வெள்ளி, ஜனவரி 14, 2022

கேரளாவில் மனைவிகள் பரிமாற்றமும், எதார்த்தமும்.

 


கேரளாவில் சமூக வளைத்தளத்தில் தம்பதிகள் தங்களது இணையை மற்றொருவருடன் பரிமாறிக்கொள்ளும் வெய்ப் எக்ஸ்சேஞ்ச் என்கிற குழுவை தொடங்கி பரிமாறிக்கொண்டுள்ளார்கள் என்கிற தகவல் ஒரு இளம் பெண்ணின் புகாரால் வெளிவந்துள்ளது. இந்த விவகாரத்தை காரசாரமாக விவாதித்துக்கொண்டு இருக்கிறது கேரளா மீடியாக்கள்.

இந்த விவகாரம் குறித்து நியாயப்படுத்துவதோ, குற்றம்சாட்டவோ இந்த கட்டுரையை எழுதவில்லை. எதார்த்தத்தை சொல்லவே இந்த கட்டுரை.

தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போன்று எக்ஸ்சேஞ்ச் விவகாரம் சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் சக்கைப்போடு போட்டது. அலுவலகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில், சமூக வளைத்தளங்களில் ( அப்போது ஆர்குட் என்கிற தளம் முகநூல் போல் மிகப்பிரபலம் ) நண்பர்களாகிறவர்கள் தங்களது அந்தரங்க விவகாரத்தை பகிர்ந்துக்கொண்டு பின்னர் குழு உருவாக்கி கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள வில்லாக்கள், பங்களாக்களில் வார இறுதிநாட்களில் கூடுவார்கள். அங்கு தங்களது கார் சாவியை ஒரு குடுவையில் போடுவார்கள். விளக்கு அணைக்கப்படும் அந்த குடுவைக்குள் உள்ள சாவிகளை கணவரோடு வந்துள்ள பெண்கள் ஒவ்வொருவராக எடுக்கவேண்டும், அந்த சாவிக்கு உரியவர் அன்றைய இரவு அந்த பெண்ணோடு இரவு இருப்பார். 

அதற்கு முன்பு பெண்களின் உள்ளாடை கழட்டி டேபிள் மீது போடப்படும், ஆண்கள் உள்ளாடையை எடுக்கவேண்டும் உள்ளாடைக்கு உரியர் அவரோடு இருப்பர். இப்படி ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றாற்போல் செலக்ட் டைப் மாறுகிறதே தவிர விவகாரம் மாறியதில்லை. 

இதுப்போன்ற ரகசிய நிகழ்வுகளுக்கு துணைவி ஒப்புக்கொள்ளாதபோது கால்கேள்ஸ்களை அழைத்துச்சென்று பிற்காலத்தில் அந்த குழுவில் உள்ள மற்றவர்களுக்கு தெரிந்து பிரச்சனையானது, பணம் பறிக்கொடுத்ததுயெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு.

இப்படியொரு எக்ஸ்சேஞ்ச் எப்போது உருவாகியிருக்கும் எனக்கேட்டால் நிச்சயம் யாருக்கும் தெரியாது. நான் கல்லூரி படிக்கும்போது, பக்திமானான எங்கள் வரலாற்று பேராசிரியர் பாடம் நடத்தும்போது, கடவுளாக பூஜிக்கப்படும் மனிதர் குறித்து பாடம் நடத்தப்பட்டது. அக்கால நடைமுறையில் ஆண் குழந்தைக்காக அப்போது வெளிப்படையாக இருந்த வழக்கம் குறித்து சொல்லும்போது, கிட்டதட்ட இன்றைய மனைவி மாற்றும் முறைக்கு ஒப்பானது. இதை இங்கு குறிப்பிடக்காரணம் இந்த மாற்றுமுறை இப்போது அப்போது வந்ததல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உலகத்தில் பலயிடங்களில் நடந்துள்ளது என்பதை தெரிவிக்கவே.

நம்நாட்டில் காமம் என்பது வரையறை செய்யப்பட்டது. எத்தனை வயதில் அதுக்குறித்து பேச வேண்டும், தெரிந்துக்கொள்ள வேண்டும், யாரிடம் பேசவேண்டும், எதற்காக பேசவேண்டும் என்பதெல்லாம் கலாச்சாரம் என்கிற பெயரில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதிலும் இளைஞர்களை விட இளைஞிகளுக்கு அதிக கட்டுப்பாடு. இதை தெரிஞ்சிக்ககூடாது என அடக்கிவைப்பதால் தான் தண்ணீருக்கும் அமுக்கப்பட்ட பந்துப்போல் அது வெளியே வருகிறது. மேற்கத்திய நாடுகள் அதனை உணர்ந்ததால்தான் செக்ஸ் கல்வியை பாடத்திட்டமாக வைத்தார்கள். நாம் இன்னமும் ஒருமனிதனை அளவிடும் எடைக்கருவியாகவே காமத்தை வைத்துள்ளோம்.

உலகில் பிரபலமான செக்ஸாலஜிட்கள் முதல் டுபாகூர் லேகியம் விற்கும் எழுதும் தொடர்களை, வீடியோ பேட்டிகளை படித்துப்பாருங்கள் அனைவரும் ஒரு விஷயத்தை தெளிவாக கூறுவார்கள். காம உணர்வு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். ஒரு ஆணுக்கு ஒருப்பெண்ணை பார்த்ததுமே உணர்வு வரும், சிலருக்கு பெண்களின் அங்கங்களை காணும்போது வரும், சிலருக்கு துணையுடன் ரொமான்டிக்காக பேசும்போது வரும், சிலருக்கு நடிகைகளை நினைக்கும்போது வரும், இளைஞர்களுக்கு ஆன்டிகள் மீது மோகம் வரும். பெருசுகளுக்கு சிறார்களை காணும்போது ஆசைவரும், சில ஆண்களுக்கு பெண்களை பார்த்தால் உணர்வு வராது, ஆண்களை கண்டால்தான் உணர்வு பீறிட்டு கிளம்பும், சிலருக்கு செக்ஸ் வீடியோக்கள் பார்த்தால்தான் உணர்வு வரும். பெண்களுக்கும் ஆசைகள் வர சில வகைகள் உண்டு என்பதை குறிப்பிடுவார்கள்.

அப்படி துணையை மாற்றிக்கொண்டு ஆசையை பூர்த்தி செய்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இது எலைட் பீப்புள்ஸ், எலைட் பீப்புள்ஸ் ஃலைப் வாழ நினைப்பவர்கள், காமத்தை விதவிதமாக அனுபவிக்க விரும்புகிறவர்களிடம் துணையை மாற்றிக்கொள்ளும் போக்கு உண்டு. இதுப்போன்ற தம்பதிகள் சிலர் கேரளா, தமிழ்நாடு மட்டும்மல்ல உலகம் முழுக்கவே உண்டு. இந்தியா போன்ற நாடுகளில் இவர்களால் நாங்கள் இப்படித்தான் என வெளிப்படையாக சொல்லமுடியாது என்பதால் ரகசியமாக கூடி தங்கள் இச்சையை தீர்த்துக்கொள்கிறார்கள்.

இந்தியாவில் பிரபலமான இந்தியா டுடே இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முக்கிய நகரங்கள், சிறுநகர மக்களிடம் செக்ஸ் சர்வே நடத்தும். பலதரப்பட்ட மனிதர்களிடம் நடத்தப்பட்டு மனிதரின் செக்ஸ் எண்ணங்கள் எப்படியுள்ளது, தேவைகள், ஆசைகள், எண்ணங்கள், விருப்பங்கள், வடிகால்கள் குறித்து என விளாவரியாக செய்திக்கட்டுரை வெளியிடும். ( அப்படியொரு கட்டுரை அது வெளியிட வேண்டிய அவசியம்மென்ன என்பது இங்கு குறிப்பிட தேவையில்லை என நினைக்கிறேன்) சர்வேயில் கலந்துக்கொள்ளும் மக்களிடம் செக்ஸ் குறித்து விதவிதமான கேள்விகளை எழுப்பியிருக்கும். என்னய்யா இப்படியெல்லாமா கேள்வி கேட்பிங்க என்பதுப்போல் அப்போது இருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் அது சர்வசாதாரண கேள்வியாக மாறிவிட்டது. அப்படியொரு சர்வேயில் நடிகை குஷ்பு, கற்பு குறித்து கருத்துச்சொல்லிதான் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையாகி வழக்குகள் தொடுக்கப்பட்டதால் தன்னை பாதுகாத்துக்கொள்ள அரசியலுக்குள் வந்தார்.

மனிதர்களின் மனங்கள் என்பது குரங்கு போன்றது. குரங்குகள் நிமிடத்துக்கு நிமிடம் இடம் விட்டு இடம் தாவுவதுப்போல மனிதர்களின் மனங்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு செல்போன் வாங்கியபின் அடுத்து வரும் மாடலை பார்த்து ஏங்கும் குரங்கு மனது மனிதர்களுடையது.

இதுப்போன்று துணையை மாற்றிக்கொள்ளும் போக்கு உடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் மிககுறைவு. எப்படி வாழ வேண்டும் என்பது அவர்களின் தனிமனித சுதந்திரம். மற்றொரு துணையுடன் இருப்பது என்பது சொந்த விருப்பப்படி, விரும்பியபடி, துணையின் வற்புறுத்தல்படி நடப்பதுதான். அதனால்தான் கடந்த காலத்தில் இதுப்போன்ற பிரச்சனைகள் வந்தபோது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கேரளாவில் அந்தபெண் புகார் தந்ததுப்போல் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் துணை மீது புகார் தந்தால் மட்டும்மே நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு புகார் தருவதில்தான் சிக்கலே. காரணம் கட்டில் அறையில் தன் துணையின் மனவோட்டத்தை அறிந்துக்கொள்ளும் துணைகள் மட்டுமே பரிமாற்றத்துக்கு ஒப்புக்கொள்கிறார்கள். புகார் தந்தால் பல அந்தரங்க கேள்விகள் எழுப்பப்படும், அதாவது தனது காம ஆசைகளை கிளறுவார்கள் என்பதாலே இதில் சிக்கியவர்களும் தயங்குகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காமம் என்பது இயற்கையாகவே உருவாகும். அதை ரகசியமாக்காதீர்கள், அது இயல்பானது. பருவ வயதில் பிள்ளைகளோடு பெற்றோர்கள் விவாதியுங்கள். கட்டில் அறையில் தம்பதிகள் தங்கள் ஆசையை தங்களுக்குள் பகிர்ந்துக்கொண்டு துணையின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக