சனி, பிப்ரவரி 01, 2014

“சிலோன் முதல் ஈழம் வரை“ அறிமுகம்.

2008ல் ஈழத்தமிழர்கள் மீதான ஈர்ப்பில் “சிலோன் முதல் ஈழம் வரை“ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை தொகுத்தேன். 2009ல் போரின் உச்சத்தால் அதை அப்படியே மூடிவைத்துவிட்டேன். முள்ளிவாய்க்கால் போருக்குபின் 2012ல் தொகுப்பின் இறுதி பகுதியை முடித்திருந்தேன்.

புத்தகத்தின் உள் தலைப்புகள்..........

1.இலங்கை வரலாறு.
2.சுதந்திர தீவான இலங்கை.
3.மலையக மக்களின் வாழ்வும் துயரமும்.
4.இன கலவரம்.
5.ஆயுத குழுக்கள்.
6. விடுதலைப்புலிகள்.
7. இந்தியாவி (ல்) ன் காதல்!.
8. இராஜிவ் காந்தி கொலை!.
9. தமிழகத்தின் நிலை.
10. சண்டையும் சமாதானமும்.
11. தமீழிழம் நோக்கி . . . . .
12. தளபதிகள் - துரோகிகள்.
13. நான்காம் கட்ட ஈழப்போர் (முள்ளிக்கால்வாய் யுத்தம்).
14. உலக மக்களின் கண்களை திறந்த முத்துக்குமார்.
15. இனி………..

என்ற தலைப்புகளில் தொகுத்திருந்தேன். புத்தகமாக போட முயன்றபோது 2009க்கு பின் ஈழம், விடுதலைப்புலிகள், ஈழ போராட்டத்தில் தமிழக அரசியல் களம் பற்றி எண்ணற்ற புத்தகங்கள் வந்திருந்ததால் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன்.

தொகுத்தது பயனில்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக அதனை அப்படியே முகநூலிலும், மனசாட்சி என்ற வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்ய முடிவு செய்துள்ளேன். படித்துப்பாருங்கள்........... உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்............

2 கருத்துகள்: