வெள்ளி, ஜனவரி 07, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 7 - கலீலியோ கலிலியை அறிவோம்.

 


வானத்தில் நட்சத்திரங்கள் நடத்தும் அதிசயத்தை மக்களுக்கு விளக்கி, அதை பார்க்க செய்தவர் கலிலியோ. ஆராய்ச்சியளரான அவரை மதவாதிகள் வீட்டுச்சிறை வைத்து கொன்றனர்.

1564 பிப்ரவரி 15ந்தேதி இத்தாலியின் பைசா நகரில் பிறந்தார் கலீலியோ கலிலி. இசையமைப்பாளர் வின்சென்சோ கலீலி – கியுலியா தம்பதியரின் தலைமகனாக பிறந்தார். இவருக்கு அடுத்து 5 குழந்தைகள் இந்த தம்பதிகள் பெற்றெடுத்தனர். இந்த குடும்பம் கலிலிக்கு 8 வயதாகும் போது பைசா நகரில் இருந்து புளோரன்சிஸ்க்கு இடம் பெயர்ந்தது.

ஆனால் கலிலியை மட்டும் சொந்தவூரில் நண்பர் ஒருவரின் பாதுகாப்பில் விட்டுச்சென்றனர். அவர் வீட்டில் இருந்தபடியே மத குருமார் ஒருவரிடம் கல்வி பயின்றார். பைசா பல்கலைகழகத்தில் மருத்துவம் பயிலத்தான் சேர்க்கப்பட்டார். பல்கலைகழக விதிப்படி அவர் சீருடை அணியாததால் மாதந்தோறும் அபராதம் கட்டியதால் பெற்றோரின் எதிர்ப்பை சம்பாதித்தார். அதோடு, பெற்றோர் சேர்த்த மருத்துவம் பயிலாமல் கணிதம், வானவியல் எனப்போனதால் ஆசிரியர்களும் கலிலியோ மீது வெறுப்புக்கொண்டனர். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

1586ல் நீரியல் துலவியப்பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார். இதுதான் அவரை அறிவியல் உலகுக்கு அவரை அறிமுகப்படுத்தியது. 1589ல் இவர் சிறுவயதில் வெறுத்த கணித துறையின் பேராசிரியராக பைசா பல்கலைகழகத்தில் பணிக்கு சேர்ந்தார். 1592 ல் கலிலியோ படுவா பல்கலைழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்து வானவியல், இயக்கவியல் தொடர்பான பாடங்களை நடத்தினார்.

மரீனா என்கிற பெண்ணோடு திருமணம் செய்துக்கொள்ளாமல் குடும்பம் நடத்தி 3 குழந்தைகளுக்கு தந்தையானார் கலிலி. அதில் இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் இருவரும் வளர்ந்து கன்னியாஸ்தீரியாகினர்.

தொலைநோக்கி, வெப்பமாணி, கோள்கள் செயல்பாடுகள் போன்றவற்றை கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். வான்கோள்களை முதன்முதலாக தான் கண்டறிந்த நீண்ட தொலைவு பார்க்க கூடிய தொலைநோக்கி மூலம் வானத்தில் மின்னிய நட்சத்திரங்களை ஆய்வு செய்து பல அறிய தகவல்களை பதிவு செய்தார். அரிஸ்டாட்டில் ஒரு கோட்பாட்டை முன்வைத்திருந்தார், அதை உலகம் நம்பிக்கொண்டுயிருந்தது. அதாவது மேலிருந்து ஒரு வெவ்வேறு அளவு, எடைக்கொண்ட பொருளை மேலிருந்து கீழே போட்டால் அவை ஒரு நேரத்தில் வராது என்பது அரிஸ்டாட்டில் கருத்து, அது பொய் என நிரூபித்தார் கலிலியோ.

இராணுவத்தில் பயன்படுத்தப்படும் பீரங்கி குண்டுகள் வெவ்வேறு வடிவங்களில் இருந்தன. அதற்கு ஒரு கணிதப்பயன்பாடு உருவாக்கி தந்தார். அது இராணுவத்தில் பெரும் வெற்றி பெற்றதால் அவருக்கு மரியாதையும், பணமும் குவிந்தது. இதன்பின்பே அவரது வறுமை நீங்கியது. 1609ல் தான் கண்டுபிடித்த தொலைநோக்கியை வெனிஸ் நகரத்தின் அருகேயிருந்த குன்றின் மீது நிறுவி பொதுமக்கள் அந்த தொலைநோக்கி வழியாக வானியல் அதிசயங்களை காண ஏற்பாடு செய்தார். இதை நாட்டுக்கே அர்பணித்தார். இதனால் பேராசிரியர் பணியும், பணமும் கிடைத்தன.

1621 தி அசேஸியர் என்கிற நூலை எழுதினார் இதனை வெளியிட மதகுருமார்கள் அனுமதிக்காமல் நீண்ட போராட்டத்துக்கு பின் 1623ல் தான் அனுமதிகிடைத்தது. அதன்பின் புதிய அறிவியல் மீதான உரையாடல், உலகின் இரு முக்கிய கோட்பாடுகள் என இரண்டு நூல்களை எழுதினார் கலிலியோ. அதுவே பிற்காலத்தில் வந்த பல அறிஞர்களுக்கு வழிக்காட்டியாக விளங்கியது.

பைசா நகரத்தின் அரசவை கணிதவியல் அறிஞராக இருந்தார் கலிலியோ. 1641ல் சூரியனை மையமாக கொண்டே இந்த பூமி உட்பட அனைத்தும் இயங்குகின்றன என்கிற கோட்பாட்டை முன்வைத்தார் கலிலியோ. இது கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் மக்களிடம் கட்டமைத்திருந்த மூடநம்பிக்கையை உடைத்தது. இதில் வெறுப்புற்ற மதகுருமார்கள் தங்கள் மத அதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மூலம் கலிலியோவை வீட்டுச்சிறையில் வைத்தனர். 1642 ஜனவரி 8ந்தேதி இறக்கும்போதும் வீட்டுச்சிறையிலேயே இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இறந்தபின்பு அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய மறுத்ததோடு, அவர் இறப்பை கேள்விக்கு உட்படுத்த முயன்றனர். இதனை கலிலியோவின் நண்பர்கள் அறிந்து அவரது உடலை ரகசியமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக