சனி, ஆகஸ்ட் 30, 2014

வரலாற்றை தேடி பயணிப்போம்........................ 2.

வரலாற்றை தேடுவோம் என்ற கோரிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்து தங்களால் முடிந்த உதவியை செய்கிறேன் என வாக்குறுதி தந்ததற்க்கு நன்றி.

யார் வேண்டுமானாலும் தகவல்களை தரலாம். ஆனால் அந்த தகவலில் உண்மை இருக்க வேண்டும், ஆதாரங்கள் இருக்க வேண்டும் அவ்வளவே. ஒருவர் பற்றிய வரலாற்றுக்கு, முதலில் அவரது குடும்பம், அவர் சார்ந்த நிலப்பரப்பு, மக்களின் வாழ்நிலை, அவர் பிறந்த ஆண்டு, குடும்பம் பற்றிய தகவல்கள், படிப்பு, சமுதாய பற்று, அரசியல் ஈடுபாடு, அப்போதைய அரசுக்கும் அவருக்குமான தொடர்பு, அவர் இறப்பு, அவருக்கு பின் அவரது குடும்பம், அவர் போராட்டங்கள், சாதனைகள், அவரது பயணத்தில் உள்ள வெற்றி-தோல்விகள், அவர் மீதான விமர்சனங்கள், அவர் காலத்தில் அவர் மீது சமூகத்தில் இருந்த பார்வை போன்றவை இடம் பெற வேண்டும். (வேறு தகவல் இருந்தால் குறிப்பிடுங்கள் அனைவரும் தெரிந்துக்கொள்வோம் )

இதில் உள்ளவை அனைத்தையும் ஒருவரே தர வேண்டும் என்ற அவசியம்மில்லை. நீங்கள் அறிந்ததை தந்தால் போதுமானது. நீங்கள் தரும் தகவல்களுக்கு நிச்சயம் ஆதாரங்கள் தேவை. அவை வாய்மொழி பாடல்கள், எழுத்து, கடிதம், குடும்ப உறுப்பினர்களின் தகவல்கள், நூல்களில் படித்திருந்தால் எந்த புத்தகத்தில் படித்தீர்கள், அதை எழுதியது யார் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு எழுத வரவில்லை என்றால் பரவாயில்லை. உங்களிடம் உள்ள குறிப்புகளை, விவரங்களை மின்னஞ்சல் செய்யுங்கள். நீங்கள் படித்ததை பற்றி குறிப்பிடுங்கள். இறுதியில் உங்கள் பெயருடன் இருக்கட்டும்.

நீங்கள் தரும் தகவல்கள் உபயோகமாக இருந்தால் உங்கள் பெயரில் அது தொகுப்பில் இடம் பெறும். தொகுத்த பின் அதன் நகல் உங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். நீங்கள் தரப்போகும் தகவல்களை, உங்களைப்போல நான் தேடி எடுக்கும் தகவல்களை பாதுகாக்கவும், தொகுக்கவும் போவது மட்டும்மே என் வேலை. இதில் யார் அதிகமாக ஈடுபாட்டுடன் தகவல் தருகிறார்களோ அவர்களுடன் வெளிப்படையாக கலந்து ஆலோசித்தபின்பே தொகுப்பை இணையத்தில் வெளியிடலாம்மா அல்லது யாராவது புத்தகம் போட விருப்பம் தெரிவித்தால் தரலாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும். இது உறுதி.

இது கூட்டு முயற்சி....... கை கொடுங்கள்.......... நம் மண்ணின் வரலாறை பதிவு செய்வோம்.........

1 கருத்து: