ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

சுகமான சுமைகள் …………. 25.




ஏய் நானும் ஆறு மாசமா கேட்டுக்கிட்டு இருக்கறன். கொஞ்சம் கூட கருணை காட்டமாட்டேன்கிறியே நியாயமா?. நான் என்ன ஊர் உலகத்தல நடக்காததயா கேட்டன். அங்கப்பாரு அவுங்க எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க. அவளைப்பாரு அவனை ஏதோ கடிச்சி முழுங்கற மாதிரி பாக்கறா?. நீயும் இருக்கியே…. 

நீ உதை வாங்கப்போற. 

எதுக்கு.

எங்கக்கா நீ ரொம்ப நல்லவன்னு சொன்னதால தான் உன்னை லவ் பண்றன். இந்த மாதிரி டார்ச்சர் பண்ண கட் பண்ணிடுவன். 

ஓவ்வொருத்தனும் நாலஞ்சி கரெக்ட் பண்ணி வச்சிக்கிட்டு லவ்வுங்கற பேர்ல லூட்டி அடிக்கறான். நான் எவ்வளவு ஒழுக்கமா நீ கிழிக்கற கேட்ட தாண்டாம நல்ல பிள்ளையா இருக்கன். நாம காதலிக்க ஆரம்பிச்சி ஒரு வருஷமாகப்போகுது. என்னைக்காவுது உன்னை தப்பா பாத்துயிருக்கனா. 

பாத்தாக்கூட பரவாயில்ல. நீ கேட்கறயே.

என்னத்த பெருசா கேட்டுட்டாங்க. ஒரே ஒரு கிஸ் கேட்டன் அதுவும் கன்னத்தல. அவ அவ காதலன் கேட்கமாட்டாலான்னு ஏங்கறாளுங்க. நீ என்னடான்னா………

இங்கப்பாரு முடியாதுன்னா முடியாது தான். நான் உன்கூட வெளியில வந்ததே தப்பு. நீ அமிர்தி போகலாம்மான்னு கேட்கும் போதே யோசிச்சியிருக்கனும். இப்ப வந்து மாட்டிக்கிட்டன் என்றவள் அவள் தோள் மேல் சாய்ந்திருந்த என்னை பிடித்து தள்ளினால். 

அவள் அப்படி தள்ளியதும் கோபமாகி ஏய் இப்ப என்ன கேட்டுட்டன்னு தள்ளிவிடற. நான் கேட்டது தப்பு தான். உன்ன அழைச்சி வந்ததும் தப்பு தான் போதும்மா.

இப்ப எதுக்கு கோப்படற. 

நான் ஏன் உன் மேலப்போய் கோபப்பட போறன். 

எனக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னா விடேன். 

ஏய் என்ன இப்படி சொல்ற. கல்யாணத்துக்கு அப்பறம் கூட கிடையாதா?. 

நம்ம காதலை வீட்ல ஏத்துக்கிட்டு கல்யாண ஏற்பாடு பண்ணட்டும் அதுக்கப்பறம் நீ போதும் போதும்ன்னு சொல்ற அளவுக்கு நீ விரும்பறப்படி தர்றன். 

அதுக்கு எப்படியும் இன்னும் இரண்டு வருஷத்துக்கு மேலாகுமே. 

ஏன் ஏன் அவ்ளோ நாள் என படப்படத்தாள். 

லூசா நீ. நமக்கு இந்த வருஷம் தான் காலேஜ் முடியுது. அதுக்கப்பறம் வேலைக்கு போய் ஒரு வருஷமாவுது சம்பாதிக்கனும். அதோட முக்கியம் நமக்கு நடக்கறதுக்கு முன்னாடி ப்ரியாவுக்கு கல்யாணமாகனும். 

ஆமாம்யில்ல. 

அதுக்கு தான் சொல்றன். நீ கொஞ்சம் கருணை காட்டனா நல்லாயிருக்கும். 

கோபமாக முகத்தை திருப்பி திரும்ப அந்த நினைப்புக்கு போகாத. 

சரி சரி. அதப்பத்தி பேசல. 

சரி அக்காக்கிட்ட என்ன சொல்லிட்டு வந்த. 

நீ வேற இப்பவெல்லாம் ப்ரியாக்கிட்ட நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டன். 

ஏன்?. 

எல்லாம் காதலிக்க ஆரம்பிச்ச பிறகு தான். உன்ன சந்திக்க வர்றப்பயெல்லாம் ஏதாவது பொய் சொல்ல வேண்டியிருக்கு. ஜான்கிட்டயும் அடிக்கடி சமாளிக்கச்சொல்றன். அவன் நீயேப்போய் இப்பவே ப்ரியாக்கிட்ட சொல்லிடு. அதுக்கா தெரியவந்துச்சின்னா பிரச்சனையாகிடும்னு பயமுறுத்தறான். எனக்கும் அவளை ஏமாத்தறனேன்னு கஸ்டமாயிருக்கு. 

அதுக்கு.

அவ நல்ல மூடுல இருக்கறப்ப நம்ம லவ் மேட்டர சொல்லிடலாம்னு இருக்கன். 

எதுவும் சொல்லாதுயில்ல என கேட்டவள் நான் பதில் சொல்லதைப்பார்த்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். 

மாம்ஸ் என மெல்லிய குரலில் அழைத்தவளின் முகத்தை உற்று நோக்கியதும் ஒ.கோயாகிடும்முள்ள என கேட்கும்போதே அவளின் குரல் உடைந்து போனது. 

ச்சீ விடு. அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டா. அவளை நான் சம்மதிக்க வைக்கறன் என்றேன். அவளிடம் தான் அப்படி சொன்னேனே தவிர மனதோ குழப்பமாத்தான் இருந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கவியிடம் சகஜமாக பேசிக்கொண்டு மாலை அவளை வீட்டின் அருகே கொண்டும் போய்விட்டுவிட்டு வந்தேன். 

ஃபைக்கை தருவதற்காக ஜான் வீட்டுக்கு செல்லும் வழியில் எல்லாம் மனம் த்தளித்தது. லவ் மேட்டர ப்ரியாக்கிட்ட சொன்னா எப்படி எடுத்துக்குவா. நண்பனா பழகிட்டு இப்படி என் தங்கச்சியையே லவ் பண்றியே நியாயமான்னு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது. அது கேட்கலன்னாலும் அதோட அப்பவும், அம்மாவும் கேட்பாங்களே?. இதனால ப்ரியா பேசாமலே போய்ட்டா என நினைக்கும்போதே நெஞ்சி வெடித்துவிடும் போல் இருந்தது. ப்ரியா பிரச்சனையில்ல நான் தான் காதலிக்கறன்னு தெரிஞ்சா சந்தோஷத்தோடு ஏத்துக்கும் என சிறிது நேரத்தில் மனம் நம்பிக்கை தெரிவித்தது. 

ஜான் வீட்டில் இல்லை வண்டியை பார்க் செய்துவிட்டு சாவியை தந்துவிட்டு ரூம்க்கு வந்துவிட்டேன். 

மறுநாள் காலை எப்போதும் போல் கல்லூரிக்கு நானும் அகிலனும் போகும்போது, எப்போதும் நாங்கள் அமரும் புங்கமரத்தின் கீழ் ப்ரியா மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள்.

தூரத்தில் இருந்து வரும்போதே தெரிந்தது. டைம் 9 தானே ஆகுது. அதுக்குள்ள ப்ரியா காலேஜ் வந்திருக்கா, ஏதாவது பிரச்சனையா என யோசித்தபடி நடக்க அகிலன் என்னடா சீக்கிரம் வந்துயிருக்கு என கேட்டபடியே வந்தான். வேகமாக ப்ரியாவிடம் சென்றதும் என்னை பார்த்ததும் அவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. பொறுக்கி நாயே, உன்ன செருப்பால அடிக்கறன் என எழுந்து வந்து கன்னத்தில் பளார், பளார் என அறைய நிலை குலைந்து போனேன். அவள் அடிப்பது ஒன்னும் புதியதல்ல. அவள் பேசிய வார்த்தைகள் என் நெஞ்சில் ஈட்டியைய் சொருகியது போல் இருந்தது. உன்னயெல்லாம் நம்பனன் பாரு. என்னையும் தான் அடிச்சிக்கனும் என அழுதுக்கொண்டே சூடாக பேசப்பேச கல்லூரிக்குள் வந்த சக மாணவ-மாணவிகள் நின்று இதனை வேடிக்கை பார்த்தனர். அருகில் இருந்த அகிலன் ப்ரியாவுக்கு பயந்து தூரவே நின்றான். 

என்னை ஏமாத்திட்ட நீ. உன்ன எவ்வளவு நம்பனன். என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சி, பொய் சொல்லி என்னை முட்டாளாக்கியிருக்கற என அழுதவள் இனிமே என் மூஞ்சியிலயே முழிக்காத என்றபடி அழுதுக்கொண்டே க்ளாஸ்க்கு போனால். அவள் பேசிய பேச்சின் அதிர்ச்சியில் இருந்து மீள 5 நிமிடமானது. 

மச்சான் என்னை மன்னிச்சிடுடா என்ற ஜானின் குரலை கேட்டதும் தான் சுய நினைவுக்கு வந்தேன். நேத்து மதியம் நானும் தேவியும் சினிமாவுக்கு போறதப்பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப ப்ரியாவும் கூடயிருந்தது. ப்ரியா அடிக்கடி எங்களை கிண்டல் செஞ்சதா அந்த டென்ஷன்ல அதுங்கக்கிட்ட உன் லவ் மேட்டர சொல்ல வேண்டியதாகிடுச்சி என இழுத்தான். 

அது என்னை அடிச்சிட்டு திட்டும்போதே புரிஞ்சது. லேட்டா தெரிய வேண்டியது இப்ப தெரிஞ்சிடுச்சி. நானா சொல்லியிருந்தா பிரச்சனை சின்னதா இருந்திருக்கும். நீ சொன்னதால பெருசாகிடுச்சி. விடு இனிமே அடுத்து என்ன பண்றதுங்கறத்தான் யோசிக்கனும் என அவனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு அந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். நேத்து சொன்னன்ங்கற அப்ப கவிதாக்கிட்ட ஏதாவது கேட்டுயிருக்குமா?. 

டேய், அதுக்கூட பரவாயில்ல. அவுங்க அப்பா-அம்மாக்கிட்ட சொல்லயிருந்தா? 

அதெல்லாம் அது சொல்லாது என்றதும் அமைதியானான். 

வகுப்புக்கு போகவே பிடிக்கவில்லை. அங்கேயே அமர்ந்திருந்தேன். ஜானும் க்ளாஸ்க்கு போகவில்லை. அகிலனும் கூடவேயிருந்தான். மதியம் லஞ்ச் டைமில் எங்களை க்ராஸ் செய்துக்கொண்டு போன ப்ரியா நாங்கள் இருந்த அந்த சிமெண்ட் பெஞ்ச் பக்கம் திரும்பவேயில்லை. எனக்கும் சாப்பிட பிடிக்காவில்லை. அங்கு வந்த தயா, ரமேஷ் இருவரும் என்னடாச்சி என கேட்க ஜான் தான் சொன்னான். 

ஒழுங்கா உண்மைய சொல்லு. உன் லவ்வப்பத்தி ப்ரியா இவன்கிட்ட சொன்னதுக்கு பழிக்கு பழி வாங்க இவன் லவ்வப்பத்தி அதுங்கிட்ட போட்டு தந்துட்டியா என்றதும் சத்தியமா இல்லடா என்றான். மாலை எல்லோரும் காலேஜ் விட்டு போகும்போதும் அங்கேயே அமர்ந்திருந்தேன். அப்போதும் ப்ரியா என்னை உதாசீனப்படுத்தி விட்டுபோனால். அவள் என்னை உதாசீனப்படுத்தியது தான் என் நெஞ்சில் நெருப்பாய் சுட்டது. 

இரவு சாப்பிட பிடிக்கவில்லை இருந்தும் அகிலன் தான் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தான். அதற்கடுத்த மூன்று நாட்கள் ப்ரியாவை பார்க்கவே முடியவில்லை. மனம் வெறுத்துப்போய் சைக்கிள் ஸ்டான்டீல் அமர்ந்திருந்தபோது, ஜான் தேவியோடு அருகே வந்து எதிரே நின்றார்கள். ஒருவருக்கொருவர் பேசாமல் அமைதியாக இருந்ததும் தேவியே, அன்னைக்கு தெரியாமத்தான் சொல்லிட்டான் என்றதும் அவனை முறைத்தப்படி இங்கப்பாரு தேவி யார் சொன்னாங்கங்கறது பிரச்சiயில்ல. சொல்லிட்டான். வேணும்னே சொன்னான்னு நான் சொல்லல. எனக்கு அந்த நினைப்பும் வரல. பசங்க அவனை கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தான்ங்க. நான் அத பெருசா எடுத்துக்கல. சொல்றதாயிருந்தா அவன் எப்பவோ சொல்லியிருக்கலாம். அதவிட்டுட்டு இப்ப சொல்லியிருக்கான்னா ஏதோ டென்ஷன்ல சொல்லியிருப்பான். அதனால அது இப்ப பிரச்சனையில்ல. இத எப்படி சால்வ் பண்றதுங்கறது தான். 

அவக்கிட்ட பேசிப்பாத்தன். நீ அவளை ஏமாத்திட்டன்னே சொல்லிக்கிட்டு இருக்கறா. கவிதாக்கிட்டயும் பேசறதில்ல என்ற தேவியிடம். இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே கோயிலுக்கு ஒரு ஏழு மணிக்கா அழைச்சிக்கிட்டு வா நான் பேசிப்பாக்கறன். 

ம் என தலையாட்டிவிட்டு கிளம்பி சென்றது. 

6:30க்கே கோயில் உள் பிரகராத்தில் உள்ள விநாயகர் சந்நதியில் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் தேவியும் ப்ரியாவும் வந்தனர். 

ப்ரியா என்னைப்பார்த்தும் கோபமாகி தேவியை முறைத்தாள். 

ஏதோ பேசனும்ன்னான் அதான் என இழுத்தவள் என்னன்னு தான் கேளேன் என்ற தேவி நான் ப்ரியாவின் அருகே போனதும் தேவி எங்களை தனியே விட்டுவிட்டு போனது. நான் அவள் முன் தலை குனிந்து நின்றபடி நான் பண்ணது தப்பு தான் ஸாரி என்றதும் கோயில் என பார்க்காமல் பளார் என அறைந்தாள். 

அவள் முகம் முழுக்கவே கோபமாகயிருந்தது. ஒரு நிமிடம் தயங்கி அவ உன் தங்கச்சின்னு தெரியாமத்தான் ஒயிட் கலர்ன்னு சொல்லுவேனே அது கவிதாத்தான். அன்னைக்கு நீ அறிமுகப்படுத்தனப்ப தான் அது உன் தங்கச்சின்னு தெரியும். இருந்தும் மனசு கேட்கல. அதான் லவ் பண்றன்னு சொன்னன். அவுங்களும் ஏத்துக்கிட்டாங்க. நான் உங்கிட்ட சொல்லிடலாம்ன்னு பாத்தன். அதுக்குள்ள அவன் சொல்லிட்டான். 

ஒரு வருஷமா உங்களுக்கு தோணலையோ.

இல்ல……… அது வந்து என தடுமாறியதும் 

திரும்பவும் பொய் சொல்ல முயற்சி பண்ணாத என்றவளிடம். 

காலேஜ் வரலியா அதான் கோயிலுக்கு வந்தன். 

நான் காலேஜ் வந்தன். உன் மூஞ்சியிலயே முழிக்ககூடாதுன்னு தான் நீ இருக்கற பக்கமே வரல.

இதைக்கேட்டதும் அதிர்ச்சியாகி கண்ணீல் நீர் தளும்பியது. எங்கே மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் அருவியாய் கொட்டிவிடுமோ என பயந்து அiதியாக அழுகையை அடக்கிக்கொண்டு இருந்தேன். அமைதியை பயன்படுத்திக்கொண்டு ப்ரியா என்னை விட்டுவிட்டு நடந்து போய்க்கொண்டிருந்தாள். 

கோயிலின் உயரமான மதில் சுவர் மீது சாய்ந்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் நின்றிருந்தேன் என நினைவில்லை. மழை தூரல் விழும்போது தான் நினைவுக்கு வந்து மழையிலேயே நனைந்தப்படி ரூம்மை நோக்கி நடந்தபோது, என் மூகத்தையே பாக்ககூடாதுங்கற அளவுக்கு என் மேல வெறுப்பா என கண்ணீர் மழை நீரில் கலந்து போனது. 

மறுநாள் கவிதா காலேஜ் போகும்முன் பேருந்து நிலையத்தில் அவளை பார்த்தபோது, உங்கக்குக்கு லவ் மேட்டர் தெரிஞ்சிடுச்சி என்றதும் அதிர்ச்சியாகி அதான் பேசறதில்ல போல என்றவள் வீட்ல யார்க்கிட்டயும் சொல்லல என்றாள். தனியா வந்து சந்திக்காத வெள்ளிக்கிழமை கோயில்ல சந்திப்போம், அவசரம்ன்னா தேவிக்கிட்ட சொல்லிவிடு இல்ல ரூம்க்கு வா எனச்சொல்லிவிட்டு வந்தேன். 

அடுத்தடுத்து வந்த நாட்களில் காலேஜ் வளாகத்தில் அவளை சந்திக்கும் நிமிடங்களில் என்னை தவிர்த்துவிட்டு போக தொடங்கினால். நித்தம் நித்தம் சந்தித்துக்கொண்ட எங்களது பொழுதுகள் இப்போது வீணாககிடந்தன. 

மச்சான். காலேஜ் முடிய இன்னும் 3 மாசம் தான் இருக்கு. எப்படியாவது இப்பவே சமாதானப்படுத்திடு. இல்லன்னா அப்பறம் கஸ்டமாயிடும் என்ற ஜான். கவி உன்ன பாக்கனும்மாம் ஈவ்னிங் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணச்சொல்லுச்சாம். 

ம். எனச்சொல்லிவிட்டு அவனிடமே ஃபைக் வாங்கிக்கொண்டு ரூம்க்கு வந்துடு எனச்சொல்லிவிட்டு கிளம்பினேன். மனம் ப்ரியாவை எப்படி சமாதானம் செய்வது என்ற நினைப்பிலேயே போக ஃபைக் பொய்கையை தாண்டி போய்க்கொண்டுயிருந்தது. திடீரென விழிப்பு வர ஹய்யோ ரொம்ப தூரம் வந்துட்டமே என யூ டர்ன் அடிக்க திரும்பிய போது தான் அது நடந்தது. எதிரே வந்த ஒரு கார் அப்செட்டாகி மரத்தின் மீது மோதியது. டிரைவர்க்கு பலத்த காயமாக இருக்க காரில் இருந்த ஒருவர் தூக்கி வெளியே வீசப்பட்டார். 

இதனை பார்த்து வண்டியை நிறுத்தவிட்டு ஓடியபோது கல் தடுக்கி கீழே விழுந்து எழுந்து ஓடிப்போய் பார்த்தபோது அவரின் தலை, முகம்மெல்லாம் அடிப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டுயிருந்தார். அவரை தூக்கி சார் சார் என அழைத்தபோது உம் கொட்டினார். 

கூட்டம் கூட சிலர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தந்தனர். இவருக்கு பிளட் ரொம்ப லீக்காகுது. இவரை இப்படியே விட்ட ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள இறந்துடுவாரு. யாராவது ஹெல்ப் பண்ணா இவரை ஆஸ்பத்திரியில சேர்த்துடலாம் என்றபோது, இது போலிஸ் கேஸ் என பயந்து ஒதுங்கினர். யாராவது இவரை புடிச்சிக்கிட்டு ஆஸ்பத்திரி வரை வந்தா போதும்ங்க என்றதும் ஒரு இளைஞர் மட்டும் முன் வந்து நான் வர்றன்ங்க என்றார். நான் டூவீலரை கொண்டு வந்து அவரை தூக்கி உட்கார வைத்துவிட்டு சி.எம்.சி போறன் போலிஸ்காவுது தகவல் சொல்லிடுங்க, ஆம்புலன்ஸ் வந்தா டிரைவரை அதல ஏத்தி அனுப்புங்க எனச்சொல்லிவிட்டு வேகவேகமாக வந்து சி.எம்.சியில் அவரை சேர்த்தேன். கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வர அதிலிருந்து அந்த டிரைவரை இறக்கி கொண்டும் போனார்கள். 

ஆஸ்பத்திரியில் பெயர் கேட்க எதுவும் தெரியாது சார் வர்ற பொய்கையாண்ட கார் ஆக்சிடன்ட்டாகி தூக்கி வெளிய வீசப்பட்டாரு. உயிருக்கு போராடனதால கொண்டு வந்தோம் என்றதும் அவர் சிகிச்சைக்கு தர தொடங்கினர். போலிஸ் வந்து கேட்டதும் பார்த்ததை சொன்னதும் ஆக்சிடன்ட் நடந்த இடத்தை குறித்துக்கொண்டு கிளம்பினார்கள். 

மறுநாள் விடியற்காலம் அவர் கண் விழித்ததும், உங்க டிரைவர் பரவாயில்ல சார் பக்கத்து வார்டுல தான் இருக்கார். அவர் உங்க வீட்டு தொலைபேசி எண் தந்தாரு. வாங்கி தகவல் சொல்லிட்டன். உடம்ப பாத்துக்குங்க நான் கிளம்பறன் என்றதும் கையை பிடித்து தேங்க்ஸ் என்றவர் நான் பெங்களுர், என் பேர் இராஜேஷ்கவுடா என பேச தொடங்க அவரை பேச விடாமல் தடுத்து சார் நீங்க தூங்குங்க. நான் முடிஞ்சா அப்பறம் வந்து உங்கள சந்திக்கறன் எனச்சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். 

ரூம்க்கு போகும்போது கவிய சந்திச்சிடலாம் என பஸ் ஸ்டாப்பில் நின்றபோது சரியாக அதே நேரம் அவளும் வர நேத்து வரச்சொன்னதுக்கு இப்ப வர்ற. பாக்கத்தான் வந்தன். வண்டி ரிப்பேர் அதவிடு. என்ன விஷயம். 

அக்காவுக்கு மாப்பிளை பாக்கறாங்க. 

மாப்பிளையா அதுக்குள்ள என்ன அவசரம். தேரியல. சோந்தக்காரங்க மூலமா வந்தது நல்லயிடம்ன்னு சொன்னதால ஜாதகம் பாக்க ஆரம்பிச்சியிருக்காங்க அதச்சொல்லத்தான் வரச்சொன்னன். 

நல்ல விஷயம் தான். இப்ப என்ன உங்கிட்ட பேசுதா. 

ம். எப்பவாவுது பேசது எனும்போதே பஸ் வந்துவிட்டது. 

நானும் ரூம்க்கு போய் குளித்துவிட்டு காலேஜ் போனதும் எங்கடா போன, நைட்டெல்லாம் உன்ன தேடிக்கிட்டுயிருந்தோம் தெரியுமா. 

ஒன்னும்மில்லடா எ னநடந்தை சுருக்கமாக சொன்னதும் பொதுசேவை உனக்கு எதுக்குடா என ஜான் முறைத்தான். 

அத விடு ப்ரியாவுக்கு மாப்பிளை பாக்கறாங்களாம். 

அதுக்குள்ளவா யார் சொன்னது. 

கவிதா தான். 

சரி விடு. உனக்கு ரூட் கிளியர் ஆனா சரிதான் என்றான். 

நாட்கள் போனதே தெரியவில்லை. ப்ரியா சிலமுறை நான் இருக்கும் பக்கம் வருவாளே தவிர பார்க்கவே, பேச முயற்சிப்பதில்லை. நான் முயன்றும் தோல்வியிலேயே இருந்தது. 

தேர்வுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் தான் ப்ரியாவிடம் கேட்டேன். இன்னும் எத்தனை நாளைக்கு தான் உங்க கோபம். மன்னிப்பு கேட்டா அடிக்கற. தப்பு பண்ணிட்டன்னு நான் தான் ஒத்துக்கறன்யில்ல அப்பறம்மென்ன என்றதும் சைலண்டாக இருந்தவளிடம், வாழ்த்துக்கள் என்றதும் தலையை நிமிர்ந்து பார்த்தாள். 

தொடரும்………………




வெள்ளி, ஏப்ரல் 27, 2012

தண்ணீர் மார்பகங்கள்.




இந்த வாரம் இந்தியா டுடேவில் பிரச்சுரம்மாகியுள்ள சிலிக்கான் மார்பகம் பற்றிய ஒரு கட்டுரையை படித்தபோது சில ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. என்னவென்றால், உலகம் மாறியப்பின் அதன் நுகர்வை இந்தியா அதிகமாகவே நுகர தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய ஒன்றியத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, டெல்லி, ஆந்திரா போன்ற சில மாநிலங்கள் அதிகளவில் விளம்பர மோகத்தில் விழுந்து பன்னாட்டு மோகத்தில் விழுந்துள்ளனர். 

அதாவது 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் பெண்கள் விளம்பர நிறுவனங்கள் ஆசைப்படுவது போல உடல் அமைப்பை சிக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆதனால் காலப்போக்கில் ‘உலர்ந்து’ போகும் தங்களது மார்பகங்களை ஆப்ரேஷன் மூலம் ‘உலராமல்’ வைத்துக்கொள்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் சகஜமாக இருந்தது இது. 

1995க்கு பின் இந்த தாக்கம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. அதற்கு முன் இந்தியாவில் உள்ள மாடலிங், சினிமாத்துறையில் உள்ள சிலர் வெளிநாடுகளில் போய் தங்களது உலர்ந்த மார்பகங்களை அழகு படுத்திக்கொண்டு வந்தனர். இப்போது இந்தியாவில் இந்த மாற்றம் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறதாம். ஆண்டுக்கு 5 லட்சம் நங்கைகள் இந்த ஆப்ரேஷன் மூலம் தங்களது மார்பகங்களை அழகு படுத்திக்கொள்கிறார்கள் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 

உடல் அளவு அதாவது ஒல்லியாக உள்ள பெண்களுக்கு ஒரளவும், சதை பிடிப்பாக உள்ள பெண்களுக்கு அதற்கு ஏற்றாற் போல் தான் மார்பகங்கள் இருக்கும். இந்த அளவு பத்தாது என்றும், தனக்கு சிறியதாக இருக்கிறது என்றும், மார்பகத்தை வைத்து தான் ஆண்கள் தங்களை ரசிக்கிறார்கள் என முடிவு செய்து நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க பெண்கள் தங்களது மார்பகங்களை அழகாக்க அதற்கான க்ரீம் மற்றும் ஆப்ரேஷன் மூலம் செம்மை படுத்திக்கொள்கிறார்கள். 

அறுவை சிகிச்சை செய்து பெண்களின் மார்பகத்துக்குள் தண்ணீர் போன்ற சிலிக்கான் போன்ற சவ்வை கொண்டு விருப்பமான அளவுக்கு ஏற்றாற்போல் அந்த சவ்வை உள் மார்பகத்தில் வைத்து தைத்துவிடுகிறார்களாம். ஐதயல் போட்டது தெரியாது. வெளியே இருந்து பார்த்தால் பலுன் போல் ஊதிக்கொண்டு இருக்கும். இதனைக்கொண்டு தான் சில நடிகைகள் மற்றும் மாடலிங் பெண்கள் தங்களை கிக்காக காட்டிக்கொள்கிறார்கள். 

இவர்களுக்கு போட்டியாக இன்றைய மேல்தட்டு இளைஞர்கள் தங்களது உடலை அழகு படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளார்கள். நங்கைகளுக்கு மார்பு பெரியதாக, சிக்காக காட்ட அறுவை சிகிச்சை என்றால், இளைஞர்க்ள தங்களது மார்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதைகளை அகற்ற மருத்துவர்களிடம் வருகிறார்களாம். அதாவது புகைப்படங்களை காட்டி பாடிபில்டர், சிக்ஸ்பேக் போல் உடலை வைத்துக்கொள்ள அறுவை சிகிச்சை செய்துக்கொள்கிறார்களாம். இதில் உலகில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக புள்ளி விவரம் கூறியுள்ளது. 

உடல் பல புதிர்களை கொண்டது. ஒவ்வொருவரின் வேலை, அவர்களது உணவு, உடற்பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்றாற்போல் தான் உடல் அமையும். அதனை சிகிச்சைகள் மூலம் மாற்றிக்கொள்ள முயல்வது ஆபத்தானது. உடலை நம் விருப்பத்துக்கு மாற்றிக்கொள்ள இயற்கையாகவே பல வழிகள் உள்ளன. உணவு முறையில் கட்டுப்பாடு, வேலைகள் செய்வதன் மூலம் மாற்றமடையும். அப்படியிருக்க இளம் தலைமுறை செயற்கையாக தங்களது உடலை அழகு படுத்திக்கொள்ள நினைப்பது ஆபத்து என்பதை உணர்வார்களா?. 

புதன், ஏப்ரல் 25, 2012

கடத்திய மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகளா?.





சத்திஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றிய அலெக்ஸ்பால்மேனனை நக்சல்கள் கடத்தியுள்ளனர். ஒரிசா மாநில எம்.எல்.ஏ ஜினாஜிகா, இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் கடத்தப்பட்டபோது மாவோயிஸ்ட்டுகள் நாங்கள் தான் கடத்தினோம் என அறிவித்தனர். இருந்தும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட மீடியாக்கள் தீவிரவாதிகள் கடத்தியுள்ளார்கள் என அலறி வருகின்றன. மாவோயிஸ்ட்டுகள் கடத்தியுள்ளார்கள் மறுப்பதற்க்கில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களை கடத்தியவுடன் எப்படி அவர்கள் எப்படி தீவிரவாதிகளாக மாறினார்கள் என தெரியவில்லை. 

கடத்தல் பற்றி மட்டும் தான் பேசுகிறார்களே ஒழிய எதனால், எதற்காக கடத்தினார்கள் என ஆராய மறுக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் பணம் சம்பாதித்து கோட்டை, கோபுரம் போன்று மாளிகைகள் கட்டி சொகுசாக வாழ துப்பாக்கி ஏந்தி போராட வந்தவர்களில்லை. ஆண்டாண்டு காலமாக பழங்குடியின மக்களும், ஆதிவாசிகளும் வாழ்ந்து வரும்மிடத்தை கனிம வளங்கள் வெட்டியெடுக்க பன்னாட்டு கம்பெனிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் லட்ச கணக்கான ஏக்கர் காட்டை, நிலத்தை சொற்ப விலைக்கும், குத்தகைக்கும் தந்து வருகிறது அரசு. அதைத்தான் அந்த மக்கள் எதிர்க்கிறார்கள். உண்ண உணவில்லை, உடுத்த உடையில்லை, இருக்க இடம்மில்லை, மருத்துவமனைகள் இல்லை, சாலைகள் இல்லை, மின்சாரம்மில்லை இப்படி பலப்பல இல்லைகள். இதை கேட்கும் அம்மக்களுக்கு கிடைப்பது துப்பாக்கி குண்டுகள் தான். 

தன் சொந்த நாட்டு மக்களை பணத்துக்காக சுட்டுக்கொல்லும் முதலாளித்துவ அரசாங்கத்தை எதிர்த்து போராட தொடங்கியபோது அதில் தங்களது உறவினரை, உடன் பிறந்தவர்களை இழந்தவர்கள் இவர்கள் என்பது வேதனையான ஒன்று. தன் சந்ததியை காக்க இந்த முதலாளித்துவ கொள்ளைக்கார பன்னாட்டு முதலாளிகளுக்கான அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் கலந்துக்கொண்டு அம்மக்கள் போராளிகளாக மாறியுள்ளார்கள். அவர்களுக்கு இந்த முதலாளிக்களுக்கான அரசாங்கம் நக்சல், மாவோயிஸ்ட் என்ற முத்திரை குத்துகிறது. ஆதிக்க மீடியாக்கள் தீவிரவாதிகள் என்கின்றன. 

இந்த பன்னாட்டு தரகு முதலாளிகளின் தொழிலை பாதுகாக்கவே அரச படைகள் களம்மிறக்கப்பட்டு போராடும் பழங்குடி, ஆதிவாசி, கிராம பாமர மக்கள் மீது வெறியாட்டம் நடத்துகின்றன. பாலியல் வல்லுறவு செய்வது, தப்பு செய்யாதவனையும் துன்புறுத்தி கொல்வது, வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்துவது என அடுக்கடுக்கான தவறுகள் செய்கின்றன. மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவுகிறார்கள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், இளைஞிகள் சிறையில் சித்ரவதைகளை அனுபவிக்கின்றனர். இதனை கேட்க எந்த நாதியும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில்யில்லை, தண்டனையில்லை. 

இப்போது கூட தங்களது சகாக்களை மீட்கவே எம்.எல்.ஏவை, கலெக்டரை கடத்தியுள்ளார்கள். அவர்கள் கடத்தப்பட்டதும் ஏழைக்காக பேசுகிறோம் என மனித உரிமை பேசிய சிலரின் முகமுடிகள் இந்த விவகாரத்தின் போது கிழிந்தது. சத்திஸ்கர் அரசு மீட்பு குழு அமைத்ததில் சமூக சேவகர் என தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட வழக்கறிஞர் பிரஷாந்த்பூஷன் நான் கலெக்டரை விடுதலை செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கு போவேன் என அறிவித்துள்ளார். அவரை தூதுவராக போகச்சொல்வதே கடத்தப்பட்டவரை மீட், அவர்களின் பிரச்சனைகளை வெளியுலகத்துக்கு அறிவிக்க வேண்டும், அரசாங்கத்திடம் சொல்ல வேண்டும் என்பதற்காக தான். ஆனால் இவர் சொல்கிறார் முதலில் விடுதலை செய் பின் உன்னுடன் பேசுகிறேன் என்று. இதில் இருந்து புரிவது அவரின் எண்ணமும் மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் என்றே உள்ளது. 

அவர் மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தில் சிலரை தவிர மற்ற அனைத்து தளத்தில் உள்ளவர்களும் நக்சல் தீவிரவாதிகள் என எண்ணி அவர்கள் பிரச்சனைப்பற்றி பேச மறுக்கின்றனர். நக்சல்கள், மாவேயிஸ்ட்டுகள் என பலப்பெயர்களில் பிரிக்கப்பட்டு நசுக்கப்படும் இப்போராளிகள், இன்றைய ஆதிக்க சக்திகளிடம் உள்ள மீடியாக்கள் கூறுவதுபோல் தீவிரவாதிகள்ள. 


தங்களது வாழ்வாதார பிரச்சனைக்காக பல முறை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள். அப்படி பேச்சு வார்த்தைக்கு வந்தவர்களை நயவஞ்சகமாக சுட்டுக்கொன்றது இந்த முதலாளித்துவ அரசுகள். அவர்களுக்கு ஆதரவு தந்த அவர்களின் உண்மையான பிரச்சனைகளை மக்கள் மன்றத்துக்கு கொண்டு வர போராடிய ஆஸாத், ஷேமச்சந்திரபண்டே போன்றோரை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படைகள். அவர்கள் மட்டுமல்ல, மாவோயிஸ்ட் கள தளபதிகளில் ஒருவரான கிஷன்ஜீயை நயவஞ்சகமாக தங்களது இடத்துக்கு வரவைத்து சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றனர். 

இப்படிப்பட்ட தவறுகளை மறைத்து மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் என முதலாளித்துவ அரசாங்கமும், மீடியாக்களும் அலறினாலும் பாதிக்கப்படும் மக்கள் நக்சல்களாகவோ, மாவோயிஸ்ட்டுகளாகவே மாறிக்கொண்டு தான் இருப்பார்கள். அரசாங்கங்கள் தங்களது நிலைமைய அதாவது கொள்கையை மாற்றிக்கொள்ளாத வரை இது தொடரத்தான் செய்யும். 


சனி, ஏப்ரல் 21, 2012

வட இந்தியன் ஊழல் செய்தால் தப்புயில்லை.



ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை மீடியாக்கள் அலசியது போல மத்தியரசின் நிலக்கரி ஊழல், கச்சா எண்ணெய் ஊழல், 4ஜீ ஊழல் போன்றவற்றை அலசமறுக்கின்றன. அது ஏன் என்பது தான் தெரியவில்லை. குறிப்பிட்ட ஊழல்கள் 2ஜியை விட பெரியது. அதாவது நிலக்கரி இறக்குமதியில் 10 லட்சம் கோடி, இஸ்ரோவில் 2 லட்சம் கோடி, இயற்கை எரிவாயு கண்டறிதலில் 4லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறியுள்ளது. 

ஆனால் இவைகளைப்பற்றி எந்த மீடியாவும் வாய் திறக்க மறுக்கின்றன. ஏன் 2ஜீ ஊழல் ஊழல் என ஊழலுக்கு எதிர்ப்பாக உண்ணாவிரதம், போராட்டம் என களம்மிறங்கி கூப்பாடு போட்ட அன்னாஹசாரே, பாபாராம்தேவ், பிரசாந்த்பூசன், கிரன்பேடி போன்றவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. 

நிலக்கரி ஊழல். 

2004 முதல் 2009 வரை நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்டும் பணிக்கு 100 நிறுவனங்களுக்கு 155 சுரங்கங்கள் விடப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு ஏல முறையில் இல்லாமல் விரும்பியபடி தரப்பட்டுள்ளன. இதனால் 10லட்சத்து 36 அயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராளமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சனையாகியுள்ளது. 

இயற்கை எரிவாயு 

கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுக்கையில் இயற்கை எரிவாயு வயல்களை கண்டறியவும், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதற்கான செலவுகளை அரசாங்கம் செய்யும். கண்டுபிடிக்கப்பட்டப்பின் அதை வெளியே எடுத்து சுத்திகரித்து விற்கப்படும் போது லாபத்தில் பங்கு இதுதான் ஒப்பந்தம். 

ஆற்றுப்படுக்கையில் எரிவாயு கண்டறிய முயன்ற ரிலையன்ஸ் பலயிடங்களில் இல்லை என்றும், சிலயிடங்களில் குறைந்த அளவே உள்ளது என பதில் சொன்னது. அதோடு, இதற்கான பணிச்செலவில் ஓப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக செலவுகளை குறிப்பிட்டு ‘பில்’ தந்து நிதியினை பெற்றுள்ளது. 


இதைத்தான் தவறு என சி.ஏ.ஜீ அறிக்கை தப்பு நடந்துள்ளது என சுட்டிக்காட்டுகிறது. ஆரசின் பொதுத்துறை நிறுவனம் எண்ணெய் வயல்களை கண்டறியும் நுட்பமும் வசதியும் அதனிடத்தில் உண்டு. தூர நாடுகளுக்கு சென்றும் அரசின் நிறுவனங்கள் செய்கின்றன. அப்படியிருக்க தனியார் விட்டதால் தான் சமார் 4 லட்சம் கோடி இழப்பு என்கிறது. 

இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய ஊழல். 

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் தோன்றி விண்ணில் ராக்கெட் ஏவப்பட்டது என எப்போதாவது தகவல்கள் தருவார்கள்.  அதன்பின் அந்த ராக்கெட் பற்றியோ, செயற்கைகோள் பற்றியோ பொதுமக்களுக்கு தகவல்கள் தரப்படமாட்டாது. அதேபோன்று தான் அதற்கான கணக்குகளும். ஏவ்வளவு செலவு செய்து இந்த ராக்கெட்டையும், செயற்கைகோளையும் உருவாக்கினிhகள் என கேட்டால் சுட்டுப்போட்டாலும் அரசு பதில் தராது. அப்படிப்பட்ட நிறுவன விஞ்ஞானிகள், நாட்டின் விசுவாசிகள் என வாணிக்கப்டுபவர்கள் ஸ்பெக்ராம் ஒதுக்கீட்டில் தனியார் நிறுவனத்துக்கு மிக குறைந்த விலைக்கு தந்து 2லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளார்கள். இத்தனைக்கும் இந்த துரை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறை. 

இப்படி கோடிகளில் கொள்ளையடிக்கப்பட்ட தகவல்கள் 2ஜி விவகாரத்துக்கு பின் வெளியே வந்துள்ளது. இவைகள் எல்லாமே 2ஜியை விட அதிகமான ஊழல்கள். ஆனால் இதுப்பற்றி மீடியாக்களும் பேச மறுக்கின்றன. நாங்கள் நேர்மையாளர்கள் என வேஷம் போடும் மத்திய புலனாய்வுத்துறையும் கண்டுக்கொள்ளவேயில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்வைக்கு இவைகள் போகவேயில்லை போல. 

ஊழல் யார் செய்தாலும் தவறுதானே. ஆப்படியிருக்க ராசா விவகாரத்தில் நோண்டி நுங்குயெடுத்தவர்கள் இதில் ஏன் கவனம் செலுத்த மறுக்கின்றன. 

அதற்கு காரணம் என் சிறு மூளைக்கு எட்டியவரையில், ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ராசா தலித் என்ற குற்றச்சாட்டு என்பது ஒரு புறமிருக்கட்டும். ராசா இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற பெரும் முதலாளிகளுக்கு அடங்கி போகவில்லை. அவர்கள் தங்களது பண, அதிகார, வடஇந்திய செல்வாக்கை வைத்து அதை பூதாகரமாக்கினர். 

ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் சிலர் சொன்ன பொய்களை வெளிச்சம் போட்ட மீடியாக்கள், நீதிமன்றத்தில் வாதத்தின் போது அவை சுக்கு நூறாக உடைகின்றன. இதனை கணாமல் வாய், காது, கண் ஆகியவற்றை மூடிக்கொண்டன. மீடியாக்கள் எழுதிய தீர்ப்பை தற்போது நீதிமன்றம் எழுதிவிடும் நிலையில் உள்ளது. 

மிகப்பெரிய ஊழல் என வர்ணித்தவர்கள் அதை விட அதிகமான ஊழல்கள் நடந்துள்ளன என அதே மத்திய தணிக்கை குழுதான் பட்டியல் போட்டு அறிக்கை தந்துள்ளது. ஆனால் அதுப்பற்றி பேச மறுக்க காரணம், அதே வடஇந்திய லாபி தான். அந்த ஊழல்களை கிளறினால் சிக்குவது ராசா போன்றவர்கள் அல்ல. பெரும் முதலாளிகள், அவர்களின் வட இந்திய அதிகார அரசியல்வாதிகள் அதனால் அடக்கி வாசிக்கின்றன. 

இதற்கு மத்தியில் திராவிட பெரியாரிய தளத்தில் உள்ள தமிழகத்தில் திமுக என்ற பலம் பொருந்திய கட்சியை அரசியலை விட்டு அகற்ற காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற ஒன்றிய பெரும் கட்சிகள் இதை கருவியாக பயன்படுத்தி விளையாடின.  

அடுத்ததாக ஊழல்க்கு நாங்கள் எதிர்ப்பாளர்கள் என கொடி பிடித்து, கோஷம்போட்டு, டான்ஸ் ஆடியவர்கள் நியாயவாதிகள் என்றால் இந்த ஊழல்களுக்கும் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். இருக்கவில்லை காரணம், இவர்கள் பின்னால் இருந்து இவர்களை இயக்குவது காவிகளும், மீடியா மன்னர்களும், பெரும் பெரும் பண முதலாளிகளும் தான். அதனால் தான் தற்போது அவர்கள் பற்றி புகார் வந்ததும் கவிழ்ந்து படுத்துக்கொண்டார்கள். 

வடஇந்தியனாக, பூணுல் போட்டவனாக, தேசிய கட்சியை சார்ந்தவனாக, பெரும் முதலாளிகளின் ஆதரவு பெற்றவனாக இருந்தால் இந்தியாவை விலைக்கு விற்றுவிட்டு கூட வந்துவிடலாம் அது பெரிய விவகாரமேயில்லை என்பதை தான் இந்த மறைக்கப்பட்ட ஊழல்கள் காட்டுகின்றன. 

மக்களை அழிக்க வந்த அக்னி.


அக்னி 5 ஏவுகணை மாபெரும் வெற்றி என இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதை கேட்டு இந்தியாவில் பெரும்பாலானவர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். தந்போது உருவாக்கப்பட்டுள்ள அக்னி ஐந்து என்கிற ஏவுகனை 5 ஆயிரம் கி.மீ தாண்டிப்போய் குறிப்பிட்ட இடத்தை தாக்கும் திறன் கொண்டது, அதேபோல் கண்டம் விட்டு கண்டம் பாயும் வேகம் கொண்டது இந்த ஏவுகனை என்கிறார்கள்.

கண்டம் விட்டு கண்டம் போய் தாக்குதல் நடத்தும் இந்த ஏவுகனை நமக்கு உலகில் வல்லரசு என்ற பெயரை வேண்டுமானால் வாங்கி தரலாமே ஒழிய இந்திய ஒன்றியத்தில் உள்ள வறுமையை ஒழிக்காது.

எதிரி நாடுகளும், இந்தியாவை சீண்ட நினைக்கும் நாடுகள் வேண்டுமானால் இதனை கண்டு பயப்படலாம். மற்றப்படி இந்த ஏவுகனையால் மக்களுக்கு ஒன்றும் புரியோஜனம்மில்லை. ஆளும் வர்க்க அரசியல்வாதிகளுக்கும், இதன் விஞ்ஞானிகளுக்கும் வேண்டுமானால் பெரும் ‘லாபமா’ இது இருக்கும். காரணம், கணக்கு வழக்கில்லாத பணம் இந்த ஆய்வுக்காக ஒதுக்கப்படுகிறது. மக்கள் மன்றத்துக்கு செலவு கணக்குகள் வருவதேயில்லை. நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமானது என இதற்கு காரணம் கூறுகிறார்கள்.

