வெள்ளி, ஜூலை 20, 2012

செக்ஸ்க்கு தேவை வெங்காயம்




சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. சிறு வயதிலேயே சர்க்கரை நோயாள் பாதிக்கப்படுபவர்கள் அதிகளவில் உள்ளனர். 30 வயதிலேயே அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கின்றனர். இது வாழ்க்கையை தொடங்கும் காலக்கட்டம். ஆனால் இவ்வியாதி இன்பமான வாழ்க்கையை துன்பமாக்குகிறது. 

காரணம், சர்க்கரை நோயாளிகளால் செக்ஸ் உறவில் ஈடுபடமுடிவதில் சிக்கல் உள்ளது. ஆண்களுக்கு ஆணுறுப்பு விரைப்பு தன்மைக்கு வருவதில்லை. பெண்களுக்கு, அவர்களுக்கான உறுப்பில் வறட்டு தன்மை ஏற்படுகிறது. இதனால் செக்ஸ் துன்பமாக மாறிவிடுகிறது. கணவன் - மனைவிக்குள் நடக்கும் சண்டையை தீர்க்கும் இடமாக இருப்பது படுக்கையறை. அந்த படுக்கை அறையே பயன்படுத்த முடியாமல் போனால் சண்டை சச்சரவுகள் அதிகமாகும். 

இனி அந்த பிரச்சனையில்லை. ஆண்மை சக்தி அதிகமாக்க, ஆண்மைக்கான ஹார்மோன்களை அதிகமாக்கும் ஒரு உணவு பொருள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள் மருத்துவர்கள். சர்க்கரை நோயாளிகளும் கவலைப்படதேவையில்லை. ஏன் எனில் அந்த உணவு பொருளை சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம். அது 

வெங்காயம். 

உரிக்க உரிக்க கடைசியில் ஒன்னுமேயில்லாத உணவு பொருள் வெங்காயம். இதனால் தான் பெரியார் பலயிடங்களில் பலரை திட்ட வெங்காயம் என்ற சொல்லாடலை பயன்படுத்தினார். கிராமங்களில், சும்மாவே அறு அறு என அறுப்பவனை வெங்காயம் மாதிரி பேசாதடா என்பார்கள்.   


ஓன்னும்மில்லாத அந்த வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்க அது இந்தியாவில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது. ஆயிரங்களில் பணம் தந்து வயாக்ரா மாத்திரை வாங்கி பெட்ரூமில் பலத்தை காட்டுவதற்கு பதில் வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் குதிரை பலம் கிடைக்கும் என மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு நம் ஊரில் நடக்கவில்லை. ஈரானில் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவில் வெங்காயத்தில் செலினியம் என்னும் தாது உப்பு வெங்காயத்தில் அதிகமாகவுள்ளது. அந்த உப்பு ஆண்களின் ஆன்டிஆக்ஸிடென்சும் என்ற ஹார்மேனை அதிகமாக்கி டென்டோஸ்டிரான் என்ற ஹார்மேன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் செக்ஸ் உணர்வு அதிகமாக தூண்டப்பட்டு ஜோடியோடு நீண்ட நேரம் உறவு கொள்ளவும் இருவருக்குள் ஹார்மோன் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. இதனால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கும் குழந்தை பேறு கிடைக்கும் என்கிறது அவ்வறிக்கை. இதனால் ஈரானியர்கள், எகிப்தியர்களும் பல ஆண்டுகளாகவே வெங்காய ஜீஸ் குடித்து குதுகலமாக தங்களது பெட்ரூம் வாழ்வை அமைத்துக்கொள்கிறார்கள். 

நம்மவூர் சித்த மருத்துவத்தில் முருங்கைக்காய்யை விட வெங்காயம் அதிகளவில் பாலியல் உணர்வு தூண்டும் சக்தியுள்ளது. அதனால் தான், ஜெயினர்கள் உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் அதற்கு காரணம், பாலியல் உணர்வை தூண்டிவிடும் என்பதால் தான். அதனால் அந்த வெங்காயம் இயற்கை வயாக்கரா என வர்ணிக்கப்படுகிறது. அதேபோல், பூண்டுவிலும் உணர்வை தூண்டும் சக்தி அதிகமாகவுள்ளது என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. அதனை இப்போது தான் வெளிநாட்டில் கண்டறிகிறார்கள். 

அதனால் மகாஜனங்களே வெங்காயம் அதிகமாக சாப்பிடுங்கள், பெட்ரூம்மில் கலக்குங்கள். 

1 கருத்து: