திங்கள், நவம்பர் 28, 2011

சினிமாக்காரர்களுக்கு நாவடக்கம் தேவை.




நடிகர் சிவக்குமார், புது இலக்கிய மேடை பேச்சாளர். கம்பன் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், இலக்கிய நூல்களை பற்றியும் மேடைகளில் அடுக்கு மொழில் பேசும் இந்த நடிகர் தமிழ் பெண்களை மேடைகளில் கிண்டலடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தமிழகத்தில் தியாகராஜபாகதவர் என்ற சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து கொண்ட நடிகர் இருந்தார். அவரின் நடிப்பும், அவரின் குரல் வளம், உடல் பலத்தை பார்த்த கேட்ட தமிழ் பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் உனக்கு பிள்ளைகளை பெற்றேன், ஆனால் இவர் போன்ற ஒரு ஆளிடம் சென்று பிள்ளைகள் பெற வேண்டும் எனச்சொல்லி அவருடன் படுக்க அனுமதி கேட்டார்களாம்.

அதேபோல், காதல் திருமணம் செய்துக்கொண்டு ஐதராபாத்தில் வாழும் ஒரு தம்பதி, அப்பெண் சுகத்துக்காக தனது கணவனின் நண்பரிடம் சுகம் கண்டால், கணவன் தன் மனைவியின் தோழியுடன் அதாவது தனது நண்பனின் மனைவியுடன் சுகம் கண்டான். இது இருவரும் தெரிந்தும் கண்டுக்கொள்ளமால் தங்களது போக்கில் வாழ்கிறார்கள் இதுதான் இன்றைய காதல் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளாராம்.

ரிட்டையர்டு நடிகரான சிவக்குமார், தனது மூத்த மகன் சூர்யாவுக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். அப்போ, அவரின் மகனும் மருமகளும் ஐதராபாத்தில் உள்ள ஜோடிகளைப்போல் தான் நடந்துக்கொள்கிறார்களா?,


அவரது இளைய மகன் நடிகர் கார்த்தியை விட அவரது பெரிய மகன் சிறப்பாக நடிக்கிறார் என்ற பேச்சு உள்ளது. அப்போ கார்த்தியின் மனைவி அவருக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறா?. என சிவக்குமாரிடம் கேள்வி கேட்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. ஆனால் கேட்க மனம் வரவில்லை. இவர் பேசியதற்க்கு அவர்கள் என்ன செய்வார்கள்.

சிவக்குமார் போன்ற சினிமாக்காரர்களுக்கு முதலில் நாவடக்கம் தேவை. சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் பெண்கள் கற்புடையவர்களாக இருப்பார்கள் என திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்கள் எதிர்பார்க்ககூடாது. அதாவது தமிழ் பெண்கள் கற்புடன் இல்லையென்றார். மலையாளத்தில் நடிகராக உள்ள ஜெயராமன், என் வீட்டில் வேலை செய்த தமிழ் பெண்மணி கறுத்த எறுமை போல் இருந்தார் என்றார். மைக் கிடைக்கிறது, பேட்டி கேட்கிறார்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்ல துணிகிறது இவர்களின் நாக்கு.

நீங்கள் நடிகர்கள், பணத்துக்காக பல வித வேடங்களில் வந்து திரையை ஆக்ரமிக்கும் நீங்கள் தமிழ் பெண்களைப்பற்றியும், தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் கருத்து தெரிவிக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது எம்மக்களை விமர்சனம் செய்ய. சினிமாக்காரர்கள் உலகம் எப்படிப்பட்டது என்பது உலகறியும். பெண்களை போகப்பொருளாக, உங்களின் காம வெறியை தீர்த்துக்கொள்ளும் இடமாகவும், உடலை பணத்துக்காக விற்க்கும் சினிமா விபச்சாரிகளாகவும் தான் இருக்கிறிர்கள். நீங்கள் எம்மக்களை விமர்சனம் செய்கிறிர்கள்.


தியாகராஜபாகவதர் இறந்தபோது, இதே சிவக்குமார் சினிமாவில் தான் இருந்தார். அந்த ஸ்டார் இறந்தபோது இவர் எங்கு போனார்?. அவர் இறப்புக்கு சினிமாக்காரர்கள் ஒரு கை விரல் அளவுக்கு தான் வந்திருந்தார்கள். அவர் கடைசி காலத்தில் அநாதையாக சாலையில் திரிந்து இறந்தார். இன்று அவரைப்பற்றி பேசும் நீங்கள் அவரது பிறந்த நாளோ, இறந்தநாளோ உங்களுக்கு தெரியுமா?. அவர் வந்து உங்களிடம் சொன்னாரா என்னிடம் வந்து பெண்கள் இப்படி கேட்டார்கள் என்று.

யாராவது ஏதாவது சொன்னால் உடனே வந்து மேடையில் ‘வாந்தி’ எடுப்பது என்பது முட்டாள்தனம். ஒருவர் ஒரு விவகாரத்தை கூறுகிறார்கள் என்றால் அது உண்மையா, பொய்யா என்பதை அறிந்தே பேச வேண்டும் என்பதை சிவக்குமார் இனிமேலாவது கற்றுக்கொண்டால் சரி.


1 கருத்து: