சனி, ஜனவரி 08, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 8 – தட்டச்சு நாள்.

 


ஜனவரி 8 – தட்டச்சு நாள்.

இன்றைய கணிப்பொறி கீ போர்டுகளுக்கு முன்னோடி டைப்ரைட்டர் என்கிற தட்டச்சு இயந்திரம். தட்டச்சு இயந்திரத்தின் தந்தை எனப்படுபவர் கிறிஸ்டோபர் லதாம் சோல்ஸ். அமெரிக்காவை சேர்ந்தயிவர் தி கனோசா டெலிகிராப் என்கிற பத்திரிக்கையின் உரிமையாளராகவும், சட்டமன்ற மக்கள் பிரதிநிதியாகவும் இருந்தார். அவர் தான் முதன்முதலாக தனது நண்பருடன் சேர்ந்த தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

தட்டச்சு இயந்திரம் கண்டுபிடிப்பதற்கு முன்புவரை பத்திரம் எழுதுவது, ஆவணங்கள் எழுதுவது, அரசு குறிப்புகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் கடிதம் அனுப்ப வெள்ளை தாளில் சொல்ல வந்த கருத்தை கைகளால் எழுதி அனுப்பினர். தட்டச்சு இயந்திரம் கண்டறியப்படிபட்டது முஐதல் அந்த போக்கு மாறியது.

ஆங்கில எழுத்துக்களை கொண்டு தான் முதன் முதலில் தட்டச்சு இயந்திரம் கண்டறியப்பட்டது. அதில் பலமுறை மாற்றங்கள் நடைபெற்று தற்பொழுது உள்ள வடிவம் உருவானது. மொழிகளுக்கு ஏற்றாற்போல் தட்டச்சு இயந்திரம் தயார் செய்யப்பட்டது.

தட்டச்சு இயந்திரம் வந்தபின் பெரும் மாற்றம் ஏற்பட்டது. கைகளால் எழுதுவது என்பது வெகுவாக குறைந்தது. காலமாற்றத்தில், தொழில் நுட்ப வளர்ச்சியால் தட்டச்சு இயந்திரத்துக்கான இடத்தை கணிப்பொறி இடம் பிடித்துக்கொண்டது. ஆனாலும், இன்றளவும் தட்டச்சு இயந்திரத்துக்கான பயன்பாடு உள்ளது. ரஷ்யாவில் இன்றும் அரசின் ரகசிய ஆவணங்களை தட்டாச்சு செய்தே அனுப்பி வைக்கின்றனர் என்கிறது ஒருத்தகவல்.

கணிப்பொறி மற்றும் மொபைல், ஐபேடு பேன்றவற்றின் வருகை, டச் ஸ்கரீனில் எழுதுவது போன்றவற்றால் தட்டச்சு கற்றுக்கொள்வது என்பது தற்போது உலகம் முழுவதும்மே வெகுவாக குறைந்துவிட்டது. இதனை கருத்தில் கொண்டே தட்டச்சு நாள் என்கிற ஒருநாளை உருவாக்க முடிவு செய்துள்ளனர் அத்துறையை சேர்ந்தவர்கள்.

2011 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தான் தட்டச்சுக்கான நாள் உருவாக்கப்பட்டது. இப்படியொரு நாளை டி.ஏ.சி ( டைப் ஆட்டோ கரைக்ட் ) என்கிற அமைப்பு சர்வதேச ஜீனியர் சேம்பர் என்கிற பொதுநல அமைப்போடு சேர்ந்து உருவாக்கியது. இந்த நாளை ஐநா அமைப்பு மூலம் சர்வதேச நாளாக உருவாக்க முயற்சி எடுத்துவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக