திங்கள், ஜனவரி 03, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 1 – ஆங்கில புத்தாண்டு உருவான வரலாறு.

 

ஜனவரி 1 – ஆங்கில புத்தாண்டு உருவான வரலாறு.

ஆதிமனிதன் சூரியன், சந்திரனை கொண்டுத்தான் நாட்களை கணக்கிட்டான். பின்னர் அந்த நாளை அடிப்படையாக கொண்டு காலண்டர் என்கிற நாட்காட்டியை வடிவமைத்துள்ளார்கள். அது இஸ்லாம், கிருஸ்த்துவம், இந்து என ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்கென சிறப்பு நாட்காட்டியை வைத்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் தனித்தனியாக நாட்காட்டி வைத்திருந்தாலும் இந்த நாட்காட்டிகள் அனைத்தும் சூரியன், சந்திரனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

அப்படி சூரியன், சந்திரனை அடிப்படையாக கொண்டு நாளை கணக்கிட்டுக்கொண்டாலும் காலப்போக்கில் குறிப்புகள் எழுத தங்களுக்கு ஆண்டுகள் தேவை என்பதை உணர்ந்து ஆண்டை முன்வைத்து நாட்காட்டியை உருவாக்க முடிவு செய்தார்கள். அப்போதுான் ஒருநாள் என்பது எத்தனை மணி நேரம் என்பதையும், கிழமைகள் என்பதையும், மாதத்துக்கு எத்தனை நாள் என்பதை வரையறை செய்ய முடிவு செய்தார்கள். கிழக்கு திசையில் சூரியன் உதிக்கும் நேரம் அது மறையும் நேரம், மறைந்தபின் மீண்டும் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்பதை முதலில் கணக்கிட்டனர். அதன்பின் இளவேனிற்காலம், மழைக்காலம், பனிக்காலம், கோடைக்காலம் என உருவாக்கினர்.

சூரியனை பூமி ஒருமுறை சுற்றிவர 8765 மணி, 48 நிமிடம் 46 விநாடி காலத்தினை எடுத்துக்கொள்கிறது. 24 மணி நேரம் கொண்டது ஒரு நாள். அப்படியாயின் முழு 365 நாள் 5 மணி, 48 நிமிடம் 46 விநாடியை எடுத்துக்கொள்கிறது பூமி. இதில் 5 மணி 48 நிமிடம் 46 விநாடியை ஒதுக்கி வைத்துவிட்டு 365 நாளை ஒரு ஆண்டாக கணக்கிடப்படதொடங்கினர். மீதியுள்ள 5 மணி 48 நிமிடம் 46 விநாடியை சேர்த்துவைத்து 4 ஆண்டுக்கு ஒருமுறை லீப் வருடமாக கணக்கிடுகிறது. அந்த லீப் வருடம் என்பது 366 நாட்கள் என்றனர்.

நேரம், ஆண்டு போன்றவையை அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக இருந்தாலும் ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டுக்கும், மொழிக்கும், கலாச்சாரத்துக்கு ஏற்றாற்போல் மாதங்களை பிரித்து வைத்திருந்தது. இப்போது இருப்பது போல் மாதங்கள் சீராக இருந்ததில்லை. கி.மு 44ல் ரோமபேரசராக இருந்த ஜீலியஸ் சீசரால் ஒரு நாட்காட்டி உருவாக்கப்பட்டது. அந்த நாட்காட்டி ஜீலை, ஆகஸ்ட் மாதங்களை தவிர்த்து 10 மாதங்களை கொண்டதாக இருந்தது. ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான இந்த மாதங்கள் லத்தின் மொழி பெயர்களாகும். அந்த பெயர்கள் அனைத்தும் ரோமபுரி மக்கள் வணங்கிய கடவுள்களின் பெயர்களாகும். ஜனவரி என்பது ஜனுஷ் என்பது ரோமபுரி மக்களின் முழு முதற் கடவுளின் பெயர். ( நம்மவூர் விநாயகர்ன்னு வச்சிக்குங்க ). அந்த பெயரை மாதங்களில் முதல் மாதமாக வைக்கப்பட்டது. இப்படி அடுத்தடுத்தடுத்த மாதங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. இந்த நாட்காட்டி தான் வழக்கத்தில் இருந்தன.

பின்னர் இத்தாலியை சேர்ந்த மருத்துவர் அலோயிசிஸ் என்பவரால் கிரிஜோரியன் நாட்காட்டி உருவாக்கப்பட்டது. அந்த நாட்காட்டியில் கிருஸ்த்து பிறந்த வருடத்தை அடிப்படையாக வைத்து கி.மு, கி.பி என பிரித்தனர். பின்னர் ஜீலியஸ் நினைவாக ஜீலை மாதமும், அகஸ்டஸ் நினைவாக ஆகஸ்ட் மாதம் என இரண்டு மாதங்கள் உருவாக்கப்பட்டு மாதந்திர பட்டியலில் புகுத்தப்பட்டு 10ல் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டு ஆண்டின் 365 நாட்கள் இதில் பங்கு பிரித்து வைக்கப்பட்டன. அதோடு வேறு சில திருத்தங்கள் செய்து தந்தார். அந்த நாட்காட்டியை 15 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க கிருஸ்த்துவ பாதிரியாக இருந்த 13 ஆம் கிரிஜோரியன் ஏற்றுக்கொண்டு, கத்தோலிக்க கிருஸ்த்துவ மக்கள் இனிமேல் நான் வெளியிடும் இந்த நாட்காட்டியை தான் பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டார். அந்த நாட்காட்டி அந்த மதகுருவின் பெயரிலேயே கிரிஜோரியன் நாட்காட்டி என அழைக்கப்பட்டது.

அந்த நாட்காட்டி 17 ஆம் நூற்றாண்டில் செப்டம்பர் மாதத்தில் 10 நாட்கள் குறைக்கப்பட்டு திருத்தப்பட்டது, இறுதியாக திருத்தப்பட்டது அதுவே. தொடக்கத்தில் கரிஜோரியன் நாட்காட்டியை நாடும், நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. 1582களில் ஸ்பெயின் தான் முதன்முதலாக ஏற்றுக்கொண்டது. அதன்பின் ஒவ்வொரு நாடாக ஏற்றுக்கொண்டன. 1752ல் தான் இங்கிலாந்தும், அமெரிக்காவும் கரிஜோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டன. இங்கிலாந்து ஏற்றுக்கொண்ட பின் அது தனது காலணி ஆதிக்க நாடுகள் மீது திணித்தது. அப்படித்தான் இந்தியாவில் அது பயன்பாட்டுக்கு வந்தது. இறுதியாக 1923 பிப்ரவரி மாதம் தான் கிரீஸ் நாடு இந்த நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட நாடாகும்.

பூமி பந்தின் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளையே ஆண்டின் தொடக்க நாளாக கடைப்பிடித்து வந்தார்கள். அதன்பின் வலிமையானவர்கள் ஏற்படுத்துவது வரலாறானது. அந்த வகையில் உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான நாட்காட்டி கிரிஜோரியன் நாட்காட்டியாக புகுத்தப்பட்டது. இந்த நாட்காட்டியை கரிகோரிநாட்காட்டி எனவும், கிருஸ்த்துவ நாட்காட்டி எனவும் மேற்கத்திய நாட்காட்டி என அழைக்கப்படுகிறது. சர்வதேச தபால் ஒன்றியம் இந்த நாட்காட்டியை ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. அதோடு, அனைத்து நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாட்காட்டியை ஏற்றுக்கொண்டு சர்வதேச நாட்காட்டி என அங்கீகரித்ததால் தற்போது உலகம் முழுவதும் இந்த கிரிஜோரியன் என்கிற கரிகோரிநாட்காட்டி பயன்படுத்தப்படுகிறது.

அந்த நாட்காட்டியின் கணக்குப்படி ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக