வியாழன், ஜூன் 20, 2013

லாலிபப் சாப்பிடத்தான் லாயக்கு ‘நடுநிலைவாதிகள்’ ?.



தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடத்துக்கு ஏழு பேர் போட்டியிடுகிறார்கள். அதில் ஆளும் கட்சியான அதிமுக 4 இடங்களை பெற்று விடும், அதிமுக ஆதரவில் நிற்கும் சி.பி.ஐ டி.ராஜா வெற்றி பெற்றுவிடுவார். மீதியுள்ள ஒருயிடத்துக்கு தான் போட்டி. அந்த ஒருயிடத்துக்கு திமுக சார்பில் கனிமொழியும், தேமுதிக சார்பில் இளங்கோவனும் போட்டியிடுகிறார்கள். வெற்றி பெற இரண்டு கட்சிகளுக்கும்மே தனிப்பட்ட பலம்மில்லை. திமுகவிடம் 22 எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். தேமுதிகவிடம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போக மீதி 22 எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். வெற்றி பெற தேவை 34. இந்த இடத்தில் தான் சிறு கட்சிகளான காங்கிரஸ், பாமக, மமக, புத போன்ற கட்சி எம்.எல்.ஏக்களின் வாக்கு வலிமை பெறுகின்றன. 

இரண்டு கட்சிகளும் தங்களுக்கு தேவையான பலத்தை பெற ஆதரவை திரட்டுகிறார்கள். இதில் என்ன தவறுயிருக்கிறது. இதனையெல்லாம் ஏன் நடுநிலை முகமுடி போட்டவர்கள் மாய்ந்து மாய்ந்து விமர்சிக்கிறார்கள் என தெரியவில்லை. இவர்கள் விமர்சனம் திமுகவை நோக்கியே இருக்கிறது. பணம் தந்து வெற்றி பெற போகிறார்கள் என விமர்சனம் செய்கிறார்கள். தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் பார்க்க நேரிட்டது. மாற்றி மாற்றி கூட்டணி வைக்கிறார்களே இவர்களுக்கு கொள்கையே கிடையாதா என கேட்கிறார் விவாதத்தை நடத்தியவர். தேவையற்ற கேள்வியிது. 

எம்.எல்.ஏ, எம்.பி, கவுன்சிலர் தேர்தலில் நிற்பவன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு வருகிறான், பணத்தை செலவு செய்கிறான், வாக்களிக்க விரும்புபவன் கேட்பதை, கேட்காததை செய்து தருகிறான். அதேதான் மாநிலங்களவை தேர்தலிலும் நடக்கிறது. இங்கு வாக்களிக்க போகிறவர்கள் எம்.எல்.ஏக்கள். அந்த எம்.எல்.ஏக்கள் கட்சி என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்ய போகிறார்கள். 

வாக்கு வைத்திருக்கும் கட்சிகளை நோக்கி தேர்தலில் நின்றுள்ள திமுக, தேமுதிக என்ற இரண்டு கட்சிகளும் போகின்றன. சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதைப்பார்த்து திமுக பணத்தால் வாக்குகளை வாங்குகிறது என்கிறார்கள். இது அரசியல் தெரியாத அடிமுட்டாள் செல்லும் விமர்சனம். திமுக என்ற கட்சி ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கட்சி, தமிழகத்தில் முதல்வர் நாற்காலி ரேசில் உள்ள இரண்டு கட்சியில் அதுவும் ஒன்று. மத்திய கூட்டணி ஆட்சிகளில் பதவியில் இருந்த கட்சி. தமிழகத்தில் அதிமுகவுக்கு அடுத்து வலிமையான வாக்கு வங்கியுள்ள கட்சி. தமிழகத்தில் எந்த கட்சி தோன்றினாலும், ஏற்கனவே இருக்கும் கட்சியாக இருந்தாலும் திமுக, அதிமுக என இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டணி வைத்தால் மட்டுமே ஒரு எம்.எல்.ஏ, எம்.பியை பெற முடியும். இதுதான் எதார்த்தம். 


எங்களுக்கு வாக்களியுங்கள் என திமுக, தேமுதிக என இரண்டு கட்சிகளும் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி கேட்கின்றனர். திமுகவா, தேமுதிகவா என்ற கேள்வி எழும் போது லாலி பப் சாப்பிடும் குழந்தைகளுக்கும் தெரியும் சின்ன கட்சிகள் திமுகவையே தேர்வு செய்யும் என்று. அதன்படியே திமுகவுக்கு ஆதரவு தருகிறார்கள். இதில் என்ன குற்றம் இருக்கிறது. 

கனிமொழிக்காக வளைந்து கொடுக்கிறார், தன்மானம்மில்லை, சுயமரியாதையில்லை என மதிமுகவினர், நடுநிலை முகமுடி போட்டவர்கள் திருச்சி.சிவாவுக்கோ அல்லது டி.கே.எஸ். இளங்கோவன்க்கோ ஏன் சீட் தரல என கேட்கின்றனர். அடுத்தவன் வீட்ட ஏன் எட்டி பாக்கறிங்க. அது அவர்கள் கட்சி விவகாரம். யாரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்பது அவர்கள் எடுக்கும் முடிவு. இதை எப்படி பார்வையாளராக உள்ள நாம் கேள்வி கேட்க முடியும். மகளுக்கு தருவது, மகனுக்கு தருவது, தெருவில் போறவனை அழைத்து வந்து தருவது என்பது கட்சி தலைமை எடுக்கும் முடிவு. இன்னார்க்கு தருவது எனக்கு புடிக்கவில்லை என்றால் அக்கட்சி தொண்டர்கள் தான் கேள்வி கேட்க முடியும். 

2ஜீ ஊழல் செய்தவருக்கு சீட் என கிண்டலோடு கேட்கிறிர்கள். ஊழல் வழக்குகள் அதிகம்முள்ள ஜெவை மக்கள் ஏற்றுக்கொண்டு இரண்டு முறை முதல்வராக்கியுள்ளனர். அப்படியிருக்கும் போது கனிமொழியை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ன நிச்சயம். பல மாநிலங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்த, அனுப்பி வைக்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதையெல்லாம் கேள்வி கேட்க தெம்பில்லாத, முதுகெலும்புயில்லாதவர்கள் திமுகவை பிராண்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

அன்பே அழகானது. – பகுதி – 3.



கதைக்குள் போகும் ..............

இந்த தொடர் வல்லமை இணைய தளத்தில் வெளியிடுவதால். அதில் வெளிவந்த பின் ஒரு வாரம் அல்லது அடுத்த பாகம் வெளியிட்டபின்பே இனி எனது பக்கமான இதில் வெளியிடப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். 

தொடர்கிறது............

கிச்சனை க்ளீன் செய்துக்கொண்டு இருந்தபோது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. வெளியே வந்து கதவை திறந்தபோது வணக்கம் சார் என்றார் 45 வயது மதிக்கதக்க ஒருவர்.

சொல்லுங்க.

எம் பேரு மணி சார். ஆட்டோ ஓட்டறன். உங்களை பாக்கச்சொல்லி பாண்டியன் சார் சொல்லி அனுப்பனாரு.

அப்படியா உள்ள வாங்க.

இருக்கட்டும் சார்.

ஓன்னும்மில்ல பையனை புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்கன். என்னால அவனை தினமும் அழைச்சிம் போக முடியாது. அதனால தான் ஆட்டோவுல அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணி பாண்டியன்கிட்ட சொல்லி வச்சியிருந்தன்.

உங்களப்பத்தி பாண்டியன் சார் சொன்னாரு சார். பையனை பத்திரமா அழைச்சிம் போய் அழைச்சி வருவன், நீங்க பயப்பட தேவையில்ல. பாண்டியன் சார் பொண்ணயும் நான் தான் ஸ்கூலுக்கு அழைச்சிம் போறன்.

ஓஹோ.

இந்த ஏரியாவுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க.

8 மணிக்குள்ள வந்துடுவன் சார்.

சரிங்க. காலையில வந்து அழைச்சிம் போயிடுங்க. சாயந்தரம் ஆபிஸ்சான்ட கொண்டு வந்து விட்டுடுடனும்.

சரி சார்.

மாசத்துக்கு எவ்ளோ?.

500 ரூபா சார்.

ஒகே.

திங்கட்கிழமை ஸ்கூல் ஸ்டார்ட் பண்றாங்க.

தெரியும் சார்.

இருங்க பையனை காட்டறன் எனச்சொல்லிவிட்டு உள்பக்கம் திரும்பி ரஞ்சித் கொஞ்சம் வெளியில வா.

என்னப்பா என கேட்டபடி வந்தான்.

இவன் தான். ஆறாவது சேர்த்துயிருக்கன் பேரு ரஞ்சித்.

யாருப்பா இவரு ?.

இனிமே இந்த அங்கிள் தான் உன்னை தினமும் அவரோட ஆட்டோவுல ஸ்கூல் அழைச்சிம் போய் அழைச்சி வந்து விடப்போறார், அவர் பேரு மணி எனச்சொல்லிவிட்டு நீங்க போய்ட்டு வாங்கண்ணே என்றதும் கிளம்பினார்.

அப்போ என்னை நீ ஸ்கூல் அழைச்சிம் போகமாட்டியாப்பா என வருத்தமாகவே கேட்டான்.

நைட்டே சொன்னனேடா. உன்ன அனுப்பிட்டு காலையில வீட்ல சின்ன சின்ன வேலை பாத்துட்டு அதுக்கப்பறம் கிளம்பனா சரியா இருக்கும். உன் கூடவே கிளம்பிட்டா இருக்கற வேலை பாக்க முடியாது அதனாலத்தான். தாத்தா பாட்டி வந்ததும் நானே உன்ன அழைச்சிம் போறன் என்றபோதும் அமைதியாகவே சோபாவில் அமர்ந்திருந்தான்.

அவனது வருத்தத்தை குறைக்க ஒன்னு செய்யறன் ஈவ்னிங் உன்ன நான் வந்து பிக்கப் பண்ணிக்கறன்.

வேணாம் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என அவன் சொல்லும் போது என் மனம் பாரமாகத்தான் இருந்தது. அவன் அம்மா இருந்திருந்தா பிரச்சனையில்ல என்னப்பண்றத்து என பெருமூச்சு விட்டப்படி மீண்டும் கிச்சன்க்குள் புகுந்தேன்.

மதியத்துக்கு லஞ்ச் செய்துக்கொண்டு இருந்தபோது செல்போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது. யாருன்னு பாரு ரஞ்சித்.

தாத்தாப்பா என குரல் தந்தான். கை கழுவிவிட்டு வெளியே வரும்போது ஆன் பண்ணி பேசிக்கொண்டு இருந்தான்.

நல்லாயிருக்கன் தாத்தா. எப்ப ஊருக்கு வர்ற தாத்தா ?.

…………

சீக்கிரம் வா தாத்தா.

………….

என்னை அப்பா புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்காரு, புது டிரஸ் எடுத்து தந்தாரு. இன்னும் டூ டேஸ்ல ஸ்கூல் தாத்தா.

…………..

அப்பா இந்தா தாத்தா உங்கிட்ட பேசனுமாம் என்றபடி செல்போனை தந்தான்.

ஹலோ என்றதும்

எப்படிப்பா இருக்கா ?

நல்லாயிருக்கன்.

அவனை எதுக்கு வேற ஸ்கூல் மாத்தன ?

அந்த ஸ்கூல் நல்லாயிருக்குன்னு சொன்னாங    ;க அதான்.

நீங்க எப்ப ஊருக்கு வர்றிங்க ?.

நான் சொல்றத நீ செய் அதுக்கப்பறம் ஊருக்கு வர்றன்.

அதவிட்டுட்டு வேற ஏதாவது பேசுங்க. ஏம்ப்பா நானும் இரண்டு வருஷமா சொல்றன் நீ கேட்கமாட்டன்னா என்னப்பா அர்த்தம்.

அம்மாக்கிட்ட போனை தாங்க.

பெருமூச் விட்டவர் இந்தாடீ உங்கிட்ட பேசனுமாம்.

என்னப்பா எப்படியிருக்கற ?.

நான் நல்லாயிருக்கறன் நீங்க எப்படிம்மா இருக்கிங்க ?.

எங்கப்பா இந்த கால் மூட்டு வலி தான் அதிகமாயிருக்கு. உட்காந்தா எழுந்திருக்க முடியல, நடக்க முடியல.

டாக்டர்க்கிட்ட காட்ட வேண்டியதுதானே?

போனன் தைலம் மாதிரி ஒன்னு தந்தாங்க ஒன்னும் சரியாகல.

இங்கவாம்மா டாக்டர்கிட்ட காட்டி சரிப்பண்ணிடலாம்.

புள்ள தனியா பேரனை வச்சிக்கிட்டு கஸ்டப்படறான் போய் கூட இருக்கலாம்ன்னு சொன்னதுக்கு என் பேச்ச மதிக்காத அவன் வீட்டுக்கு நான் வரல என்னைக்கு நான் சொல்றத கேட்கறானோ அன்னைக்கு வர்றன்கிறார் உங்கப்பா. நான் என்னத்த பண்றத்து என சலித்துக்கொண்டபடியே டேய் எம்பேரன் கண்ணுலயே நிக்கறான் கொஞ்சம் கூட்டியாந்து கண்ணுல காட்டிட்டுத்தான் போயேண்டா. அவரும் ராத்திரியில எம் பேரன் என்ன பண்றானோ, ஏது பண்றானோன்னு புலம்பறாரு.

வேலை அதிகமாயிருக்கும்மா.

ஒரு மணி நேரத்தல வீட்டுக்கு வந்துடலாம் இதுக்கு போய் நேரம் இல்லைங்கறயேடா.

வர்றதுக்கு பாக்கறன். நீ உடம்ப பாத்துக்கம்மா.

அது கிடக்கட்டும் அவன்கிட்ட போனை தா என்றதும் ரஞ்சித் இந்த பாட்டி பேசனுமாம் என்றதும் ஓடி வந்து செல்போனை வாங்கிக்கொண்டான். நான் கிச்சனை நோக்கி நடந்தேன்.


நல்லாயிருக்கன் பாட்டி.

பூரி சாப்பிட்டன். அப்பா சுட்டு தந்தாரு. எப்ப ஊருக்கு வர்றிங்க என பேசிக்கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் பொருத்து கிச்சன்க்குள் வந்து அப்பா நின்;றான்.

என்னடா சொன்னாங்க பாட்டி.

ஊருக்கு வரச்சொன்னாங்க என்றவன் சற்று கேப் விட்டு போகலாமாப்பா.

உம்.

எப்போ ?

அடுத்த சன்டே போகலாம் என்றதும் குதுகலமாக ஓடினான்.

தொடரும்……………

புதன், ஜூன் 19, 2013

மோடி….. தத்தளிக்கும் பி.ஜே.பி என்ற கப்பல்.



தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாரதிய ஜனதா கட்சி. அதன் பிரதான கூட்டாளி ஐக்கிய ஐனதா தளம். கூட்டணியின் ஒருங்கிணைப்பார் ஐக்கிய ஐனதா தளம் கட்சி தலைவர் சரத்யாதவ். இந்த இரு கட்சிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகால கூட்டணி பந்தம் இருந்து வந்தது. கடந்த வாரம் ஐக்கிய ஐனதா தளம் கூட்டணியில் இருந்து வெளியேறி 17 ஆண்டுகால கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. பீகாரில் இரண்டு கட்சிகளும் தான் கூட்டணியாக ஆட்சி அமைத்திருந்தன. கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தள கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பி.ஜே.பியின் 11 அமைச்சர்களை நீக்க கவர்னரிடம் கடிதம் தந்துள்ளார். கவர்னர் பெரும்பான்மையை நிருபிக்கச்சொல்ல 19ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நான்கு பேரின் ஆதரவோடு நிதிஷ் பெரும்பான்மையை நிருபித்துவிட்டார். காங்கிரஸ் துணை நின்று தன் ஐக்கிய ஜனதா தளத்துக்கு தன் ஆதரவை தந்துள்ளது.

17 ஆண்டு கால கூட்டணியை உடைத்துக்கொண்டு போக காரணம் நரேந்திரமோடி என குற்றம்சாட்டுகிறது ஜனதா தளம். 2014 நாடாளமன்ற தேர்தலை நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டது பி.ஜே.பி. கூட்டணி கட்சிகளுக்கும் சொன்னது. இதற்கு ஐக்கிய ஐனதா தளம் கடும் எதிர்ப்பு காட்டியதோடு கூட்டணியில் இருந்து விலகுவோம் என எச்சரித்தது. ஆர்.எஸ்.எஸ்., வீ.எச்.பி போன்ற பரிவார அமைப்புகள் நரேந்திரமோடி தான் என்பதில் உறுதியாக இருந்தன.

ஐக்கிய ஜனதா தளம் சிறுபான்மையின வாக்குகளால் தான் இரண்டாவது முறையாக பீகாரில் வெற்றி பெற்றுள்ளது. மோடி பிரதமர் என பிரச்சாரம் செய்தால் எம்.பி தேர்தலில் தோல்வி தான் வரும் என எண்ணுகிறார் நித்திஷ். அதனால் மோடியை எதிர்க்கிறார். இது வாக்கு பயமே தவிர மோடியை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம்மில்லை. மோடி சிறந்த நிர்வாகி பிரதமராக அனைத்து தகுதிகளும் உள்ளது என கோத்ரா கலவரத்துக்கு பின் திருவாய் மலர்ந்தவர் தான் நித்திஷ்.

இதனை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தது காங்கிரஸ். மோடியை முன்னிலைப்படுத்தி பாரதிய ஜனதா கட்சி தேர்தலை சந்தித்தால் வெற்றி என்பது எட்டாக்கனி என்பது காங்கிரஸ் எடுத்த சர்வேயில் வந்த தகவல். அதனால் பி.ஜே.பி தலைமையில் வலிமையான கூட்டணி அமையால் ஒரு புறம் சதுரங்க ஆட்டத்தை தொடங்கியது காங்கிரஸ். மற்றொரு புறம் மோடி இந்துத்துவாவாதி, சிறுபான்மை மக்கள் இந்தியாவில் வாழவே முடியாது என்ற பிரச்சாரத்தை செய்ய தொடங்கியது. இருந்தும் காங்கிரஸ் மீதான ‘அனைத்து மட்ட எதிர்ப்புகள்’ மோடிக்கு ஆதரவாக வேலை செய்கின்றன. மோடிக்கு உட்கட்சியிலும் எதிர்ப்புகள் இருப்பதை கண்டன. மோடியை முன்னிறுத்தும் காவி தலைமையும் இவைகளை உன்னிப்பாக கவனித்தன.

மோடியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தால் தானே பிரச்சனை என கடந்த வாரம் பாரதிய ஜனதா கட்சி கோவாவில் நடத்திய நிர்வாக குழு கூட்டத்திற்க்கு பின் நாடாளமன்ற பிரச்சாரக்குழு தலைவராக மோடியை அறிவித்தது. எதிர்பார்த்த படியே பிரச்சனைகள் வந்தன. முதலில் பிரதமர் கனவில் இருந்த முன்னால் துணை பிரதமர் அத்வானி எதிர்ப்பு காட்டி தன் பதவிகளை ராஜினாமா செய்தார். ஆர்.எஸ்.எஸ் முதல் பல்வேறு பரிவாரா அமைப்புகள் சமாதானம் பேசி ராஜினாமாவை வாபஸ் பெற வைத்து ஒய்ந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு போய்விட்டது.

கூட்டணியை முறித்துக்கொள்ளும் முன் காங்கிரஸ்சோடு மறைமுக பேச்சை துவங்கியிருந்தது ஐக்கிய ஜனதா தளம். பீகார்க்கு சிறப்பு நிதி தந்து கூட்டணிக்கு கை குலுக்கிய காங்கிரஸ் பி.ஜே.பி ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் காங்கிரஸ் ஆதரவு தரும் என நம்பிக்கை தந்தது. பி.ஜே.பியை விட காங்கிரஸ் தான் சேப் என தாவ நேரம் பார்த்தது ஜனதா தளம். மோடி நியமன அறிவிப்பு வெளியே வந்ததும் அதையே காரணம் காட்டி கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது. ஜனதா தளம் பற்றி பி.ஜே.பி கவலைப்படவில்லை. மோடி விவகாரத்தில் இனி பேச ஒன்றும்மில்லை என உறுதியாக சொல்லிவிட்டது.

9 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் விலையேற்றம், ஊழல் போன்றவற்றால் பெரும் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ளது. மக்கள் மனதில் கோபமாக உள்ளது. இதனை பி.ஜே.பி போன்ற எதிர்கட்சிகள் பயன்படுத்திக்கொண்டு வலிமை பெறக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஓவ்வொரு மாநிலத்திலும் வலிமையாக உள்ள கட்சிகளை பி.ஜே.பி தலைமையில் ஒன்றிணையாமல் பார்த்துக்கொள்கிறது. என்னுடன் கூட்டணிக்கு வா அல்லது தனித்து நில் என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. அதோடு, மூன்றாவது அணி அமைக்க காங்கிரஸ் மறைமுகமாக பணியாற்றுகிறது.


மூண்றாவது அணி அமைக்கும் முயற்சியில், சந்திரபாபு நாயுடு, கம்யூனிஸ்ட்டுகள், முலாயம் சிங், ஜெ போன்றோர் உள்ளனர். இதன் மூலம் அதிருப்தி வாக்குகள் மூன்றாவது அணிக்கு செல்லும் இதனால் தான் சுலபமாக வெற்றி பெற்று  விடலாம் என எண்ணுகிறது. பி.ஜே.பி இதனை புரிந்துக்கொள்ளாமல் மோடி என்கிற மாய மந்திரமே போதும் என எண்ணுகிறது. காங்கிரஸ்க்கு எதிர்ப்பாக வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் உள்கட்சி பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.

கப்பலுக்கு கேப்டன் இல்லையென்றால் தான் சிக்கல். ஆனால் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்பு ஒரு கப்பல் தத்தளிக்கிறது.