வெள்ளி, ஜனவரி 13, 2012

பத்திரிக்கையுலகில் மீண்டும் உயரும் பார்ப்பன கைகள்.




சாதி, மதம், அரசியல், வேண்டியவா, வேண்டாதவர் எதையும் பார்க்ககூடாது பத்திரிக்கைகள். ஒரு பிரச்சனையை, செய்தியை, கருத்தை மக்களிடம் கொண்டும் போய் சேர்ப்பதே பத்திரிக்கைகளின் கடமை. ஆனால் உலகம் முழுவதுமே பத்திரிக்கைகள் அந்த காரியத்தை செய்வதில்லை. விறுப்பு வெறுப்புகளோடு தான் செய்திகளை அணுகும்போக்கு இன்றளவும் உள்ளது. அதையும் மீறி நடுநிலையோடு ஒரு ஏடு செய்தி வெளியிட்டால் அவர்களை நசுக்கும் பணியை இதே பத்திரிக்கை துறையே செய்கிறது. 

தமிழகத்திலும் அதே நிலைதான். தமிழகத்தில் செய்தித்தாள் தொடங்கியது முதல் 1900ம் வரை  அது பிராமணர்களின் கட்டுப்பாட்டில் தான் அதிகமாய் இருந்துவந்தது. அன்றைய காலக்கட்டத்தில் செய்திதாள்கள் உண்மை விளிம்பிகள் என்றே மக்கள் கருதினர். ஆனால் பத்திரிக்கையை நடத்திய பார்ப்பனர்கள் அவ்வாறு செயல்படவில்லை. அவர்கள் பத்திரிக்கைகள் மூலம் தங்களது சாதி கருத்துக்களை மறைமுகமாகவும், தங்களது சாதியை சேர்ந்த, போராடும்போது முக்கியத்துவம் தந்து வெளியிட்டு மற்றவர்களை நசுக்கும் பணியை திட்டமிட்டு செய்துவந்தது. 

அது, சுதந்திரத்துக்காக பாடுபட்ட நாளிதழ் என பெயர் பெற்ற சுதேசமித்தரனில் அதிகம். 1982ல் சுப்பிரமணியஐயரால் தொடங்கப்பட்ட சுதேசமித்ரன். தங்கள் சாதியை சார்ந்தவர்களின் கருத்துக்களை, அவர்களைப்பற்றிய செய்திகளை முக்கியத்துவம் தந்து வெளியிடுவது என்றேயிருந்தது. ‘அவாள்’களுக்கு எதிர்ப்பாக கருத்துக்கள் வரும்போது அதை மக்களிடம் போய் சேராமல் மறைப்பது, அதைப்பற்றி உள் நோக்கம் கொண்ட செய்திகளை வெளியிடுவது என இருந்தன. இது சுதேசமித்ரன் மட்டுமல்ல தேசபக்தன், இந்து, சென்னைமெயில் போன்றவையும் அப்படியே. காரணம், அதன் உரிமையாளர்கள் முதல் ஆசிரியர்கள், கிளர்க் வரை ‘அவாளா’கவே இருந்ததால் அவர்கள் நினைத்தது மட்டுமே செய்தியானது. 

விடுதலை போராட்ட களத்தில் பல வீரர்கள் இருந்தும் பார்ப்பனிய தலைவர்களை மட்டுமே தூக்கி வைத்து கொண்டாடின. 1920ல் திரு.வி.க வால் தொடங்கப்பட்ட நவசக்தி காங்கிரஸ்காரர்கள் செய்வது நன்மையே என்றன. 1900க்கு பின் படித்து வளர்ச்சியும், உயர்வும் பெற்ற பல சமுகங்கள் பார்ப்பனிய பத்திரிக்கைகளின்  இந்த தில்லாலங்கடி வேலையை புரிந்துக்கொண்டன. 

அதே காலகட்டத்தில் தமிழக அரசியலில் அவா ஆதிக்கமே அதிகமாய் இருந்தது. இதனாலயே பிராமணர்கள் அல்லாத மக்களுக்காக மெட்ராஸ் ஸ்டேட்டில் 1912ல் திராவிடர் சங்கம் உதயமானது. தனது கருத்துகள், கொள்கைள், பிரச்சாரங்கள், செய்திகளை பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த செய்திதாள்கள் கொண்டு செல்வதில்லை என்பதை உணர்ந்தே திராவிடர் சங்கம், 1917 பிப்ரவரியில் ஜஸ்டீஸ் என்ற ஆங்கில இதழை நடத்தியது. மக்களிடம் பிரபலமான இந்த இதழின் பெயராலயே பின்னர் திராவிடர் சங்கர் ஜஸ்டிஸ் கட்சி என அழைக்கலாயிற்று. அதே 1917 ஜீன் 1ந்தேதி திராவிடன் என்ற தினசரி பத்திரிக்கையும் திராவிடர் சங்கம் நடத்த தொடங்கியது. 

காங்கிரஸ்சில் இருந்து பிரிந்து வந்த பெரியார், 1924ல் குடிஅரசு என்ற வார இதழை தொடங்கி ஆதிக்கம் புரிந்த பிராமணாளுக்கு எதிர்ப்பாக தன் சாட்டையை சுழற்ற தொடங்கினார். அவரின் எழுத்துக்கள் எதிரிகளை வார்த்தைகளால் பொசுக்கியது. அதன்பின்னர் 1928ல் திராவிடன் இதழ் பொறுப்பையும் பெரியார் ஏற்றுக்கொண்டார். வார்த்தைகள் அனாலாய் வந்து விழுந்தன. 1933ல் புரட்சி, பகுத்தறிவு என்ற வார இதழ், உண்மை என்ற இலக்கிய இதழ், ஆங்கிலத்தில் மாடர்ன் ரேஷனலிஸ்ட் என்ற இதழையும் நடத்தி ஆரிய கூட்ட கருத்துக்களின் முனை மங்க செய்து அவர்களை ஒடுக்கினார். அவாள் சரி என எழுதும் விவகாரத்தை தயங்காமல், யோசிக்காமல் தவறு என எழுத்தால் தன் கருத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தார். 


பெரியாரின் தளபதிகளாய் இருந்த பேரறிஞர் அண்ணா - திராவிடநாடு, காஞ்சி, ஹோம்லாண்டு, கலைஞர் கருணாநிதி - முரசொலி, நாவலர் நெடுஞ்செழியன் - மன்றம், ஆசைத்தம்பி தனியரசு, என்.வி.நடராஜன் - திராவிடன், மதியழகன் - தென்னவன், சத்தியவாணிமுத்து - அன்னை, ஆதித்தனார் - தினத்தந்தி, டி.எம். பார்த்தசாரதி - மாலைமணி போன்ற என்னற்ற திராவிட இயக்க தினசரிகள், வார, மாத இதழ்கள் வெளிவந்தன. 

திராவிட தளபதிகளின் வீரிய எழுத்தை தாங்க முடியாமல் காங்கிரஸ் பேரியகத்தில் இருந்த திரு.வீ.க 1917 டிசம்பரில் தேசபக்தனை தோற்றுவித்தார். திராவிடன் இதழ்க்கு போட்டியாக கருத்து யுத்தம் செய்தது. அதேபோல் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி, தினமலர், துக்ளக் போன்றவை தொடங்கப்பட்டு அவா மொழி பேச தொடங்கின. 

நாடு விடுதலையடைந்த 20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் காங்கிரஸ் பேரியத்தின் ஆட்சி துடைக்கப்பட்டு திமுக, எம்.ஜீ.ஆர் காலத்து அதிமுக ஆட்சியில் இந்த பிராமணிய பத்திரிக்கைகள் பொட்டி பாம்பாய் அடக்கி வாசித்தன. அதேநேரத்தில் விற்பனைக்காக, தாங்கள் தமிழ் மொழியின் தீரர்கள், கீழ்தட்டு மக்களின் பிரதிநிதிகள் என்பதை போல கட்டுரைகள் எழுதின. தமிழ்மொழி மீதான காதல் முகமுடி போட்டுக்கொண்டு தினமணியும், பார்ப்பனிய கருத்துக்களை விசமாய் கக்கிக்கொண்டு தினமலரும் வெளிவந்தன. அவர்களின் கட்டுரைகளை, செய்திகளை ஆழ்ந்து படிக்கும் போது பிராமணர்களின் உள் அரசியல் விளங்கும்.

அடங்கிகிடந்த அந்த செய்திதாள்கள் இன்றைய போட்டி, வியாபார உலகில் மீண்டும் தங்களது கரங்களை விரிக்க தொடங்கியுள்ளன. இந்தியாவில் சி.என்.என்-ஐ.பி.என் குரூப், என்.டி.டி.வி குரூப், இந்து நாளிதழ் குரூப், எக்ஸ்பிரஸ் குரூப், டெக்கன்கிரானிக்கல் குரூப், டைம்ஸ் ஆப் இந்தியா குரூப் போன்ற பல செய்தி நிறுவனங்கள் தங்களது வக்கிர சாதி புத்தியை காட்ட தொடங்கியுள்ளார்கள். இந்தியாவை, அதன் மாநிலங்களை தங்களது அவா அ பிரமணிய ஆட்கள் அ இந்துத்துவா வெறி கொண்ட தலைவர்கள் மட்டுமே ஆளவேண்டும் என்ற குறிக்கோளில் இறங்கியுள்ளார்கள். 

தமிழகத்திலும் இந்த போக்கு அதிகமாகியுள்ளது. பிராமண சமுகத்தை சேர்ந்த ஜெயலலிதா முதல்வாரன பின் இதுவரை இலைமறை காயாக தங்களது சாதி பாசத்தை காட்டி வந்த பத்திரிக்கைள் தற்போது சாதாரணமாக புரிந்துக்கொள்ள முடியாத வகையில் நுணுக்கமாக வெளிப்படையாக சாதி வெறியை செய்திகளில் கட்டுரைகளில் காட்ட தொடங்கியுள்ளன. தங்களை மற்ற பத்திரிக்கைகள், பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் பின்பற்ற வேண்டும் இல்லையேல் நடுநிலை என்ற முகமுடியை போட்டுக்கொண்டு அவர்களை துரோகிகளாக, மோசமானவர்கள் என்ற பிரச்சாரத்தை செய்கிறது இந்த பார்ப்பன ஏடுகள். இதற்க்கு தங்களிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்துகின்றன. இதற்க்கு பயந்தோ அல்லது வியாபாரத்துக்காக பல திராவிட இதழ்கள் அவா மொழி பேசவும், பின்பற்றவும் தொடங்கியுள்ளன. 

திராவிட இயக்கங்ளை, பெரியாரின் கருத்துக்களை அழிக்க துடிக்கும் செய்தித்தாள்களை தான் தந்தை பெரியாரின் பிள்ளைகள், பேரன்கள் எனக்கூறிக்கொள்பவர்கள் தலை குப்புற நின்று ஆதரிக்கிறார்கள். 

இந்த பார்ப்பன பத்திரிக்கைகளிடம்மிருந்து சமுகத்துக்கு விடுதலை வாங்கி தந்த அந்த ‘கிழவன்’  இறந்தபின் சில காலம் அடக்கியிருந்தவர்கள் இன்று துள்ளி எழுகிறார்கள். இவர்களை அடக்காவிட்டால் நாளை அவா கருத்தே உன் கருத்தாகிவிடும் ஜாக்கிரதை.  

5 கருத்துகள்:

  1. பெரியார் என்ன வெங்காயம்...??இந்த அளவிற்கு இந்த நாடும், சமுதாயமும் சீரழிந்ததற்கு காரணம் அந்த மனிதன்தான்...

    பதிலளிநீக்கு
  2. அருமையானப் பதிவு, பார்ப்பனுக்கும் பார்ப்பான் சொம்புகளுக்கும் எரியுமே.

    பதிலளிநீக்கு
  3. MR. trhiyagarajan; poda vennai,punaakku.

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் ஒரு பெரியார் வருவார் அவாள்களின் கொட்டத்தை அடக்க // ஒண்ட வந்த பிடாரி வூர் பிடாரியை விரட்டியதை போல் குமுதத்தையும் சூழ்ச்சியால் கைப்பற்ற முனைகிறார்கள்.

    பதிலளிநீக்கு