழி. டெல்லி மாணவி கற்பழிப்பு நடந்த சில தினங்களில் அதே டெல்லியில் இதேபோன்று பாலியல் பிரச்சனை நடந்தது. டெல்லி மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் பெண்களை வன்புணர்வு கூட்டாகவே, தனியாகவே செய்தார்கள். செய்கிறார்கள். செய்வார்கள். 

ஒருவரை தூக்கிலிடுவதால் இது மாற்றம்மடையாது. தூக்கிடுவது என்பது ஒரு அறிவார்ந்த சமூகத்துக்கு அழகல்ல. 


தூக்கு தண்டனையை ஆதரிப்பவர்கள் அந்த பெண்ணின் நிலையை நினைத்துப்பாருங்கள், அந்த குடும்பத்தின் நிலையை நினைத்துப்பாருங்கள் என கேட்கிறார்கள். கொடூமை, கொடூரம் தான்.

என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். குஜராத் கலவரம் பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான். ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமிய பெண்கள் அந்த கலவரத்தின் போது தங்களது கற்பை இழந்தார்கள், கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் எத்தனை எத்தனை சீக்கிய பெண்கள், இளம் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்கள். இராஜிவ்காந்தி, இலங்கைக்கு படைகளை அனுப்பினார். ஈழப்பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். இன்றளவும் காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடல், உதவி செய்கிறார்கள், பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் இஸ்லாமிய பெண்களை வன்புணர்வு செய்கிறார்கள், சுட்டுக்கொல்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையினர், துணை இராணுவப்படையினர் தொடர்ந்து கற்பழிப்பில் ஈடுபடுகிறார்கள். 

இதில் பாதிக்கப்பட்டவர்களும் பெண்கள் தான். அவர்களுக்கும் குடும்பம்மிருந்தது, இருக்கிறது. அந்த குடும்பங்கள் உருக்குலைந்துப்போய்வுள்ளன. அவர்கள் நிலையை நினைத்துப்பார்த்து ஏன் அவர்களுக்காக பொங்கவில்லை. 

குஜராத் கலரத்துக்கு காரணமான மோடியை பதவியை விட்டு நீக்கவோ, அவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தூக்குதண்டனை வாங்கி தரவோ யாரும் குரல் கொடுக்கவில்லை. சிக்கீயர்களை கொன்றபோதும், சீக்கிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை தூக்கிலிட வேண்டும் என கேட்கவில்லை. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், பாதுகாப்பு படையினர்க்கு தூக்குதண்டனை தர வேண்டும் என ஏன் போராடவில்லை.

இதுயெல்லாம் தூக்கு தண்டனையை ஆதரிப்பவர்கள், மீடியாக்களுக்கு தெரியாதா?. தெரியும். தெரிந்தும் ஏன் அமைதியாக மவுனியாக இருக்கிறார்கள்.செய்தவர்கள் அதிகாரம் மிக்கவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வாய்செத்தவர்கள். 

அதிகாரவர்க்கம், நீதித்துறை மட்டுமல்ல பலரும் இங்கு பெரும் நடிகர்களாகவே இருக்கிறார்கள். 

‘வாழ்க ஜனநாயகம்’. 

2 கருத்துகள்:

  1. நல்ல இடுகை!
    இந்தியாவில் ஏழைகளுக்கு நீதி கிடைக்காது. எருமைநாய்க்கன் பட்டியில் பிறந்த ஒரு கிராமத்து பெண்னுக்கு இது நடநது இருந்தால்..ஒரு மயிரும் நடந்து இருக்காது!

    ஏன் நமக்கு தெரிந்தே இருக்காது: இது தான் இந்திய ஜனநாயகம்..!

    +1 வோட்டு போட்டேன்...பலரை இந்த இடுகை சென்றடைய

    பதிலளிநீக்கு
  2. Hi Raj if you think death penalty is not right,then What is the best way to reduce crime or educate the criminals ?????????????????/. You have not written anything about that. Will you answer my question my friend?

    பதிலளிநீக்கு