பாதுகாப்பு சம்மந்தமானது என்றால் அக்னி ஏவுகனையில் பயன்படுத்தப்படும் டெக்னாலஜி பற்றிய விவரங்களை வெளியிடாமல் இருக்கலாம். செலவுகளை கூட வெளியிட மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம். மக்களின் வரிப்பணம் தான் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. செயல்பாடோ சர்வாதிகாரமாக உள்ளது. இதற்கு பெயர் ஜனநாயக நாடாம். மக்களின் வரிப்பணத்தை பாதுகாப்பு என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள்.

போர் வரும்போது மட்டும் தான் இந்த அக்னி ஏவுகனைகளை நாம் பயன்படுத்தப்போகிறோம். அதற்கு பலாயிரம் கோடிகள் செலவு செய்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்.

இதுப்பற்றி கேள்வி கேட்டால் நாட்டின் பாதுகாப்பு மீது உங்களுக்கு அக்கறையில்லையா என எதிர்பாட்டு பாடுகிறார்கள். நாடு பாதுகாப்பாக இருந்தால் போதுமா மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா?.

முருங்கை மரம் பறந்து விரிந்து இருக்கும். அதன் இலைகள், காய்கள் மக்கள் பயன்படுத்தலாம். அந்த மரத்தில் ஏறினாலோ, ஊஞ்சல் விளையாட நினைத்தாலோ ஆபத்து தான். அதேபோல் தான் அக்னி ஏவுகனை. அது இருக்கிறது என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் அழகாக அதிகாரம் செலுத்தலாம், உலகில் ஜாம்பவானாக வலம் வரலாம். ஆனால் பிறர் சீண்டும் போதுதான் தெரியும் அக்னியெல்லாம் ‘அவுல்’ போல என்பது.

தினமும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவு உண்டு உயிர் வாழும் தேசத்தில் அதற்கெல்லாம் முக்கியத்துவம் தராத மீடியாக்கள் அக்னிக்கு அதீத முக்கியத்துவம் தருகின்றன.

தேசம் பாதுகாப்பாக தான் இருக்கிறது. ஆனால் மக்கள் தான் இந்த நாட்டில் பாதுகாப்பாக இல்லை.

வியாழன், ஏப்ரல் 19, 2012

கழகத்தில் கலகம். தீராத மோதல்.


மீண்டும் உச்சத்துக்கு வந்துள்ளது திமுகவின் தலைவர் அழகிரி - ஸ்டாலின் மோதல். கட்சியில் யாருக்கு அதிக அதிகாரம் என்பதை காட்ட முயற்சி செய்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டு முழிப்பது தொண்டர்கள் தான்.

கலைஞரின் மகனாக இல்லாவிட்டால் திமுக எப்போதே ஸ்டாலின் கைக்கு போயிருக்கும். காரணம், கட்சிக்காக அவ்வளவு உழைத்துள்ளார். இன்றும் கட்சி பணியாக தினமும் நூற்றுக்கணக்கான கி.மீ சுற்றி வருகிறார். கட்சியினருடன் பழகுகிறார், கட்சி பணிகளை தொய்வில்லாமல் நடத்துகிறார். முடிவுகளை உடனுக்குடன் எடுக்கிறார். கட்சியின் மேல்மட்ட முக்கிய தலைவர்களுக்கு உரிய மரியாதையை தருகிறார். கட்சியின் மீதான விமர்சனங்களை ஒதுக்கி தள்ள முயல்கிறார், கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச முயல்கிறார். தகுதியானவர்களை பொறுப்புக்கு வரவைக்க வேண்டும் என முயல்கிறார். எதிர்கட்சியான பின் ஆளும்கட்சி நடத்தும் அராஜகங்களை கண்டு கொதிக்கிறார். கட்சியின் முக்கியஸ்தர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

ஜெ தமிழக முதல்வரானதும், தன்மேல் எந்த வழக்கும் வரக்கூடாது என்பதற்காக தன் குடும்பத்தையே வெளிநாட்டில் இருக்க வைத்தவர் அழகிரி. ஸ்டாலின் வருவது வரட்டும்மென அவர் மீது போடப்பட்ட வீடு அபகரிப்பு என்ற வழக்கை எதிர்கொண்டு தவறு நடக்கவில்லை என நிருபித்துள்ளார். இதுதான் ஒரு கட்சி தலைவருக்கு அழகு. ஓடி ஒளிவதல்ல என்பதை காட்டினார்.

ஸ்டாலின் உழைத்தார் பதவிகள் அவரை தேடி வந்தது. பதவியை தேடி அவர் செல்லவில்லை. கழகத்தில் அவரின் உழைப்பு வேறு ஒருவர் செய்திருந்தால் அவர் இன்னேறம் முதல்வராக உருவாகியிருப்பார். தலைவர் வழி விடட்டும் என்று காத்துள்ளார் தனயன். ஸ்டாலின் சில அவமானங்களை சந்தித்துவிட்டு தான் இந்த பதவிக்கே வந்துள்ளார். ஸ்டாலின் துணை முதல்வரானபோது சோக்காளி சோ தெளிவாக சென்னார். ஸ்டாலின்க்கு கிடைத்த பதவி மிகவும் தாமதமானது என்று. எதிர் தரப்பாக இருந்தாலும் உண்மையை சொன்னார்.

ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது அவரின் உடன்பிறந்த சகோதரர் அழகிரி தான். மதுரை கட்சியினரிடம் மட்டுமே பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு கட்சியை நிர்வகிக்க தொடங்கியவர். கடந்த ஐந்தாண்டில் அவருடன் இருந்த சர்ச்சைக்குரியவர்களுக்கு பதவிகள் வாங்கி தந்தார். இறுதியில் கட்சியில் இல்லாத தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற பதவியை உருவாக்க வைத்து அந்த பதவியில் ஜம்மென்று வாங்கி உட்கார்ந்;துக்கொண்டு ஸ்டாலினால் ஒதுக்கப்பட்ட பாரம்பரிய கட்சியினரை, வயதானவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு கழகத்தில் கலகத்தை உருவாக்க தொடங்கியுள்ளார். கழகத்துக்கு துரோகம் செய்த தயாநிதிமாறனை நம்பி பணியாற்ற தொடங்கியுள்ளார்.

மதுரையை விட்டு வெளியே வந்தால் அழகிரிக்கு மரியாதை செய்யக்கூட ஆள்யில்லை. அப்படிப்பட்டவர் கழகத்தின் அடுத்த தலைவராக வேண்டும்மென ஆசைப்படுகிறார். ஜனநாயக இயக்கத்தில் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு ஆசைப்படலாம். ஆனால் அதற்கான தகுதியிருக்கறா என்பதை முதலில் தங்களுக்கு தாங்களே தனது மனதை கேட்டுக்கொள்ள வேண்டும்.

அழகிரி, கனிமொழி போன்றவர்களால் தான் வாரிசு கழகம் என்ற அவப்பெயர் திமுகமேல் அதிகமாக விழுகிறது. ஸ்டாலின்க்கு கிடைக்கும் மரியாதை, புகழை கண்டு மயங்கி போய் தங்களுக்கும் பதவி வேண்டும்மென துடித்து எம்.பி, மந்திரி பதவியென வாங்கி அமர்ந்தனர். இப்போது வாரிசு வாரிசு என ஏலனம் செய்ய தொடங்கிவிட்டார்கள் கழகத்தை துற்றுவோர்.

கலைஞர் தீவிரமான முடிவு எடுக்க வேண்டிய சமயம். அதாவது அவர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி ஸ்டாலினை அதில் அமர வைக்க வேண்டும். அழகிரிக்கான கடிவளாம் போடவேண்டும். கனிமொழிக்கு இனி பதவிகள் இல்லை என கூற வேண்டும். தயாநிதியை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் அப்போது தான் கழகம் வளரும். இல்லையேல் மிகப்பெரிய உள்கட்சி பிரச்சனையை கழகம் சந்திக்கும்.

ஈழம் அமைய வாக்கெடுப்பு. – அமெரிக்காவின் ஆட்டம்.




சீனாவின் முத்துமாலையை அறுக்க முயலும் அமெரிக்கா என்ற பதிவை கடந்த மாத இறுதியில் வெளியிட்டுயிருந்தேன். அந்த பதிவில் அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு இந்தியா பெரும் உதவியாக இருக்கிறது என சுட்டிக்காட்டியிருந்தோம். அடுத்து அமெரிக்கா, இலங்கையை தன் பக்கம் இழுக்க முயலும் இல்லையேல் அத்தீவை பிரித்து தமிழர்களின் கனவான தனி ஈழம் அமைக்க முயலும் என குறிப்பிட்டுயிருந்தோம். அதுப்படியே கடந்த சில தினங்களாக நிகழ்வுகள் நடைபெற துவங்கியுள்ளன. 

அமெரிக்க ஜனாதிபதியான ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு, சில தினங்களுக்கு முன் ரகசியமாக இலங்கையின் முன்னால் தூதரும், தற்போதைய தெற்காசிய வெளிவிவகாரத்துக்கு பொறுப்பாளருமான ராபர்ட் பிளேக்கை ‘ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு’ சந்தித்து தனி ஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எங்கள் மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்ற கோரிக்கை மனுவை தந்துவிட்டு வந்துள்ளார்கள். அதோடு, அதிகாரபூர்வமற்ற முறையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அம்மையார் ஹிலாரி கிளின்டனையும் சந்தித்தாக செய்தி வெளியாக கொழும்பு அரசியல் வட்டாரம் அதிர்ந்துப்போய்வுள்ளது. 

அமெரிக்கா ஈழம் அமைப்பதற்கான நகர்வை ஆரம்பிக்க காரணம், 

முத்துமாலை திட்டத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இலங்கை தீவு. இந்திய பெருங்கடலில் இலங்கை யார் கைப்பாவையாக உள்ளதோ அவர்ளே உலகின் எஜமானாகள். அதனை யூகித்து தான் இலங்கைக்கு போர் காலத்தில் 60 சதவிதமான உதவிகளை சீனா செய்தது. அதற்கு போட்டியாக இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் உதவின. 

போர் முடிவுற்ற பின் இலங்கை, உதவி செய்த 8 நாடுகளை கழட்டி விட்டுவிட்டு சீனாவோடு அதிக நெருக்கமாயின. இந்தியா வழியாக அமெரிக்கா மிரட்டி பார்த்தும் பலனில்லை. நேரடியாக மிரட்யும் இராஜபக்சே சகோதரர்கள் போக்குகாட்டினர். 

தமிழர்களுக்கு எதிரான போரை நடத்திய இலங்கை இராணுவதளபதி பொன்சேகாவை தன் பக்கம் இழுத்தது அமெரிக்கா. ஜனாதிபதி தேர்தலிலும் நிற்க வைத்தது. உடனே அவரை தேச துரோகி என குற்றம் சாட்டி சிறையில் தள்ளினார்கள் இராஜபக்சே சகோதரர்கள். 

அதன்பின்பே ஐ.நா வழியாக இலங்கை மீது போர்குற்றச்சாட்டை சுமத்த முன்வந்தது அமெரிக்கா. ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வரும் முன் சீனாவிடம்மிருந்து பிரிந்து தன் ஆதரவாளராக நடந்துக்கொள்ள வேண்டும், சிறையில் உள்ள பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. அதை இராஜபக்சே ஏற்றுக்கொள்ளாமல், இந்தியாவும், சீனாவும் தனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அமெரிக்காவை சீண்டி பார்க்க தொடங்கினர் இராஜபக்சே சகோதரர்கள். 

சீனாவை முக்கறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இந்தியா, அமெரிக்காவின் தீர்மான திட்டத்துக்கு தலையாட்டியது. அமெரிக்கா திட்டப்படி ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தபோது இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. ஏமாந்துபோன இலங்கை இந்தியா தனக்கு ஐ.நாவில் கைகொடுக்கவில்லை என்பதால் இந்தியா மீண்டும் புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்குகிறது என கருத்து சொன்னது. அடுத்து, கூடங்குளம் விவகாரத்தில் அரசின் கருத்துக்கு எதிர் கருத்துக்கூறி இந்திய அரசிடம் பலமாக வாங்கிகட்டிக்கொண்டது. 

ஐ.நா தீர்மானம் வருங்காலத்தில் பல பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை இலங்கை நன்கறியும். இருந்தும் சீனாவின் நட்பை அவர்களால் விட முடியவில்லை. சீனாவை மீறி அமெரிக்காவிடம் அடைக்கலம் புகுந்தால் இராஜபக்சே சகோதரர்கள் ஒழிக்கப்படுவார்கள் அதோடு, வருங்கால பிரச்சனைகளின் போது ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் உள்ள சீனா தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என இராஜபக்சே சகோதரர்கள் நம்புகிறார்கள்.

தொடர்ந்து இலங்கையை அமெரிக்காவும், இந்தியாவும் மறைமுகமாக இராஜதந்திர ரீதியில் மிரட்ட பணிய மறுப்பதால் தான் தான் இறுதியாக, தனி ஈழ வாக்கெடுப்பு என்ற அஸ்திரத்தை கடைசியாக ஏவியுள்ளனர். 

இதன் பின்னும் இராஜபக்சே அன் கோ, இறங்கி வரவில்லையெனில் அடுத்தடுத்த நகர்வுகள் இலங்கைக்கு எதிராக இருக்கும். தனி ஈழம் அமைக்க வழிவகை செய்யப்படும். இந்தியா அதனை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். தற்போதைய நிலையில் சீனாவின் பிடியில் இருந்து இலங்கை விலக சாத்தியமில்லை. அமெரிக்காவின் திட்டம் வெற்றியடைய வாய்ப்பு உண்டு. 

இதனை யூகித்து தான் கலைஞர் ஐ.நாவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிக்கை விட்டுள்ளார். 

புதன், ஏப்ரல் 18, 2012

சுகமான சுமைகள் …………. 24.




கோயில்க்கு வெளியே அவளுக்காக காத்திருந்தேன். 6 மணிக்கு வர்றன் என்றவள் வரவில்லை. அவளுங்க சொல்ற நேரத்துக்கு நாம வந்துடனும். ஆனா அவளுங்க வரமாட்டாளுங்க. நாம காத்திருக்கனும். இதே அவளுங்க காத்திருந்தா கத்துவாளுங்க என எண்ணியடியே அவளுக்காக காத்திருந்தேன். 

சொன்ன நேரத்தை விட இருபது நிமிடம் தாமதமாக வந்தவள். சைக்கிளை நிறுத்திவிட்டு அருகே வந்ததும் வாங்க போகலாம் என்றாள். 

அசையாமல் இருப்பதை பார்த்து ஸாரி லேட்டாகிடுச்சி. வாங்க. 

பதிலை சொல்லிட்டு கூப்பிடுங்க வர்றன். 

அய்ய. எதுவும்மே இல்லாம தான் உங்கள கோயிலுக்கு வரச்சொன்னனா என்றதும் 

ஆனந்தமாகி இன்னைக்கி சந்தோஷமான நாள்ங்க. 

சாமிய பாத்துட்டு அப்பறம் பேசிக்கலாம் என நடக்க அவளுடன் நடந்தபோது மனமெல்லாம் சந்தோஷமாக இருந்தது. 

உங்களப்பத்தி அக்கா அடிக்கடி சொல்லும்போது எல்லாம் எனக்கு பொறாமையா இருக்கும். அவ மேல நீங்க எடுத்துக்கற அக்கறையை பாத்து லவ் பண்றிங்களோன்னு கூட நினைச்சன். தேவிக்கிட்ட கேட்டப்ப அதெல்லாம் இல்லன்னு சொன்னா. உங்கள பத்தி சொல்ல சொல்ல உங்கள பாக்கனம்;ன்னு ஆவலா இருந்தன். அக்கா அறிமுகப்படுத்தற அன்னைக்கு நான் உங்கள பாத்தப்ப நம்ம பின்னாடி வந்தவனாச்சேன்னு ஒரே சந்தோஷம். அதான் நீங்க லவ் பண்றன்னு சொன்னதும் சந்தோஷமாகிடுச்சி. இருந்தும் அக்காவுக்கு தெரிஞ்ச என்ன நினைக்குமோன்னு பயந்து தான் பதில் சொல்லல. அன்னைக்கு நைட்டெல்லாம் தூக்கம் வரல தெரியுமா. அவ்ளோ சந்தோஷம் என்றவள் கொஞ்ச நாளைக்கு அக்காக்கிட்ட சொல்லாதிங்க என்றபோது அதிர்ந்து போனேன். 

என்னால அதுங்கிட்ட இரண்டு நாளைக்கு மேல சொல்ல முடியாது. அதுக்கு தெரியாம நான் எதையும் பண்ணதில்ல. 
நான் குடிக்கறத சொன்னதுக்கே இதே பத்து நாளா பேசாம இருக்கறா. இந்த விஷயத்த மறைச்சது தெரிஞ்சது அவ்ளோ தான் அதனால சீக்கிரம் சொல்லிடுவன் என்னை மன்னிச்சிடு. 

சொன்னதை அமைதியாக கேட்டவள். சரி கொஞ்சம் லேட் பண்ணி சொல்லுங்க பாத்துக்கலாம் என்றவள் வாராவாரம் வெள்ளிக்கிழமை இங்க பாப்போம், ஏதாவதுன்னு போன் பண்ணுங்க என்றவள் வெளியே வந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினால். 

மனம் விசில் அடிக்க தொடங்கியது. அன்றைய இரவு விதவிதமான கனவு மனதில் வந்தது. 

மறுநாள், புங்கமரத்து காற்று குளு குளு என வீச நான், ஜான், அகிலன் மூவரும் அமர்ந்திருந்தோம். 

என்னடா உம்முன்னு இருக்க என்னாச்சி அகிலன் ஜான்னிடம் கேட்டான். 

எல்லாம் இந்த நாயாள வந்தது. இரண்டு நாளைக்கு முன்ன கோயிலுக்கு போனோம்மில்ல. அங்க ப்ரியாக்கிட்ட குடிக்க போறன்னு சொல்லியிக்கான். அதல ரெண்டு பேருக்கும் சண்டை வந்து பாதியிலயே வீட்டுக்கு போய்டுச்சி. அது சும்மாயில்லாம தேவிக்கிட்ட போட்டு குடுத்துடுச்சி. அவ என்னடான்னா குடிகாறநாயே என் முகத்தலயே முழிக்காதன்னு காரிதுப்பி துறத்தறா. 

விடறா எல்லாம் சரியாகிடும் என்றான். 

அப்ப இனிமே குடிக்கமாட்டியா?. 

குடிக்கறதா இருந்தா பாக்க வராதுன்னு சொல்றா.

அப்பாடா ஒருத்தன் செலவு மிச்சம். அகிலா சாயந்தரம் நம்ம பசங்கக்கிட்ட சொல்லீடு. லீமா பார்ல பார்ட்டி. 

ஏய் என்னை விட்டு போன செருப்பால அடிப்பன். 

இப்பதான் குடிக்கமாட்டன்னு சொன்ன

குhதலி சொல்றத கேட்கறதா இருந்தா ஒருத்தன் கூட குடிக்க முடியாது. அவுங்க சொல்றத சொல்லுவாங்க. நாம கேட்டுக்கிட்ட மாதிரி நடிக்கனும் என்ற ஜான் அதிருக்கட்டும் எதுக்கு பாhட்டி. 

எதுக்காயிருக்கும் அவுங்க ஆள் லவ்வ ஒத்துக்கிட்டுயிருக்கும் என அகிலன் சொல்ல கைகுடு மச்சான். 

உண்மையாவா ? எப்ப என ஜான் ஆச்சர்யத்துடன் கேட்க. நேத்து நைட் தான். கொஞ்ச நாளைக்கு ப்ரியாக்கிட்ட சொல்ல வேணாம்ன்னிட்டா. 

மச்சான் சூப்பர்டா என சந்தோஷப்பட்டான் ஜான். 

அப்போது, ப்ரியா முறைத்தபடி க்ளாஸ் நோக்கி போனால். என்ன மச்சான் இன்னுமா உங்க சண்டை தீரல. அவ குடிக்கறத விடுங்கறா. நான் வாரத்தல ஒருநாள் மட்டும்தான்னு சொல்றன். கேட்கறமாட்டேன்கிறா. விடு பாத்துக்கலாம். 

அன்று இரவு அதிகமாக குடிச்சதால், ஜலதோஷம் பிடித்துக்கொண்டு இரண்டு நாள் காலேஜ் போகாமல் ரூமிலேயே படுத்திருந்தேன். 

மதியம் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்க திறந்துபோது, ப்ரியா கலக்கத்தோடு நின்றிருந்தாள். 

வாங்க. என்ன இவ்ளோ தூரம் என்றதும் எதுவும் பேசாமல் கழுத்தில் கை வைத்து பார்த்தவள் உடம்பு அதிகமாக சுட இவ்ளோ சுடுது. ஆஸ்பத்திரிக்கு போனயா என கேட்டாள். 

போய்ட்டு தான் வந்தன். வா உள்ள வந்து உட்காரு என்றதும் உள்ளே வந்து அமர்ந்தவள். எந்த டாக்டர்க்கிட்ட போன, என்ன சொன்னாரு, மாத்திரை சாப்பிட்டயா, சாப்பாடு என்ன சாப்பிடச்சொன்னாரு என வரிசையாக கேள்வி கேட்டபடியே இருந்தாள். 

ஏய் இரு இரு இது சாதாரண ஜொரம் தான். டாக்டர் மாத்திரை தந்துயிருக்காரு. சூடா கஞ்சி சாப்பிடச்சொல்லியிருக்காரு. 

ஏதனால ஜொரம் வந்தது. 

சொன்னா கோபப்படுவியே. 

நீ பேசலங்கறதால இரண்டு நாளா அதிகமா குடிச்சன்னா ஜலதோஷம் புடிச்சி ஜொரம் வந்துடுச்சி என்றதும் முறைத்தால். 

ஏய் முறைக்காதடா என கெஞ்சியதும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவளிடம் ஆமாம். எனக்கு உடம்பு சரியில்லன்னு யார் சொன்னது. 

அகிலன்.

ஆவன் தான் சொன்னான்யில்ல. உடம்பு சரியில்லாதவனை பாக்க போறமே ஆப்பிள், ஆரஞ்சி வாங்கி போகலாம்ங்கற எண்ணம் வந்துச்சா உனக்கு. 

செருப்பு இரண்டு வாங்கி வந்துயிருக்கனும். ரெண்டு நாளா காலேஜ் வரலயே கேட்டுக்கிட்டு வந்தா உனக்கு இதெல்லாம் வாங்கி வரனுமாக்கும் என்றாள். 

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டுயிருந்தவளை சாப்பிட சொல்ல வேண்டாம் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கறன் என கிளம்பினாள். 

சுhயந்தரம் பசங்க எல்லாம் ரூம்க்கு வந்து பேசிவிட்ட போனான்கள். ஜான் மட்டும் பேசிக்கொண்டு ரூமிலேயே இருந்தான். 

7 மணிக்கு ப்ரியா, கவிதா, தேவி மூவரும் அறைக்கு வந்தனர். ஜானை முறைத்தபடியே அருகில் வந்த தேவி, ஜானை காட்டி இதோட சேந்து நீயும் உருப்படாம போறியா?. 

ஆமாம் இவர் பாவம் பால் கூட குடிக்க தெரியாத பச்ச புள்ள நாங்க கெடுக்கறதுக்கு என ஜான் கடுப்படிக்க ஏதாவது பேசன வாய உடைச்சிடுவன் என்றதுதும் சைலண்டானான். 

தேவியும், கவிதாவும் மாறி மாறி விசாரித்தனர். ப்ரியா கூடையில் வைத்திருந்த பாக்ஸ்சை எடுத்து தந்தாள். கஞ்சி இருக்கு குடி. அகிலனை ஹோட்டல்ல சாப்பிட சொல்லிடு என்றாள். 

அகிலன் ஊருக்கு போயிருக்கான். அதிருக்கட்டும் பழம் வாங்கனா காசு கொடுக்கனும்மேன்னு, கஞ்சிய தந்து ஏமாத்தற. 

அடிவாங்கப்போற என ப்ரியாச்சொல்ல அமைதியாகி கவிதாவை பார்த்தேன். ரொம்ப கவலையாக இருந்தாள். 

கஞ்சியும், மாத்திரையும் சாப்பிட்டபின் கொஞ்சம் தெம்பாக இருந்தது. 

நாளைக்கு காலேஜ் வர்றியா.

இல்ல.

நாளைக்கு சாயந்தரம் வர்றன். உடம்ப பாத்துக்க. முடிஞ்சா காலையில போன் பண்ணு என கிளம்பினால் ப்ரியா. கவிதாவும் வர்றங்க என சுரத்தேயில்லாமல் சொல்லிவிட்டு புறப்படப்படனர். 

தேவி ஒரு நிமிஷம், அவனை நோஸ்கட் பண்ணாத. இப்பவே பையன் நொந்துப்போய்யிருக்கான். மேலும் அவனை நோகடிக்காத. 

முதல்ல அவனை குடிக்கறத விடச்சொல்லு. 

அதெல்லாம் இனிமே குடிக்கமாட்டான். நான் பாத்துக்கறன். 

வேலிக்கு ஓனான் சாட்சியாம் என்ற ப்ரியா வாடீ போலாம் என தேவியை இழுத்துக்கொண்டு போனாள். போகும்போது தேவி ஜானின் கையை பிடித்து கிள்ளிவிட்டு போனால். அதை பாhத்தபோது சிரிப்பு வந்தது. 

மறுநாள் காலை ப்ரியா வீட்டுக்கு போன் செய்தபோது, அவளே போனை எடுத்தாள். பரவாயில்ல. இருந்தும் இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வரலாம்னு இருக்கன். 

வெளியில எங்கயும் சுத்தப்போகாம ரெஸ்ட் எடு. நூன் சாயந்தரம் வர்றன். 

ம் எனச்சொல்லிவிட்டு போனை வைத்தேன். 

ரூம்க்கு வந்தபோது அகிலன் காலேஜ் போயிருந்தான். லைப்ரரியில் இருந்து அகிலன் எடுத்து வந்திருந்த பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு சும்மா புரட்டுக்கொண்டுயிருந்தேன். அப்போது கதவு தட்டப்பட யார் அது எழுந்து திறந்தபோது ஆனந்த அதிர்ச்சி. 

கவிதா வெளியே நின்றிருந்தாள். 

ஏய் நீ எங்க இங்க. 
இப்ப எப்படி இருக்கு உடம்பு.

புரவாயில்ல. 

நீ என்ன காலேஜ் போகாம இங்க வந்திருக்க. ப்ரியாக்கிட்ட போன் பேசனப்பக்கூட அதுக்கூட எதுவும் சொல்லல. 

உன்ன பாக்கபோறன்னு சொன்னா செருப்பால அடிக்கும். யாருக்கும் தெரியாம தான் வந்தன். 

லூசா நீ. யாராவது பாத்துட்டு உங்க வீட்ல சொன்னா அவ்ளோ தான். உங்கக்கா இதுக்கு தான் என் கூட பழகனியான்னு கேட்டு கத்தும். உங்கம்மா எவ்ளோ அசிங்கமா நினைப்பாங்க. 

ஓன்னும் நினைக்கமாட்டாங்க. இரண்டு நாளா உடம்பு சரியில்லயேன்னு மனசு கேட்காம உன்ன பாக்க வந்திருக்கன். நீ எதுக்கு சும்மா கண்டத நினைச்சி பயந்து சாகற. ஓன்னும் ஆகாது. சாயந்தரம் வரைக்கும் இருந்துட்டு 4 மணிக்கா வீட்டுக்கு போய்டுவன். 

உங்கக்கா சாயந்தரம் வர்றன்னியிருக்கு. 

அது 6 மணிக்கு மேல தான் வரும். 

அப்ப எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தான் வந்துயிருக்க. 

ம் என்றபடியே. மதியம் என்ன சமையல். 

நூன் ஒருத்தன் தானே மெஸ்ல சாப்பிடலாம்னு பாத்தன். அதான் நீ வந்துட்டீயே நீ சமை. இன்னைக்கு உன் சமையலை தான் மாமன் சாப்பிடபோறன். 

என்னது. சும்மா சொன்னன்டா கோவிச்சிக்காத. 

சமைத்தபடியே பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, வீடு, நண்பர்கள் என பேசியபடி சமைத்தால். 

கத்தரிக்காய் காரக்குழம்பு நன்றாக சமைத்திருந்தாள். 

நல்லா சமைக்கறப்பா. 

இப்படியே சமைச்சி போட்டன்னு வச்சிக்க தொப்பை நிச்சயம் என்றதும். 

நிஜமா நல்லாயிருக்கா என வெட்கத்துடன் கேட்டாள். 

உண்மையாதான் நல்லாயிருக்கு என்றதும் அதிகமாக வெட்கப்பட்டாள். 

சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வந்தவள் நான் உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு எதிர் கட்டிலில் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். 

கவி என அழைத்ததும் பேசுவதை நிறுத்திவிட்டு என்னவென பார்த்தால். 
என்னோட தனியா இருக்கியே எம்மேல அவ்ளோ நம்பிக்கையா?. 

எல்லாரையும் விட உன்ன அதிகமாவே நம்பறன் என்றாள். 

தேங்க்ஸ். 

எதுக்கு. 

எம்மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கியே அதுக்கு. 

லூசு என பழிப்பு காட்டா. 

நீ தூங்கு என என் அருகில் இருந்த பொன்னியின் செல்வன் நாவலை எடுத்துக்கொண்டு படிக்க தொடங்கினால். ஆவளை பார்த்துக்கொண்டேயிருந்த நான் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை. 

மாம்ஸ் மாம்ஸ் என்ற குரல் கேட்டு எழுந்த போது கவிதா தான் அருகே நின்றிருந்தாள். 

யாரு. 

நான்தாம்பா எழுப்பனன். 

என்ன சொல்லி எழுப்பன. 

ச்சீ போ என்றவள் டைம்மாகிடுச்சி கிளம்பறன் என பேக்கை எடுத்துக்கொண்டு புன்னகைத்தபடியே ஓடினால்.

தொடரும்...............

தப்பை தப்பாக செய்யும் தனியார் பள்ளிகள்.



வருங்கால தலைமுறையை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் மோசமான தலைமுறையை உருவாக்க தொடங்கிவிட்டார்கள். பள்ளிகளில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு, பனிரென்டாம் வகுப்பு பொதுதேர்வுகளின் போது, படிக்காத சிலப்பல பிள்ளைகள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பிட் அடிப்பது இயல்பு. அதையும் தடுக்க பலப்பல ஸ்கோடு டீம் அமைக்கப்பட்டு பிட் அடிக்கும் மாணவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். தண்டிக்கப்படுகிறார்கள்.

இந்த பிடிப்பு என்பது அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதும் இடத்தில் மட்டும் தான் நடைபெறுகிறது. தனியார் பள்ளிகளில் இந்த பிடிப்பு நடைபெறுவதில்லை என்பது நீண்ட நாள் குற்றச்சாட்டு. தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் தேர்ச்சி பெற்று விடவேண்டும், அதுவும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால் 100 சதவிதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என விளம்பரப்படுத்தி அந்த ஆண்டு புதியதாக பள்ளியில் சேர வரும் பிள்ளைகளிடம் அதீத கட்டணம் வசூலிக்கலாம் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு பிட் தருகிறார்கள். புக் வைத்து எழுத அனுமதிக்கிறார்கள், சொல்லி தருகிறார்கள்.

சமீபத்தில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பலப்பல வி.ஐ.பிகளின் பிள்ளைகள் படிக்கும் திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளியில், தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு பிட் தந்து உதவ தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 7 பேர் பாக்கெட்டில் பிட் வைத்திருந்துள்ளனர். கலெக்டர் அமைத்த ஸ்பெஷல் டீம் அதை கண்டறிந்துள்ளது. அதோடு, பள்ளி அலுவலகத்தில் அன்றைய தேர்வுக்கான கேள்வி தாளில் இருந்த கேள்விக்கு பதில் எழுதி தேர்வு எழுதும் சில பிள்ளைகளுக்கு தர பள்ளியிலேயே ஜெராக்ஸ் எடுத்துள்ளார்கள் எவ்வளவு அயோக்கியத்தனம். இதனை தேர்வு மைய கண்காணிப்பாளர், தேர்வு அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை, சிறப்பு பறக்கும் படையினர் கண்டுக்கொள்ளக்கூடாது என்பதற்காக பணம், பொருள், மது விருந்து மூலம் சிறப்பாக கவனிக்கப்பட்டுள்ளன.

இப்படித்தான் தனியார் பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றன. கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடைபெறுவதை அவர்கள் கண்டும் காணாமல் இருந்துள்ளார்கள். அதற்கு காரணம், அங்கு அவர்களது பிள்ளைகள் படிக்கிறார்கள், அதற்கடுத்து பணம், அதற்கடுத்து அரசியல் தாதாக்கள் தான் தற்போது கல்வி நிலையத்தை நடத்துவதால் இயல்பான பயம். இதனால் எதையம் கண்டுக்கொள்வதில்லை இந்த ஆசிரியர்கள்.

இதனால் தான் பொது தேர்வு முடிவுகள் வெளிவரும்போது அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் 100 சதவிதம் தேர்ச்சி பெற்றுயிருக்கும். அதுபெற்ற வழி நன்றாக படிக்க கற்று தந்ததால் அல்ல. நன்றாக பிட் அடிக்க கற்று தந்தார்கள் என்பதாலே.

இப்படி பள்ளியில் பிட்டடித்து தேர்ச்சி பெற்று மேல் படிப்புக்கு மருத்துவம், இன்ஜினியரிங் என போகும்போது கல்லூரியில் டெக்னாலஜி வளர்ச்சியை பயன்படுத்தி ‘பிட்’ அடிக்க முயற்சி செய்கிறார்கள். அப்படித்தான் மக்களின் உயிர் காக்கும் மருத்துவம் படித்துவிட்டு உயர் படிப்பான எம்.எஸ், எம்.டி தேர்வு எழுதிய இளம் டாக்டர்கள் செல்போன் மூலம் பிட் அடித்து மாட்டியுள்ளார்கள்.

கல்வி என்பது ஒருமனிதனை ஒழுக்கமானவனாக, சமூகத்தில் சிறந்தவனாக, சிந்தனையாளனாக உருவாக்க வேண்டுமே தவிர அவனை மோசமானவனாக உருவாக்ககூடாது. இன்றயை தனியார் பள்ளிகள் அதைத்தான் செய்கின்றன. நான் கேட்கும் பணத்தை நன்கொடையாக, கட்டணமாக மாதாமாதம் தா அது போதும் உன் பிள்ளை தேர்ச்சி பெறுவான். அவன் எதை செய்தாலும் எங்களுக்கு கவலையில்லை எனச்சொல்லும் பள்ளி நிர்வாகங்கள் தான் அதிகமாக உள்ளன. பெற்றோர்களும் தனியார் பள்ளிகள் தான் சிறந்த பள்ளிகள் என அதில் போய் பணத்தை கட்டி தங்களது பிள்ளைகளை பாழும் கிணற்றில் தள்ளுகிறார்கள். உண்மையில் இந்த மாதிரியான தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகள். அங்கு படிப்பவன் தன் சுய முயற்சியால் படித்து தேர்ச்சி பெறுகிறான். மோசடி தனத்தில் ஈடுபடாத சிறந்த ஆசிரியர்கள் ஓரளவு அரசு பள்ளியில் உள்ளனர்.

அதனால் தனியார் பள்ளி மோகம் கண்டு ஓடாதீர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்க அரசு பள்ளியை நாடுங்கள். அவன் வாழ்க்கையில் போராட கற்றுக்கொள்வான். வாழ்க்கையை சிறப்பாக அமைக்க கற்றுக்கொள்வான்.

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

ஜெவின் சிறு பிள்ளை விளையாட்டு.


நீ அன்னைக்கு என் கூட விளையாட வரலயில்ல. அதல உனக்கு முட்டாய் தரமாட்டன் போ என ஐந்து வயது பிள்ளைகள் தெருவில் விளையாடும் போது தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும். ஆதற்கு தெரியாது இதெல்லாம் ஒரு விவகாரம் என்று ஏன் எனில் அவைகள் குழந்தைகள்.

குழந்தைகளை விட மோசமாக நடந்துக்கொள்கிறார் தமிழக முதல்வராகவுள்ள ஜெ. சட்டமன்ற வளாகத்தில் அனைத்து கட்சியினருக்கும் அறைகள் ஒதுக்கப்படும். ஆப்படித்தான் சட்டமன்ற எதிர்கட்சியான விஜயகாந்த் கட்சிக்கும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் கட்சிக்கு சட்டமன்றத்தில் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

விஜயகாந்த்க்கு ஒதுக்கப்பட்ட அறையின் அகலத்தை குறைத்து அதில் பாதியை காங்கிரஸ் கட்சிக்கான அறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு. விஜயகாந்த் சஸ்பென்ட் செய்யப்பட்டு சட்டசபைக்கு வராத 10 நாள் இடைவெளியில் அறை ‘குறுக்கல்’ பணியை செய்து முடித்துள்ளனர்.

ஆறை குறைப்பை தாமதமாக கண்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை கிளப்பியுள்ளனர். சபாநாயகர் ஜெயக்குமார், அறையை ஒதுக்குவது, மாற்றுவது என்பது சபாநாயகரோட தனிப்பட்ட உரிமை. அதை கேள்வி கேட்க கூடாது என தன் அதிகாரத்தை கூற, இதற்காகவே காத்திருந்த பணிவு புகழ் நிதியமைச்சர் ஒ.பி.எஸ், உங்களுக்கு என்ன சட்டமன்றம் பட்டாவா போட்டு தந்துயிருக்கு என கேட்டுள்ளார்.

சட்டமன்றமும், தலைமை செயலகமும் அதிமுகவுக்கு மட்டுமா பட்டா போட்டு தந்துள்ளது. அவையெல்லாம் மக்கள் சொத்து. மக்கள் வரிப்பணத்தில் தான் இந்த நாடே இயங்குகிறது என்பதை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்க்கு தெரியவாய்ப்பில்லை.

தேமுதிகவினர் பத்து பேர் கூட நிற்க முடியாத அறையாக எங்கள் கட்சி தலைவரும், எதிர்கட்சி தலைவரின் அறையை குறைத்துள்ளார்கள். இதனால் எங்கள் கட்சிக்கு தந்த அறையை எடுத்துக்கொள்ளுங்கள் என கடிதம் தந்துள்ளோம் என்றார் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏ சந்திரகுமார்.


தன்னை எதிர்த்து கேள்வி கேட்கிறாறே, மிரட்டுகிறாறே என்ற வெறுப்பில் எதிர்கட்சி தலைவரின் அறையின் அளவை குறைத்தும், சஸ்பென்ட் காலம் முடிந்தும் எதிர்கட்சி தலைவருக்கான காரை தராமல் வெறுப்பை காட்டியுள்ளார். இது ஓரு காரணம். இதில் உள்ள மற்றொரு விவகாரம், காங்கிரஸ் அரசுடன் ஜெ நெருங்கி செல்கிறார். 
 
மற்றொரு காரணம், விஸ்தாரமான அறைகளை ஒதுக்க முடியாத அளவுக்கு சட்டமன்றத்தில் இடநெருக்கடி. இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த ஜெ, தனியாக சட்டமன்றம் கட்ட முயன்றார். கல்வி நிலையத்துக்கான இடத்தில் அமைவதை அப்போதே பலர் எதிர்த்தனர். இதனால் அத்திட்டம் முடங்கியது. அடுத்து வந்த திமுக ஆட்சியில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டது. அது கட்டி முடிந்து திறப்பு விழா நடைபெற்று புதிய சட்டமன்றம் இயங்கியது.

எல்லா கட்சிகளுக்குமான டிஜிட்டல் முறையிலான, புதிய டெக்னாலஜிகள் அமைக்கப்பட்ட  அறைகள், பறந்த நெருக்கடியில்லாத சட்டசபை என இருந்தது. ஆனால் அதை பொறுத்துக்கொள்ள முடியாத தீய எண்ணம் கொண்ட ஜெ, நான் முதல்வரானால் என் கால் அடிக்கூட அதில்படாது என அறிவித்தார். அதன்படி சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதிய சட்டமன்றத்திற்க்கு போகாமல் பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றம், தலைமை செயலகத்தை மாற்றினார்.


பெரும் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், சட்டமன்ற வளாகத்தை மருத்துவமனையாக்க போகிறேன் என்றார் ஜெ. இதனை அப்போது நடுநிலை என காட்டிக்கொண்டவர்கள், அதிமுகவின் ஜால்ரா பத்திரிக்கைகள் புதிய சட்டமன்றம் சரியில்லை, ஊழல், மழை வந்தால் ஒழுகுது என ஒன்னுமேயில்லாத விவகாரத்தை ஊதி, ஊதி புகைகிளப்பின. இப்போது, சட்டமன்றத்தில் இடநெருக்கடியால் தவிக்கின்றனர். கட்சிகளுக்கு அறைகள் ஒதுக்ககூட முடியாமல் தவிக்கிறது. இதுதான் அதிமுக ஆட்சியின் அவலம்.

என்றுமே நியாயமாக யோசிக்கும் தன்மையில்லாதவராக ஆணவம், கர்வம், திமிர் கொண்டவராகவே ஜெ மிளிர்கிறார்.

அடுத்த ரப்பர் ஸ்டாம்ப் (ஜனாதிபதி) யார் ?.



இந்திய ஒன்றியத்தின் முதல் பெண் ஜனாதிபதியும், 12வது ஜனாதிபதியுமான பிரதீபாபட்டேலின் பதவிகாலம் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதி யார்?. அரசியல் வட்டாரத்திலும், அரசியல் நோக்கர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வி. இந்த தேர்தல் ஜனாதிபதியை மட்டும் தேர்வு செய்யப்போவதில்லை. 2014ல் நடக்கும் பாராளமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம். இந்த தேர்தலில் ஏற்படும் கூட்டணி பாராமன்ற தேர்தலுக்கான கூட்டணியாகவும் அமைய வாய்ப்புண்டு. அதனால் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

ஜனாதிபதியை தனித்து தேர்ந்தெடுக்கும் பலம் இந்திய ஒன்றியத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் கிடையாது. அதேநேரத்தில் முக்கிய எதிர்கட்சியான பி.ஜே.பிக்கும் கிடையாது அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடையாது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் ஒருவேளை ஜனாதிபதியை தேர்வு செய்யலாம். அதற்கும் வாய்ப்பு கிடையாது. காரணம் பி.ஜே.பி முன்னிறுத்தும் வேட்பாளரை கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

மாநிலத்தை ஆளும் கட்சிகளிடம் தான் உள்ளது ஜனாதிபதி யார் என்ற முடிவு. அதிலும் காங்கிரஸ், பிஜே.பி என்ற இரண்டு மத்திய கட்சியுடனுடன் கூட்டணியில் இல்லாத உத்தரபிரதேசம், தமிழகம் தான் ஜனாதிபதி தேர்வில் முக்கிய பங்காற்றும். அதற்கடுத்து மேற்குவங்க முதல்வராக உள்ள மம்தா எடுக்கும் முடிவும் ஜனாதிபதி தேர்தலில் எதிரொலிக்கும். இவர்கள் மூவரும் ஆளுக்கொரு திசை நோக்கி வருகின்றனர். இவர்களை ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தும் கட்சி வேட்பாளருக்கு வெற்றி நிச்சயம். ஆனால் அந்த கட்சி நிறுத்தும் வேட்பாளரை இவர்கள் விரும்ப வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு.

காரணம், ஜனாதிபதி என்பவர் ரப்பர் ஸ்டாம்பாக இருந்தாலும் தேர்தல் காலங்களில், தேர்தல் முடிவுக்கு பின் தொங்கு பாராளமன்றம் போன்றவை ஏற்பட்டால் ஜனாதிபதி விரும்பும் கட்சி ஆட்சியமைக்க அழைக்கலாம் இப்படி அவரை கொண்டு பலவற்றை சாதிக்கலாம் என்பதால் அப்பதியை அரசியல் கட்சிகள் விரும்பும். அதனாலயே அரசியல்வாதிகளையே அப்பதவிக்கு முன்னிறுத்தும். இதுவரை பதவியில் அமர்ந்துள்ள டாக்டர் இராஜேந்திரபிரசாத் முதல் தற்போதைய பிரதீபாபட்டேல் வரையிலான 12 ஜனாதிபதிகளில் ஜாகீர்உசேன், முகமது இதயதுல்லா, டாக்டர் அப்துல்கலாம் தவிர்த்து மற்ற அனைவரும் அரசியல்வாதிகளே.

ஜனாதிபதி பதவிக்கு இவர் போட்டியிடுகிறார், அவர் போட்டியிட போகிறார் என பட்டியல் வாசிக்கப்படுகிறது. ஆதில் தற்;போதைய துணை குடியரசு தலைவர் அமீத்ஹன்சாரி, இந்திய ஒன்றியத்தின் பிரதமர் டாக்டர்மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி, முன்னால் நாடாளமன்றவாதி நஜ்மா, பிரதமருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பிராண்டோ, நாடாளமன்ற சபாநாயகர் மீராகுமார், காந்தியின் பேரன் கிருஷ்ணகுமார் என பட்டியல் நீள்கிறது. இதில் பி.ஜே.பியில் யார் என்பதும், கம்யூனிஸ்ட்டுகள் யார் நிறுத்தப்போகிறார்கள் என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளன.

காங்கிரஸ் வேட்பாளராகட்டும், பி.ஜே.பி வேட்பாளராகட்டும், இடதுசாரிகள் அல்லது மாநில கட்சிகள் இணைந்து நிறுத்தும் வேட்பாளராகட்டும் யார் வேட்பாளரை நிறுத்தினாலும் அதற்கு பிறரின் வாக்குயிருந்தால் மட்டுமே தங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியும் என்றநிலை. ஒருவேளை மும்முனை போட்டி நிகழ்ந்தால் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார். இருமுனை போட்டியென்றால் இரண்டு கூட்டணியிலும் இல்லாத மாநில கட்சிகள் கைகளில் தான் உள்ளது அடுத்த குடியரசு தலைவர் யார் என்கிற லகான்.

குடியரசுத்தலைவர் தேர்வு நடைபெறும் போது ஒரு புதிய கூட்டணி உருவாகியிருக்கும். இந்த கூட்டணி தான் அடுத்து வரப்போகும் பாராளமன்ற தேர்தலிலும் தொடரும். ஆக இந்த குடியரசுத்தலைவர் தேர்தல் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க காத்திருக்கிறது. இந்த தேர்தல் மூலம், காங்கிரஸ் தனது இரண்டாவது பங்காளியான திமுகவை கழட்டி விடுமா என்பதே தமிழக களத்தில் பலரின் எதிர்பார்ப்பு. காரணம், காங்கிரஸ்சின் பார்வை ஆளும்கட்சியான அதிமுக பக்கம் அதிகமாகவே வீசுகிறது.

என்ன யோசித்தாலும் விடை தெரியல. அதாவது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் கட்சி இந்த ஜனாதிபதி தேர்தலின் போது அம்மா வாக்களிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பாரா ? எதிர்த்து வாக்களிப்பாரா?.

பிராமணீயத்துக்கு கூஜா தூக்கும் தமிழ் தேசியவாதிகள்.





தமிழ் தேசியவாதிகள் திராவிடம் என்பது மாயை இது எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை. திராவிடத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை. தமிழகத்தில் இருந்து திராவிடம் பேசுபவர்களை துரத்த வேண்டும் என குதிக்கிறார்கள். இவர்கள் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். 

சுதந்திரத்திற்க்கு முன்னால் இந்தியா ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு இருந்தபோது முதலில் நமக்கு விடுதலை தேவை, அது வெள்ளையனிடமிருந்துயில்லை. பார்ப்பனனிடம்மிருந்து தான் தேவை என மற்ற எல்லா சாதியினர் முடிவு செய்தனர். அதற்கு காரணம், மிக குறைவான பிரமாணர்கள் ஆங்கில அரசாங்கம், பத்திரிக்கை துறை என பலவற்றிலும் மொய்த்துக்கொண்டு மற்ற சாதியினரை ஏய்த்து வாழ்ந்தனர். இதனை எதிர்த்தே திராவிடர்கள் சங்கம் உருவானது. 

அதாவது வடமாநிலத்தில் இருந்து வந்த பிராமணர்கள் ஆரியர்கள், தென்னிந்தியாவை அதாவது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் திராவிடர்கள் என பிரிக்கப்பட்டனர். திராவிடர்கள் பிராமணர்களிடம் இருந்து விடுதலை வேண்டும் என தென்னிந்திய நலச்சங்கம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி அது ஜஸ்டீஸ் கட்சி,: திராவிடர் கழகம் வரை உருமாற்றம் பெற்றாலும் அவர்களின் ஒட்டுமொத்த நோக்கம் பார்ப்பனியத்தை எதிர்ப்பது. அனைத்து சாதியினரும் படிப்பது, வேலைக்கு போவது போன்றவைக்காக தான்.  

நாடு விடுதலையடைந்தும் திராவிட இயக்கங்களின் போராட்டம் பிராமணியத்துக்கு எதிர்ப்பாக தொடர்ந்தது. மொழிவாரி மாநிலங்களாக நாடு பிரியும் போது அதுவரை சென்னை மாகாணத்தோடு இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவை பிரிந்து தனி மாநிலங்களாயின. அம்மாநில தலைவர்கள் திராவிட கோஷத்தை மறந்து மாநில பற்றுதலோடு இயங்க தொடங்கினர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எல்லாமே திராவிட கொள்கைப்படியே நடந்தன. 

திராவிட இயக்க போராட்டங்களுக்கு பின் தான் தமிழகத்தில் பிராமணீயத்தின் எழுச்சி சுத்தமாக நொறுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சிக்காக திராவிட இயக்கங்கள் இயங்கின. திராவிடத்தை அடிக்கல்லாக கொண்டு கட்டப்பட்ட திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஒரே கல்வி முறை, சம போஜனம், கோயிலில் அனைத்து சாதியினரும் நுழையலாம், தமிழுக்கு முக்கியத்துவம் என சொல்லிக்கொண்டு போகலாம். அவைகள் சட்டமாக்கவும்பட்டன இதெல்லாம் திராவிடம் தந்தது. 

மக்களுக்காக உழைத்த திராவிட இயக்கங்களின் நூற்றாண்டு விழா தற்போது தொடங்கியுள்ளது. இதைத்தான் மீண்டும் கொச்சைப்படுத்த துவங்கியுள்ளனர் திராவிட கொள்கையை அழிக்க கடந்த 80 ஆண்டுகளாக போராடி வரும் பிராமணீயம். இவர்களோடு கைகோர்த்துக்கொண்டுள்ளார்கள் தமிழ்தேசியம் பேசுபவர்கள். 

தமிழகத்தில் ஆட்சியில் அமரும் தலைவர்கள் யாரும் தமிழர்களில்லை. கலைஞர் தெலுங்கர், ஜெ கன்னடர் என முத்திரை குத்துகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல வை.கோ தெலுங்கர் என்ற அடைப்புக்குறிக்குள் அடைக்கின்றனர். இவர்களால் தான் தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை. தமிழனின் கருத்துக்கள் பிரிதிபலிக்கவில்லை என வசனம் பேசுகிறார்கள். அதிலும் ஜெவை அதிகமாக அட்டாக் செய்வதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

மொழி வாயிலாக நாடு துண்டாடப்பட்ட பின் தந்தை பெரியாராகட்டும், அறிஞர் அண்ணாவகட்டும் அவர்கள் குறிப்பிட்டது நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள் என்றார்கள். திராவிடர்களுக்காக ஆரியக்கூட்டத்தோடு போராடுகிறோம். திராவிட குடும்பத்தில் மற்ற மொழி பேசும் தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ மோதுவதில்லை. தமிழகத்தில் மோதுகிறோம். காரணம், அவனோடு சமரசமானால் அவன் நம் உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு ஆட்டம் போடுவான் அதனாலே. 

திராவிட கொள்கையால் மக்கள் மேம்பாடு அடையவில்லை, அதன் தலைவர்கள் தான் மேம்பட்டார்கள் என்கிறார்கள். சாதிகள் ஒழியவில்லை என வியாக்கியானம் பேசுகிறார்கள். இந்தியாவில் எங்கு தான் சாதிகள் ஒழிந்துள்ளது. தமிழகத்தை விட மற்ற மாநிலங்கள் இன்னும் சாதியை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள். தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாரிகள் கூட சாதியை கொண்டு தான் அதிகாரம் செலுத்துகிறார்கள். புpற மாநிலங்களில் மக்களிடமும் சாதி வேரூன்றி போய்வுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இலைமறை காயாக சாதி பேசப்படுகிறது. ஆந்திராவில், கர்நாடகாவில் சாதியை தான் உயர்த்தி பிடிக்கிறார்கள். ஆட்சிக்கு வருகிறார்கள். அங்கு இன்னும் கீழ் சாதியினர் என அடையாளம் காட்டப்படுபவர்கள் மேலே வர முடியவில்லை. ஆனால் தமிழகம் அப்படியல்ல. இங்கு சாதி மோதல்கள், சாதி அடக்குமுறைகள் இருந்தாலும் அம்மக்களால் மேலே வரமுடிகிறது.

தமிழகத்தில் மட்டும் தான் ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் சாதி இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. சாதி பார்த்து பழகுவதில்லை, சாதி பார்த்து பேசுவதில்லை. சாதி பெயரில் அரசியல் கட்சி வைத்திருப்பவர்கள் கூட தங்களது பெயருக்கு பின்னால் சாதியை சேர்ப்பதில்லை. இது திராவிட கொள்கையை கொண்டு அரசியல் செய்வதால் தான் சாத்தியமானது. 

அடுத்து திராவிடம் பேசுவதால் தான், தமிழகத்தின் நீர் ஆதார பிரச்சனையான காவேரி, பாலாறு, முல்லை பிரச்சனைகளில் தமிழகத்தின் நலனை விட்டு தருகிறார்கள் காரணம் இவர்கள் தமிழர்களில்லை தமிழனாக இருந்தால் விட்டு தரமாட்டார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தண்ணீர் விடவில்லை என்பதற்காக என்ன செய்ய முடியும். பேசித்தான் தீர்க்க வேண்டுமே தவிர. அவர்களை அடித்து உதைத்து வாங்க முடியாது. 

அடுத்து இலங்கையில் வாழும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணம், திராவிட இயக்கம் தான் என்கிறார்கள். அதாவது திமுக. திராவிடம் பேசுபவர்கள் கையில் துப்பாக்கியை தூக்கி தந்து போய் சுட்டு விட்டு வா என்றார்களா என்ன?. ஈழத்தமிழர் பிரச்சனையை உலக அரங்கம் வரை கொன்டு சென்று முதன் முதலில் குரல் கொடுத்தது திமுக தான். ஈழத்தமிழர் பிரச்சனையை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்து மக்களிடம் ஆதரவு வட்டத்தை உருவாக்கி தந்தது திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் பேசியவர்களும் தான். ( அன்றைய அதிமுக, இன்றைய அதிமுக அதில் கிடையாது). ஐ.நா சபையில் ஈழத்தமிழுக்காக 1980களிலேயே திமுகவின் சார்பில் உரையாற்றப்பட்டது. 

ஈழப்பிரச்சனையில் எம்.ஜீ.அரை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் தமிழ் தேசியவாதிகள். ஈழப்போராட்டத்தை தன் சுயநலத்துக்காக பயன்படுத்தியவர், முல்லை பெரியாரை தான் பிறந்த கேரளா மாநிலத்துக்காக தமிழனின் உரிமையை தமிழக முதல்வராக இருந்தபோது விட்டு தந்தவர். அந்த எம்.ஜீ.ஆரை தூக்கி வைத்து கொண்டாடும் தமிழ் தேசியம் பேசுபவர்களே எம்.ஜீ.ஆர் என்ன தமிழரா?. அவர் மலையாள பிராமணர். 

அவரை மட்டும் ஏற்றுக்கொள்ளும் போது ஒன்று மட்டும் புரிகிறது. நீங்கள் திராவிடத்தை எதிர்க்கும் போர்வையில் பிராமணீயத்துக்கு கூஜா தூக்குகிறிறர்கள். தூக்கிக்கொள்ளுங்கள் அதற்காக திராவிட கொள்கையை கொச்சைப்படுத்தாதீர்கள். 

திங்கள், ஏப்ரல் 16, 2012

2300க்கு விற்ற மாத்திரை 73ரூபாய்க்கு. –மருத்துவ மோசடி.


உலகில் தற்போது புதிய புதிய நோய்கள் வருகின்றன. பன்றி காய்ச்சால், பறவை காய்ச்சலில் இருந்து புற்றுநோய் உட்பட பல நோய்கள் வருகின்றன. இப்படி நோய்கள் அதிகரிக்க காரணம், நமது உணவு முறை மாற்றம், உலகம் மாறுவதால் நமது வாழ்க்கை முறையும் மாற்றம்மடைகிறது அதனால் நோய்களும் அதிகமாகவே வருகின்றன.

நோய் என்னவோ ஏழை, பணக்காரன் என்ற பேதம்மில்லாமல் வருகிறது. ஆனால் சிகிச்சை என்பது வசதி படைத்;தவர்களால் மட்டும்மே பெற முடிகிறது. ஏழைகளால் அந்நோயோடு வாழ மட்டுமே முடிகிறது. சிகிச்சை பெற முடிவதில்லை. அதற்க்கு காரணம் பெரும்பாலான நோய்களுக்கான டெஸ்ட்டுகள், சிகிச்சைகள், மருந்துகள் உதாரணமாக, கர்ப்பணி பெண்களுக்கான மருந்துகள், குழந்தையில்லாத தம்பதிகளுக்கான மருந்துகள், சர்ஜரிக்கான உபகரணங்கள், மருந்துகளின் விலைகள் அதிகமோ அதிகம். இப்படி அதிக விலை வைத்து விற்பனை செய்து பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளை லாபம்மடைகின்றன.

இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததல்ல. பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறியும், பண கொள்முதலுமே மருந்துகளின் விலை உயர்வுக்கு காரணம். உதாரணத்துக்கு ஜெர்மனியை சேர்ந்த பன்னாட்டு மருந்து கம்பெனியான பேயர் நிறுவனம் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான மருந்தை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்தியாவில் 120 மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய். (ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 2366.70.) பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடைவிரித்து, குறைந்த விலையில் விற்க வேண்டிய மருந்துகளை கொள்ளை லாபத்திற்க்கு விற்கின்றன. இதில், ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். உயிர் வாழ தேவையான மருந்தை இப்படி விற்பதை கண்டு பல நாடுகளில் உள்ள சிறிய கம்பெனிகள் குறைந்த விலைக்கு மருந்தை தயாரித்து விற்பனை செய்ய அனுமதி கேட்டும் ஆசிய, ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஏழ்மையான நாடுகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி தருவதில்லை. இந்திய அரசும் அனுமதி தராமல் போக்கு காட்டுகின்றன. அதற்கு காரணமாக, காப்புரிமை சட்டத்தை காட்டுகின்ற இந்நாடுகள்.


மருந்து கம்பெனிகள் கண்டுபிடித்த மருந்துகளுக்கும், அவை தயாரிக்கும் மருந்துகளுக்கும் காப்புரிமை தரப்பட்டு வந்தன. இந்தியாவில் 1970ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, ஒரு கம்பெனி ஒரு மருந்தை கண்டறிந்தால் அதற்கு மட்டுமே காப்புரிமை. மற்றப்படி அந்த கம்பெனி தயாரிக்கும் மருந்துக்கெல்லாம் இந்தியாவில் காப்புரிமை தர முடியாது. அம்மருந்தை யார் வேண்டுமானாலும் தயாரித்து விற்கலாம் என காப்புரிமை சட்டத்தை மாற்றியமைத்தார். அதன்படி 1978ல் இந்தியாவில் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளின் விலையை இதுதான் நிர்ணயிருக்கும். 500க்கும் அதிகமான மருந்துகளின் விலையை கண்காணித்து வந்தது. இதனால் மருந்துகளின் விலை மிக குறைவாகவே இருந்தது. இதனை கண்ட உலக சுகாதார நிறுவனமும் இதை பிற நாடுகளும் செயல்படுத்தலாம் என்றன.

ஆனால் 1995க்கு பின் நிலை தலைகீழாக மாறியது. முதலாளித்துவத்தின் கைகளுக்கு உலகம் செல்ல தொடங்கிய பின் இந்த காப்புரிமை விதியை ஏற்றுக்கொள்ளாமல் உலக அரங்கில் பெரிய லாபியே செய்கின்றன மருந்து கம்பெனிகள். இதனால் இந்தியாவில் மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் நிறுவனமும் செயல்பட முடியாமல் தவிக்கிறது. முன்பு 500க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை நிர்ணயித்த இந்நிறுவனம் தற்போது 50க்கும் குறைவான மருந்துகளின் விலையை நிhணயித்து கண்காணிக்கிறது. இதனால் இந்தியாவில் பல மருந்துகளின் விலைகள் சமீப ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் இதே நிலை தான்.

இதனை கவனத்தில் கொண்ட உலக சுகாதார நிறுவனம் மற்றும் காப்புரிமை தரும் நிறுவனமும் இணைந்து 2001 ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்ற உலக வணிக அமைப்புகளின் மாநாட்டில், எந்த நாட்டிலாவது காப்புரிமை காரணமாக உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அதிக விலைக்கு விற்றால் அம்மருந்தை அறிவுசார் காப்புரீமை என்ற விதியின் கீழ் அந்த நாட்டின் மருந்து கம்பெனிகளே அந்த மருந்தை தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என்று முடிவுசெய்து அறிவித்தது.

ஆனால் பெரும்பாலான நாடுகளின் அரசுகள் அதை செயல்படுத்தவேயில்லை. சமீபத்தில் அதாவது ஒரு மாதத்திற்க்கு முன்பு, இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள நேட்கோ ஃபார்மா என்ற மருந்து தயாரிப்பு கம்பெனி கல்லீரல் புற்று நோய்க்கான மருந்தை விற்பனை செய்யும் உரிமையை பெற்றுள்ள ஜெர்மனி கம்பெனி விலையை விட 98 சதவிதம் குறைவாக அதே மருந்தை, அதே தரத்தில் அதே 120 மாத்திரையை வெறும் ருபாய் 8,800க்கு (1 மாத்திரையின் விலை 73.35) விற்பனை செய்ய போராடி அனுமதி பெற்றுள்ளது. இப்படி பல உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த மதிப்பில் விற்பனை செய்ய அனுமதி வழங்க முடியும். ஆனால் அதனை செய்ய இந்திய அதிகார மையம் முன்வருவதில்லை. காரணம் பணம் பணம்.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் அந்த அளவுக்கு பணத்தால் அதிகார தலைமைகளை குளிப்பாட்டுகின்றன. இதனால் அவர்களுக்கு ஏற்றாற்போல் செயல்படுகின்றனர். இதனால் உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல மருந்துகள் இப்போது விலை அதிகமாகி வருகின்றன. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் மோசடிகளை கண்டித்தும், இந்திய ஆளும் அரசியல்வாதிகளின் சுயநலத்தை கண்டித்தும், மருந்துகளின் விலையை குறைக்க வேண்டியும், காப்புரிமை பெற்று அதன் காலம் முடியும் தருவாயில் உள்ள மருந்துகளை இனி எல்லா கம்பெனிகளும் தயாரிக்கும் வகையில் கட்டாய தயாரிப்பு அனுமதி வழங்க வேண்டும் என கேட்கின்றனர். ஆனால் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு அதனை சட்டைசெய்ய மறுக்கிறது. அரசின் முடிவை கண்டித்து பல தன்னார்வ அமைப்புகள் போராடி வருகின்றன. நாமும் முடிந்த அளவுக்கு அவர்களோடு கைகோர்த்து போராடுவோம்.

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

இந்தியாவில் இராணுவ ஆட்சி சாத்தியமா ?. ஓர் எளிய அலசல்.


சில தினங்களாக இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் இராணுவம் ஆட்சியை பிடிக்க முயன்றதாமே என்ற பேச்சுதான் அதிகமாக பேசப்படுகிறது.

இராணுவ தளபதி வி.கே.சிங் – அரசின் மோதல் தான் இவ்வளவு சர்ச்சைக்கும் காரணம். 1951ல் தரைப்படை தளபதி சிங் பிறந்ததாக அவரது பள்ளி சான்றிதழ்களில் உள்ளன. ஆனால் அவர் இராணுவத்தில் சேரும்போது தரப்பட்ட விண்ணப்பத்தில் 1950 என்று குறிப்பிட்டுள்ளார். இது தான் சர்ச்சைக்கு காரணம். உச்சநீதிமன்றம் வரை இரண்டு தரப்புமே சென்றது. பின் திடீரென வழக்கு இரண்டு தரப்பின் ஒத்தொழைப்போடு முடிவுக்கு வந்தது. 1951ஐ கணக்கில் கொண்டு இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் ஓய்வு பெற மத்தியரசு கூறிவிட அதற்கு சம்மதித்துவிட்டார் சிங்.

இதன்பின் தான் சர்ச்சைகள் ஆரம்பமாகின. எனக்கு ஓய்வு பெற்ற கர்னல் ஒருவர் நேரடியாக என்னிடம் ஆயுத பேரத்துக்கு 14 கோடி லஞ்சம் தருவதாக ஒரு கம்பெனியின் சார்பாக பேசினார். இதனை இராணுவ அமைச்சரிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குண்டை வீசினார் சிங். அடுத்ததாக இராணுவம் போரை சந்திக்கும் நிலையில் இல்லை. வெடிமருந்து சுத்தமாக கையிருப்பில் இல்லை என அடுத்த குண்டை வீசினார். தொடர்ந்து, பிரதமருக்கு சிங் ரகசியமாக எழுதிய கடிதம் லீக்கானது. அது எப்படி என்ற விவாதம் எழுந்தது. ஒருவழியாக புலனாய்வு பிரிவுகள் விசாரிக்கும் என அரசு அறிவித்தது.


இந்த நிலையில் தான் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ஜனவரி 16ந்தேதி இரவு, டெல்லியை நோக்கி இராணுவத்தின் மிக முக்கிய பிரிவுகளை இரவு நேரத்தில் அமைச்சகத்துக்கு தகவல் தராமல் தளபதி சிங் நகர்த்தினார். இதனை மோப்பம் பிடித்த ஐ.பி, உடனடியாக அரசுக்கு எச்சரிக்கை மணியடித்தது. இராணுவ அமைச்சர் மூலம் பிரதமர்க்கு தகவல் தந்து, வெளிநாட்டு பயணத்தில் இருந்த இராணுவ செயலாளரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டு டெல்லியை நோக்கி வந்த படையை டிராப்பிக்ஜாம் ஏற்படுத்தி தாமதப்படுத்தி இராணுவ செயலாளர் மூலம் பட்டாலியன்களை திரும்ப அதன் இடத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டது. இது இராணுவம் ஆட்சியை பிடிக்க நடந்த செயல் என செய்தி வெளியாக இந்தியாவே பதட்டம்மடைந்தது.

புதட்டம், பேட்டி, நாடாளமன்றம் முடக்கம் எல்லாம் நடந்து வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம்மிருக்கட்டும். முதலில் நம் சட்டத்தை தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். நாடே முக்கியம். தனி மனிதன் முக்கியமல்ல என்பதாலும், பிற நாடுகளில் இராணுவம் ஆட்சியை பிடிப்பது போன்று நம் நாட்டில் எந்த காலத்திலும் நடக்ககூடாது என்பதால் இராணுவம், எல்லை பாதுகாப்புபடை, காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு ஏஜென்சிகளின் அதிகாரம் உட்பட பலவற்றை பரவலாக்கி ஒவ்வொருவருக்கும் சம்மந்தமில்லாமல் வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இராணுவத்தை எடுத்துக்கொள்வோம். இந்தியாவின் முப்படைகளுக்கும் தனித்தனி தலைமை தளபதிகள். தனித்தனி அதிகாரங்கள் இந்த மூன்று தளபதிகளும் போர் காலங்களை தவிர மற்ற நேரங்களில் ஒன்றிணைந்து பணியாற்ற முடியாது. அதோடு, இந்த தளபதிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை தவிர்த்து மற்றப்படி தன்னிச்சையாக எந்த ஒரு முடிவுகளும் எடுக்க முடியாது. இராணுவத்துக்கு என்று தனி அமைச்சர் உண்டு, தனி செயலாளர்கள் உண்டு. செயலாளர்களுக்கு ஆலோசனை தரும் ஆலோசகர்கள் உண்டு அவர்களின் உத்தரவு இருந்தால் மட்டுமே இராணுவ தளபதி செயல்பட முடியும். அதேபோல் ஆயுத கொள்முதலும் தலைமை தளபதி என்ற அந்தஸ்த்தை வைத்துக்கொண்டு ஆயுதம் வாங்கவோ, விற்கவோ முடியாது. அமைச்சர் மற்றும் அமைச்சரவை தான் ஆயுதங்களை வாங்கி தரும். அதற்கென தனி குழுவும் உண்டு.

அதோடு, முப்படைகளுக்கெல்லாம் தலைவர் ஜனாதிபதி மட்டுமே. மூன்று படை தளபதிகளுக்கும் உத்தரவு போடும் அதிகாரம் இந்தியாவில் அவரிடம் மட்டுமே உள்ளன. புpரதமரிடம் கூட அந்த அதிகாரம் கிடையாது. ஜனாதிபதி உத்தரவு இருந்தால் மட்டுமே போர் விமானங்கள் பறக்கும், கப்பல் படை கிளம்பும், பீரங்கி படை வெடிக்கும். இல்லையேல் எதுவும் நடக்காது. முப்படைக்கும் உத்தரவு போடும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் அமைச்சரவை மற்றும் பாராளமன்றத்திடம் உள்ளன. இவர்களை மீறி ஜனாதிபதியால் சிறு துரும்பை கூட கிள்ளி போட முடியாது. உதாரணத்துக்கு இந்தியாவின் முதல் குடிமகனும், மூப்படை தளபதிகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும், உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் அதிகாரமும், பாராளமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் கொண்ட ஜனாதிபதிக்கு கார் டிரைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட கிடையாது. கார் டிரைவர் முதல் செயலாளர் வரை பணியாளர்களை நியமிப்பது வரை மத்தியரசு தான். ஆக அவரின் அதிகாரமே கண்காணிக்கப்படுகிறது.

அதற்கடுத்த நிலையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை என உள்ள பலப்படை பிரிவுகளுக்கும் தனித்தனி இயக்குநர்கள். இவர்களுக்கு வரையறுக்கப்பட்ட தனித்தனி அதிகாரங்கள். இவர்களும் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாது. மத்தியரசின் உள்துறைக்கு கட்டுப்பட்டவர்கள். அதேபோல் இந்தியாவில் உள்ள பாதுகாப்பு சம்மந்தமான புலனாய்வு துறைகளில் இராணுவ புலனாய்வு அமைப்பு இராணுவ செயலாளருக்கு கட்டுப்பட்டது. ஐ.பி உள்துறைக்கு கட்டுப்பட்டது. ரா பிரதமர்க்கு கட்டுப்பட்டது. இந்த துறைகளுக்குள் வேறு யாரும் மாறி உள் சென்று உத்தரவுகள் போட முடியாது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதிகாரம் குவிந்திருந்தால் நினைத்ததை செய்ய முடியும். இந்தியா என்றோ இராணுவ ஆட்சி மையமாகியிருக்கும். இப்போது அல்ல எப்போதும்மே இந்தியா இராணுவ ஆட்சியாகாது.


காரணம், இராணுவத்தில் பலப்பல படைப்பிரிவுகள், வீரர்களாக பலப்பல மாநிலத்தை சாhந்தவர்கள் உண்டு. இவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பார்களே தவிர தனி மனிதருக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அப்படியே ஒன்றினைந்து இராணுவம் ஆட்சியை பிடிக்க வேண்டுமாயின் முதலில் முப்படை தளபதிகளும் ஒன்றிணைய வேண்டும். பின் தங்களது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு சாத்தியமேயில்லை. மூன்று தளபதிகள் அரசின் ஒப்புதல் இல்லாமல் நேரடியாகவே, மறைமுகமாக சந்தித்தாலே அவர்களது பதவி காலி, கைது செய்யப்படுவார்கள். ஆட்சியை பிடிக்க முயலும் தகவல் அரசு அறிந்து ஒரு தளபதியை இடை நீக்கம் செய்தால் அவரை அவரது அலுவலக சிப்பாய் கூட அதன்பின் உள்ளே அனுமதிக்கமாட்டார்.

அடுத்ததாக ஜனாதிபதியின் உத்தரவுயில்லாமல் ஒரு துப்பாக்கி கூட சுடாது. அப்படி ஏதாவது ஒரு ரெஜிமென்ட் நாட்டுக்குள் துப்பாக்கியை திருப்பினால் அந்த ரெஜிமென்டே ‘காணாமல்’ போய்விடும். அதிகாரங்கள் அப்படி பரவலாக்கப்பட்டுள்ளன.

செய்திகளில் குறிப்பிடுவது போல இராணுவ தளபதி படைகளை ஆட்சியை பிடிக்க டெல்லியை நோக்கி அனுப்பி இருந்தால் அது தற்கொலைக்கு சமம். உதாரணத்துக்கு பாராளமன்றத்தை முற்றுகையிட்டு பிரதமர் அமைச்சர்களை அவர் சிறைபிடிக்க முயல்கிறார் என வைத்துக்கொள்வோம். உடனடியாக ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பி படைகளை திரும்பி செல்லுமாறு கூறுவார்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையெனில், மற்ற தரைப்படை ரெஜிமென்ட்டுகளை கொண்டு முற்றுகையிட்ட ரெஜிமெண்ட்டை தாக்க உத்தரவு தருவார்கள். தரைப்படை முழுவதும் தளபதிக்கு கட்டுப்பட்டு அவர்கள் ஒன்றினைந்தால் கப்பற்படை மற்றும் விமானப்படை வீரர்களை களமிறக்கி தரைப்படை தளபதிகளை கைது செய்யவோ, சுட்டுக்கொல்லவோ ஜனாதிபதி உத்தரவிடலாம். இல்லை முப்படை தளபதிகளும் ஒன்றிணைந்துவிட்டார்கள் என்றால், நாட்டில் மத்தியரசின் கட்டுப்பாட்டில் உள்ள படைகளை கொண்டு இராணுவத்தோடு மோத வைப்பார்கள் இவ்வளவுக்கும் சாத்தியமும்முண்டு.

மற்றொன்றை தெளிவாக தெரிந்துக்கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்டதை போல ஆட்சியை பிடிக்க எந்த தளபதியாலும் முடியாது. மற்றொன்று, இராணுவத்துக்குள் அதிகார மோதல் உண்டு. அந்த மோதல் தான் இப்படி தளபதியை கொதிக்க வைத்துள்ளது. அதனால் இராணுவ ஆட்சியென்பது இந்தியாவில் சாத்தியமேயில்லை………………..