வெள்ளி, நவம்பர் 29, 2013

ஜெயேந்திரர் அபிமன்யூவல்ல...... துரியோதனன்........



தினமணி ஏட்டில் 28ந்தேதி 'சங்கராச்சாரியார் வழக்கு ஒரு மீள்பார்வை' என்ற தலைப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி எழுதிய ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அரை பக்கத்துக்கான கட்டுரை.

வாழும் சங்கராச்சாரியார்கள் நல்லவர், வல்லவர், இந்து மத்தின் மிகப்பெரிய தலைவர், ஆன்மீக நிறுவனத்தின் தலைவர். (சங்கரமடத்த இப்பவாவுது கம்பெனின்னு சொன்னீங்களே) அவர் மீது பொய்யாக குற்றம்சாட்டி அவரை சிக்க வைத்தள்ளார்கள். இதற்காக கடவுள் மறுப்பாளர்கள், திராடவிட இயக்கத்தவர்கள் என்னன்ன போராட்டங்கள் செய்துயிருப்பார்கள். இதனால் அவர் மனம் மட்டுமல்ல அவரது பக்தர்கள் மனம் எந்தளவுக்கு பாடுபட்டுயிருக்கும், வேதனைப்படுத்தியிருக்கும் என எண்ணினார்களா. புத்திரிக்கைகள் மட்டும் சும்மாவா வழக்குக்கு அப்பாற்பட்டு இல்லாததும், பொல்லததுமான விஷயங்களை எடுத்து எழுதினார்கள் என கேட்கிறார்.

குருமூர்த்தி அவர்களே, உங்களைப்போல நான் நாலும் தெரிந்தவனல்ல. என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் சில கேள்விகள், சங்கரமடம் சிஷ்யரே,

ஜெயேந்திரர்க்கும் ரவுடி அப்புக்கும் என்ன தொடர்பு ?

கொலை செய்த ரவுடி கதிரவன்க்கு பணம் தந்த ரவிசுப்பிரமணியன்க்கும் ஜெயேந்திரர்க்கும் என்ன தொடர்பு ?

கொலை செய்தவர்களுக்கு தரப்பட்ட பணம் எங்கிருந்து தரப்பட்டது ?

கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி பத்மா, அவரது மகன், மகளை ஜெயேந்திரர் தரப்பு மிரட்டனார்கள் என செய்தி வந்ததே எதனால் அவர்கள் மிரட்டினார்கள் ?

புதுச்சேரியில் வழக்கை விசாரித்த நீதிபதியிடம் பண பேரம் நடத்தியது யாருக்காக ?.

நீதிபதியிடம் ஜெயேந்திரர் பேசியது எதனால் ?

பத்திரிக்கைள் இல்லாததும் பொல்லாததும் எழுதினார்கள் என குமுறுகிறீர்களே ?

அனுராதாரமணன் என்ற பிரபல எழுத்தாளர் பெண்மணி தனக்கு சங்கரமடத்தில் உங்களால் வர்ணிக்கப்படும் இந்து மதத்தின் மிகப்பெரிய தலைவர் ஜெயேந்திரர் செய்த பாலியல் சீண்டல் பற்றி எழுதியுள்ளாறே இதற்கு ஏன் இன்னும் அவா மட்டுமல்ல நீரூம் பதில் சொல்லவில்லை ?.

நடிகை சொர்ணமால்யா விஜயேந்திரரின் அந்தரங்க காரியதரிசி என தகவல் வந்ததே அதுப்பற்றி என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ?. இது அபத்தம் என்கிறிர்களா?

தண்டத்தை போட்டுவிட்டு நேபாளத்துக்கு ஒரு பெண்ணோடு ஓடிப்போனவரை பின் தலைகாவேரியில் இருந்து அழைத்து வந்ததே பார்ப்பண கூட்டம் அதை பொய் என்கிறிர்களா ? இவையெல்லாம் ஆதாரத்தோடு எழுதப்பட்டது தானே ?.

இப்படி என்னற்ற கேள்விகள் உள்ளது குரூமூர்த்தி அவர்களே.

போதிய சாட்சியம்மில்லை போதிய சாட்சியம்மில்லை பல இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவர்களில் பின் புதுச்சேரி நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன போது 83 பேர் பிறழ்சாட்சியாகி போனார்கள். அவர்கள் எப்படி பிறழ்சாட்சியானார்கள் என்பது அவா வகையாறவுக்கு நிச்சயம் வெளிச்சம்.

அவர்கள் தற்போது உண்மையை சொன்னார்கள் எனச்சொல்கிறிர்கள். என்னோட கேள்வி, உங்கள் லோக குரு மீது பொய்யாக வழக்கு பதிவு செய்த காவல்துறை மீதும், பொய்யாக சாட்சி சொன்னவர்கள் மீதும் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுக்ககூடாது?

அதுயென்ன 2500 ஆண்டு பாரம்பரியமிக்க ஒரு ஆன்மீக அமைப்பின் மரியாதைக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் ஊடகங்கள் பரபரப்பு ஏற்படுத்துவது கண்டிக்க தக்கது என ஆந்திரா உச்சநீதிமன்றம் உத்தரவை காட்டுகிறீர்கள். சங்கரமடம் என பொய்யை உதிர்த்துக்கொண்டு திரியும் பார்ப்பண கூட்டம்மே சங்கரர் இந்தியாவில் நான்கு மடங்களை நிறுவினார் என உங்கள் சங்கர புராணமே கூறுகிறது. அதில் எந்த இடத்திலும் காஞ்சி ‘சங்கரமடம்’ கிடையாது. இதை ஆதாரபூர்வமாக விளக்கிவிட்டார்கள் உங்கள் பிராமண சமூகத்தை சார்ந்தவர்களே. ஆனால் இன்னமும் 2500 ஆண்டு காலம் என காதில் பூ சுற்றும் புண்ணாக்கு வியாபாரத்தை விடாமல் நடத்தாதீர்கள்.

அதோடு, தனிநபர்கள், சில இயக்கங்கள், அரசு இயந்திரங்கள் புகழ்பெற்ற பாராம்பரியமிக்க நிறுவனத்தை சிறுமைப்படுத்துவதை மனித உரிமை, நீதி, நேர்மை, சுயமரியாதை என பேசும் நபர்களும், அமைப்புகளும் பார்த்துக்கொண்டு மவுனமாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என எழுதியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

நாடு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற வசனத்தை பழைய படம் ஒன்றில் வில்லன் பாத்திரம் ஏற்றுக்கொண்டவர் சொல்வார். அது போன்று தானே உங்கள் அவா சமூகம் மற்றும் உங்கள் சங்கராச்சாரியர்கள் நடந்துக்கொண்டர்கள். அவர்களுக்காக அவர்கள் ஏன் போராட வேண்டும் என கேட்கிறிர்கள் ?.

போர்களத்தில் அபிமன்யூவை போல நிராதரவாக நிற்கவில்லை. துரியோதனைப்போல நண்பர்களோடு தான் போனார். நீதிமன்றம் என்ற போர்களத்தில் துரியோதனன் வென்றுள்ளார். அபிமன்யூவை போல நீதியை அனைவரும் அதிகாரத்தையும், பணத்தையும், மிரட்டலையும் கொண்டு கொலை செய்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடைசியாக ஒன்றே ஒன்று, தவறு செய்பவனுக்கு கடவுளின் நீதிமன்றத்தில் தண்டனை உண்டு என்கிறது இந்து மதம். அதை குற்றம் செய்தவர்கள் நினைத்து பார்க்கட்டும். மீளாய்வு செய்யட்டும்.

3 கருத்துகள்: