திங்கள், நவம்பர் 28, 2011

கனிமொழி பிணையில் வந்தார்.


 
இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி வழக்கில் மே20ந்தேதி திமுக எம்.பி கனிமொழி சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
சிறைச்சாலை அவருக்கு புதுசு. புpறந்தது முதல் பஞ்சனையை தவிர வேறு எதுவும் காணாதவர். முதல்வரின் மகளாக, எதிர்க்கட்சி தலைவரின் மகளாகவே வளர்ந்தவர். கஸ்டம் என்றால் துளியளவும் தெரியாமல் வளர்க்கப்பட்டவர். திமுக தலைவரின் பாசத்திற்க்குறிய புதல்வி சிறைச்சாலையில் என்றதும் கலைஞர் முதல் கனிமொழி மீது பற்று கொண்ட கட்சிக்கு அப்பார்பட்ட மனிதர்கள் கூட பரிதாபப்பட்டனர்.
 
கனிமொழியை பெயிலில் எடுக்க இந்தியாவின் பிரபல வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினர். ஆனால், மீடியாக்கள் திமுக மீது நடத்திய தொடர் போர், அன்ன ஹசரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் போன்றவை ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் நீதிதுறையை கண் மூட வைத்துவிட்டது.
 
குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாகவே நடத்த தொடங்கின மீடியாக்களும், நீதித்துறையும். திமுக தலைவர் தன் பலம் கொண்ட மட்டும் முயன்றும் காங்கிரஸ் அரசு மனம்மிறங்கவில்லை.
 
2ஜி ஊழலில் காங்கிரஸ்சின் பங்கு, பெரும் முதலாளிகளின் கூட்டு போன்றவை வெளியே வரதொடங்கின. அதோடு, பொது நல வழக்கு ஒன்று இந்த பிரபலத்தை வெளியே கொண்டு வர உதவியது.

நவம்பர் 28 டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழி உட்பட 5 பேருக்கு ஜாமீன் தந்துள்ளது. இது திமுக தலைவருக்கு சந்தோஷத்தை தரலாம். ஆனால் கனிமொழிக்கு மகிழ்ச்சி என்பது கிடையாது. அவர் தவறே செய்துயிருந்தாலும் காங்கிரஸ் செய்தது மன்னிக்க முடியாத தவறு. திமுகவின் வரலாற்றில் மறக்க முடியாத கலங்கம், காங்கிரஸ்சின் இந்த துரோகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக