திங்கள், டிசம்பர் 19, 2011

இரண்டாவது தேனிலவு முடிந்துள்ளது.




ஒரு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம். சினிமா நடிகையாக இருந்து எம்.ஜி.ஆரின் படங்களில் நாயகியாக இருந்தவர் படிப்படியாக குடும்பத்தில் பின் வாசல் நாயகியாக வலம் வரத்தொடங்கினார். அப்போது அம்மு எ ஜெயலலிதாவுக்கு சினிமா கேசட் தரும் ஒரு பெண்ணாக 1983ல் சசிகலா அறிமுகமானார். ஆந்த பழக்கம் நட்பாக மாறியது. காலப்போக்கில் ஜெ இருக்கும் இடத்தில் சசிகலா இருப்பார். நிழல் போல் இருந்தார் சசிகலா. அவரில்லாமல் இவர் இருக்கமாட்டார். இவரில்லாமல் அம்மையாரும் இருக்கமாட்டார். 

முதல் முறையாக 1991ல் ஜெயலலிதா முதல்வாரன போது அவரது நட்பு மூலம் மன்னார்குடி வகையறா ஆடிய ஆட்டம். இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தத்து பிள்ளையானார். கோலாகல திருமணம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வழக்கு, சிறை என ஜெ தள்ளாடியபோது, தோழிகளுக்குள் மோதல் அதாவது 1997ல் சசிகலா அன் கோ, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட எல்லா இடத்திலிருந்தும் முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவித்தார் ஜெ. 14 ஆண்டுகள் தேனிலவு இருவருக்குள்ளும் முடிந்தது. 


இனி இவர்களின் நட்பு அவ்வளவு தான் என பேசிவந்த நிலையில், சில வாரங்களில் சசிகலா போயஸ் தோட்டம் வந்தார். இருவரும் மீண்டும் ‘நட்பு’ பாராட்டினார்கள். 2001ல் ஆரியணை ஏறினார் அம்மையார். உயிர் தோழிகள் ஒன்றாகவே வலம் வந்தனர். சசிகலாவின் வீடு எதுவென்றால் அது போயஸ் கார்டன் முகவரி தான். இந்த முறை சுதாகரனை தவிர மற்ற அனைவரும் கார்டன் முதல் கோட்டை வரை அதிகார மையமாக வலம் வந்தனர். 

2006ல் மீண்டும் எதிர்கட்சி வரிசை. தோழிகளுக்குள் பிரிவே கிடையாது. ஒய்வு எடுக்க அம்மையார் குளிர் பிரதேசம் சென்றாலும் உடன் சசிகலா இருப்பார். 2011 ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெ முதல்வராக உள்ளார். ஆட்சியமைத்து 6 மாதங்களுக்கு பிறகு கடந்த சில தினங்களாகவே இருவருக்கும் சண்டை என தகவல்கள் பறந்தன. கணவன் - மனைவிக்குள் வரும் சண்டை வருவது போல் தான் இவர்களது சண்டை. காலை சண்டை வந்தால் மனதை மயக்கும் மாலை நேரத்தில் இவர்கள் சண்டை காணாமல் போய்யிருக்கும் என்பதால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. சில தினங்களுக்கு முன் பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் போய்விட்டு வந்த சசிகலா போயஸ் கார்டன் வராமல் அரசு விடுதியில் தங்கிக்கொண்டார். அப்போதும் சாதாரணமாக பார்க்கப்பட்டது. 


கடைசியில் இதே இன்று (19.12.2011) மீண்டும் சசிகலா, நடராஜன், தினகரன், ராவணன், வெங்கடேஷ் உட்பட 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளனர். கட்சியினர் யாரும் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அறிக்கை விட்டுள்ளார் ஜெ. 

நீக்கத்துக்கு காரணம், பெங்களுரூவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெ நிச்சயம் தண்டனை பெருவார். சிறை செல்வார். அப்போது நம்மில் யார் முதல்வர் பதவி ஏற்பது என தங்களுக்கு வேண்டப்பட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா, நடராஜன் போன்றோர் என ஜெ ஆதரவு பத்திரிக்கைகள் தகவல் பரப்பி வருகின்றன. 

எப்போதுமே மேலிடத்து தகவல்கள் வெளியே வரும்போது 30 சதவிதம் உண்மையும், 70 சதவிதம் பொய்யும் கலந்திருக்கும். அது தான் இந்த விவகாரத்திலும். காரணம், என்னவோ இதற்க்கு முன்பு வரை ஜெ மட்டுமே கட்சியையும், ஆட்சியையும் நடத்தினார் என்பது போல் உள்ளது. அதிமுகவில் ஒ.செ பதவி முதல் மா.செ பதவி வரை தீர்மானிப்பது சகோதரி தான். அதேபோல், யாருக்கு சீட் தரலாம் என முடிவு செய்வது கார்டனில் பணியாற்றும் சசியின் உறவினர்கள் தான். 

எம்.எல்.ஏ சீட், மா.செ பதவி, அமைச்சர் பதவி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது சசிகலா தான். பணம் கொடுக்கல், வாங்கல் உட்பட எல்லாவற்றையும் தீர்மானிப்பது இவர்கள் தான். அவர்கள் சொல்வதை தான் இதுவரை ஜெ செய்து வந்தார். அதோடு 83 முதல் இன்றைய தேதி வரை ஜெ வின் அத்தனை விவகாரங்களையும் கவனித்து வந்தது மன்னார்குடி வகையறாக்கள் தான். 


அதிகாரிகள்;, அமைச்சர்கள்;, கட்சிக்காரர்களை வழிநடத்தியது சசிகலா குரூப். ஜெ தன்னுடைய ரத்த உறவுகளை சந்திக்க வேண்டும் என்றாலும் சசிகலா ஒ.கே சொன்னால் தான் சந்திக்க முடியும். ஜெவும் சசி சொல்றத கேளுங்க என அதிகாரிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை உத்தரவிட்டுயிருந்தார். ஆட்சியை நடத்தியவர்களே மன்னார்குடி வகையறாக்கள் தான். அப்படியிருக்க நாற்காலிக்கு ஆசைப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்களின் பலம் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். 

இந்த பிரிவுக்கு பின்னால் ஏதோ ஒரு விவகாரம் ஒளிந்திருக்கிறது. அது பெங்களுரூ சொத்து குவிப்பு வழக்கா அ ஜாத கோளாறா என்பது காலம் நிச்சயம் மக்களுக்கு பதில் சொல்லும். 

ஒரு முக்கிய விஷயம். ஜெ-சசி நண்பர்களாகி 14 ஆண்டுகள் பொருத்து ஜெ-சசி பிரிந்தனர். இது முதல் பிரிவு. பின் இருவரும் சேர்ந்தனர். இரண்டாவது முறை தற்போது பிரிந்துள்ளனர். இந்த இரண்டாவது பிரிவும் 14வது ஆண்டில் நடந்துள்ளது. அதோடு நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆஹா என்ன பொருத்தம். 

1 கருத்து:

  1. தமிழன் விழித்தெழ வேண்டும்....நல்ல கருத்து
    பதிவு...நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...
    www.rishvan.com

    பதிலளிநீக்கு