ஞாயிறு, ஜனவரி 09, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 9 – வெளிநாடுவாழ் இந்தியருக்கான நாள்.

 



இந்தியாவில் இருந்து பிழைக்க, தொழில் செய்ய இந்திய எல்லைக்கு அப்பால் சென்று அந்நாட்டில் குடியுரிமை பெற்று வாழும் ஒவ்வொருவரும் வெளிநாடு வாழ் இந்தியராக அங்கீகரிக்கிறது இந்திய சட்டம்.

இப்படி இந்தியாவை சேர்ந்த, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கோடிக்கணக்கான மக்கள் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் என உலகின் பல நாடுகளில் வாழ்கின்றனர். பெரும்பான்மையினோர் செல்வ செழிப்போடும், பெரும் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

அவர்களை கவுரவிக்கும் பொருட்டு இந்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. அவர்களுக்கு சலுகை வழங்ககாரணம், ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரம் கோடிகள் இந்தியாவுக்கு அவர்களால் வருவாய் கிடைக்கிறது, அதை அதிகப்படுத்தவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி தொழில் புரட்சியில் தான் பிறந்த நாட்டை முன்னேற்றம் அடைய வைக்க வேண்டும் என்று விருதுகள் வழங்கிறது.

இதற்காக வெளிநாடு வாழ் இந்தியர் என்கிற ஒரு நாளை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ந்தேதி இந்தியாவின் ஏதாவது ஒரு முக்கிய நகரத்தை தேர்வு செய்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரதிநிதிகளை அழைத்து வந்து கொண்டாடுகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர் நாள் ஜனவரி 9ந்தேதி கொண்டாடக்காரணம், இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் மும்பையில் உள்ள அப்போல்லோ பந்தர் துறைமுகத்தில் காலடி எடுத்து வைத்த நாள் 1915 ஜனவரி 9ந்தேதி. காந்தியடிகள் இந்தியா திரும்பியநாளை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நாளாக இந்திய அரசு 2002ல் அறிவித்து கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து அதிகாரபூர்வமாக இந்த நாளை இந்தியரசு கொண்டாடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக