திங்கள், பிப்ரவரி 03, 2014

மோடி நல்லவராம்...... சே வின் தகிடுதத்தம்.





நடுநிலை வேடம் போடும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னிபார்வை என்ற நிகழ்வில் இந்துத்துவாவாதி சோ ராமசாமி கலந்துக்கொண்டார். அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. மோடியை ஏன் முன்னிறுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு, நேர்மையானவர் என பதில் தந்தார் சோ.

ஜெ ஆட்சியில் குறைகளேயில்லை என்றார், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் மோடி என புகழ்பாடினார், திமுகவை அழிக்க வேண்டும்மென்றார், திமுகவில் ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்தார், அழகிரியால் திமுகவுக்கு இழப்பில்லை, காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு தேவை, பி.ஜே.பி வளரவில்லை, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள், இலங்கையில் இனப்படுகொலையே நடக்கவில்லை, இராஜபக்சே ரொம்ப............ நல்லவர், இரு தரப்பும் விரும்பினால் மட்டுமே கூட்டணி அமைக்க பாடுபடுவேன் என முழங்கினார். நான் திமுகவை ஒழிக்க வேண்டும் என கருத்துள்ளவன், எம்.ஜீ.ஆர் நல்லவர், இந்திரா கெட்டவர் என நீட்டி முழங்கினார்.

சோ பற்றி அடிக்கடி நான் கூறுவது தான். பார்ப்பனர்களுக்கே உள்ள புத்தி. திராவிடத்தை அழிக்க வேண்டும் என நீண்டகாலமாக போராடிக்கொண்டுயிருக்கும் ஆரிய கூட்டத்தின் தலைவர்களில் முக்கியமானவர்கள் சோ, குருமூர்த்தி, சங்கரமடம் வகையறாக்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதுயெல்லாம் திமுகவை அழிக்க வேண்டும், திராவிடத்தை நசுக்க வேண்டும் என்பதே அவாளின் அவா. அதைத்தான் தனது நேர்காணலில் தெளிவாக எடுத்துரைத்தார். திராவிட கட்சிகள் என பெயர் வைத்துக்கொண்டவர்கள் எல்லாம் திராவிட கட்சிகளள்ள. ( உ.ம் அதிமுக, தேமுதிக போன்றவை. ) ஆரியத்தின் எதிரி திகவும், திமுகவும் தான். திராவிட கட்சியொன்று பதவியில் இருப்பதும், அதிகாரம் செலுத்துவதும் அவா வகையறாக்களுக்கு சுமார் 40 ஆண்டுகாலமாக ஒவ்வாமையாக உள்ளது. அதனால் தான் நேரடியாகவே திமுகவை அழிக்கவே அவர்களை எதிர்க்கிறேன் என்கிறார்.

கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகள் என்னிடம் வந்து நாங்கள் கூட்டணி சேர விரும்புகிறோம் என பேசினால் நான் இரு தரப்பையும் சேர்த்து வைப்பேன். கொய்யால அதுக்கு பேரு புரோக்கர் வேலை பாக்கறது. நானா போய் யார்க்கிட்டயும் கெஞ்ச மாட்டன் என்றார்.

மோடி ரொம்ப நல்லவர் என்றார். மோடி எந்த காலத்தில் நல்லவராக இருந்தார்??????

முதல்வர் என்ற அதிகாரத்தை வைத்து இளம்பெண்ணை வேவு பார்க்கிறார். தீவிரவாதிகள் என போலியாக பலரை என்கென்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்ல வைக்கிறார். அதைவிட முக்கியம் குஜாரத் கலவரத்தை காவி கூடாரங்கள் வேண்டுமானால் மறந்து போகலாம். மனிதாபிமானம் கொண்டவர்கள் யாரும் மறக்க முடியாது. இஸ்லாமிய பெண்ணின் வயிற்றில் இருந்த சிசுவை கத்தியால் குத்தி வெளியே எடுத்தவர்கள் மோடியின் சிஷ்யகோடிகள். இரண்டு நாள் முழுவதும் குஜராத் மாநிலம் முழுவதும் மனித மாமிசம் திண்றவர்கள் பி.ஜே.பியும் அதனை இயக்கும் காவி இயக்கங்களும். இந்த இயக்கங்களின் செல்லப்பிள்ளையான மோடியை புனித ஆத்மாவாக காட்டுகின்றனர். 


நாட்டை ஆளும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துகின்றனர்.

மோடி நேர்மையானவர் என்ற பிம்பம் காவி கூடாரங்களின் ஏற்பாட்டில் அமெரிக்க விளம்பர கம்பெனி உதவியுடன் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. டாடா உட்பட பல பெரும் கம்பெனிகளுக்கு மோடி செய்த “உதவிகள்“ அதைக்கொண்டு அவர் அடித்த கொள்ளைகள் பல்லாயிரம் கோடிகள் என்பதை திட்டமிட்டு மறைக்கிறது இந்த காவி கும்பலும், அவருக்கு கொடி பிடிப்பவர்களும்.

குஜராத் வளர்ந்த மாநிலம் என்கிறார்கள். குஜராத் வளர்ந்த மாநிலம்மா என்பதை குஜராத் அரசு தந்த புள்ளி விவரங்களை ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்கள் தந்த புள்ளிவிவரப்படி குஜராத் வளராத மாநிலம் என்பதே உண்மை.

அதேபோல் ஊட்ட சத்து குறைப்பாட்டால் ஆண்டு தோறும் இறக்கும் குழந்தைகள் அதிகரிக்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத்.

குடிநீர் பிரச்சனையால் தவிக்கும் மாநிலங்களில் முக்கிய இடம் வகிப்பது குஜராத் தான்.

மின் வெட்டு என்பது குஜராத்தில் கிடையாது. தேவைக்கு போக மீதியை வெளிமாநிலங்களுக்கு விற்கிறது என்கிறார்கள். குஜராத்தில் 30 சதவித குடிசைகளுக்கு மின்வசதி கிடையாது என்பதை மறைக்கின்றனர்.

குஜராத் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலம் என தம்மடம்மடிக்கிறார்கள். உண்மை தான் மோடி வகையறாக்கள் சாராயத்தை மது பட்டியலில் வைக்கவில்லை.

மத மோதல் மட்டுமல்ல சாதி மோதலையும் தடுக்காத, சாதி துவேஷத்தை துண்டி விடும் அரசாக மோடி அரசாங்கம் உள்ளது என்பதை ஆதாரத்தோடு வெளிப்படுத்தியுள்ளார்கள் பலரும்.

இதையெல்லாம் தான் மறைக்கிறார் சோ. மோடியின் ஆலோசகர் சோ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்கிறார், ஈழம் கனவிலும் கிடையாது என்கிறார் ஆனால் தமிழ் உணர்வாளர்களாக அடையாளம் காட்டிக்கொள்பவர்கள் இன்னமும் மறைமுகமாக தமிழுக்கு எனச்சொல்லிக்கொண்டு ஆரியத்துக்கு கூஜா தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள். நடுநிலை பேசும் ஐ.ஜே.கே பச்சைமுத்துவின் புதியதலைமுறை தொலைக்காட்சியும் நடுநிலை என்ற பெயரில் மோடிக்கு பிரச்சாரம் செய்கிறது.  

கொலைகாரனுக்கு கோயில் கட்டுகிறார் சோ. தமிழ் உணர்வாளர்கள், திராவிட எதிர்ப்பாளர்கள், நடுநிலை பேசும் தொலைக்காட்சி, செய்த்தித்தாள்கள் அதற்கு செங்கல் எடுத்து தருகின்றன. நாடு வௌங்கிடும்.

3 கருத்துகள்:

  1. நர மாமிசம் தின்னும் நரைந்தர் மோடி காவி இந்துத்துவ தீவிரவாதிகளால் இந்தியாக்கு மிகபெரும் ஆபத்து

    பதிலளிநீக்கு